Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ணித் துணிக கருமம் ! பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை #P2P

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணித் துணிக கருமம் ! #P2P
========================

 

கடந்த மூன்றாம் திகதி போலீசார், இலங்கையின் நீதித்துறையின் தள்ளுமுள்ளுடன் ஆரம்பித்த “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை #P2P பேரணி இன்று இறுதிநாளாக யாழ்ப்பாணத்தில் நிறைவுபெறவுள்ளது. இது ஆரம்பித்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் இதற்கான ஆதரவு பெருகியதுடன், வடக்குக் கிழக்கின் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி மலையகத் தலைவர்களும் கலந்து கொண்டதையும்  ஆதரவு வழங்கியதையும் காண முடிகிறது.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ் மொழிபேசும் அனைத்து சிறுபான்மை மக்களும் இணைந்து பயணிப்பதை அவதானிக்க முடிகிறது. இந்தப் போராட்டம் சிங்கள மக்கள் மற்றும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல நாடுகளின் பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த பேரணி, இலங்கை தனது சிங்கள பெளத்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தை தலைநகரில் நடாத்திய அதே காலப்பகுதியில் நடாத்தப்படுவது, இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தவர் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இல்லை என்ற செய்தியை முழு இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் சொல்லியுள்ளது.  

அரசு நாட்டின் சட்டம்-ஒழுங்கு, கொரோனா அரசியல், அரசு ஆதரவுக் குழுக்களைக் கொண்டு பேரணிக்கு எதிர்ப்பு  ஊர்வலம் என்று  என்று வேறு வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி இந்தப் பேரணியை நிறுத்துவதற்கு முயற்சி செய்தபோதும் அவை வெற்றியளிப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரசினாலும் அரசு ஆதரவுக் குழுக்களாலும் செய்ய முடியாததை இந்த போராட்டத்தில் ஈடுபடும் பல்வேறு தரப்பினரின் விசுவாசிகளும் வீட்டில் வசதியாக இருந்து கொண்டு வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்யும் இணையப் போராளிகளும் “நடுநிலை” ஊடகங்களும் செய்து முடித்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

இவ்வாறு எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மையா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, யார் இந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள் என்பது முதலில் கேட்கப்பட வேண்டிய கேள்வி. அதேபோல தனிப்பட்ட முறையில்  சில அரசியல்வாதிகளின் பங்களிப்புத் தொடர்பாக மிகைப்படுத்தலாக பதிவுகளை இடும் விசுவாசிகளும் கட்சி சார்ந்தவர்களும் தற்போது நடக்கும் போராட்டம் எதற்கானது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது தமது தலைவர்களின் பெருமைகளைப் பட்டியல் இடவும் நடைபெறும் பேரணியின் வெற்றியை ஓரிருவருக்கு மட்டும் உரியதாக காட்ட நீங்கள் முயற்சிப்பதும் நடைபெறும் பேரணியின் நோக்கத்தையே நாசம் பண்ணிவிடும்.

மேலும் இது யாருடைய முயற்சியில் தொடங்கப்பட்டது, யாரால் அதிக மக்கள் இணைந்து கொண்டார்கள் போன்ற விவாதங்கள் தேவையற்றவை மட்டுமல்ல அர்த்தமற்றவையும் கூட. வடக்குக் கிழக்கில் சிவில் சமூக அமைப்புகள் பலமாக இல்லையென்றும் அரசியல்வாதிகளின் உழைப்பே இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தது அதனால் அவர்களை முன்னுக்கு விடவேணும் என்றும் எழுதிய ஊடகமும், சிவில் சமூகமே இதனை ஒழுங்கு செய்தது அதனால் அவர்களே முன்னணியில் செல்லவேண்டும் என்று குரல் கொடுப்போரும் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களில் யார் தனியாக இதனை ஒழுங்கு செய்திருந்தாலும் இந்தளவுக்கு வெற்றி கிடைத்திருக்காது. இது ஒரு கொள்கை வெற்றி, குழு வெற்றி என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதேநேரம் இது பல வருடங்களுக்குப் பிறகு சிவில் சமூகமும் அரசியல் கட்சிகளும் இணைந்து வேறுபட்ட சமூகங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கும் போராட்டம். இதன்போது சிறு சிறு தவறுகள் வரத்தான் செய்யும். ஆனால் அந்தத் தவறுகளை மட்டும் பூதக் கண்ணாடி வைத்துப் பார்ப்பது மட்டுமன்றி பெரிதுபடுத்தியும்  நாம் பேசிக்கொண்டிருந்தால் இப்போது செய்யும் முயற்சி பூரண வெற்றியளிக்காது. அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் இதேபோல பல்வேறு அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து செயற்படக்கூடிய சூழ்நிலையையும் கடினமானதாக்கலாம்.

இன்று சில ஊடகங்களும் தனிநபர்களும் பெரிதுபடுத்தும் விடயங்களைப் புறந்தள்ளுவதுடன் போராட்டத்தின் இறுதிவரை அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று இரண்டு மாகாணங்களில் வாழும் ஒரே மொழி பேசும் மூன்று மதங்களைச் சேர்ந்த மக்களையும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அரசியல்வாதிகளையும் ஒருபுள்ளியில் இணைத்த இந்த முயற்சி அதன் இலக்கை அடைய அனைவரும் உழைப்பதுடன் எதிர்காலத்தில் சிங்கள பொதுமக்களுக்கும் எமது நியாயங்களை கட்டமைக்கப்பட்ட வகையில் தெரியப்படுத்தும் முயற்சிகளில் அதிகம் ஈடுபடவேண்டும். இதற்காக சிங்கள மக்கள் மத்தியில் இயங்கும் உண்மையான இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து வேலை செய்யவும் எமது பிரதேசத்தில் இயங்கும் சிவில் சமூக அமைப்புகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபடுதல் வேண்டும். 
 

இலங்கைக்குள் இந்தப் பேரணியை நீர்த்துப்போக வைக்க முயற்சிகள் நடப்பது ஒருபுறம் இருக்க, புலம்பெயர் தேசங்களில் இதற்கு ஆதரவாக கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோரும் இந்த நிகழ்வினைத் திசை திருப்பாத வகையில் தமது பங்களிப்பை வழங்க வேண்டும். இலங்கையில் நடைபெறும் பேரணியில் எந்த ஒரு கட்சியின் கொடியோ கட்சி அடையாளங்களோ பயன்படுத்தப்படாமையே சிவில் சமூகமும் மதத் தலைவர்களும் மக்களும் பெருமளவில் கலந்து கொண்டமைக்கு காரணம் என்பதே உண்மை. 

புலம்பெயர் தமிழர்களும் இதனைப் புரிந்துகொண்டு பொது அடையாளங்களையோ கறுப்புக் கொடிகளையோ மட்டும் பயன்படுத்துவார்கள் என்றால் தமிழர்கள் பெருமளவில் கலந்து கொள்வதுடன் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம் சகோதரர்களும் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. 

சிந்திப்போம் !
சரியான தெரிவுகளையும் கருவிகளையும் காட்சிப்படுத்தல்களையும் பயன்படுத்துவோம் !!
#P2P

-அக்கம்-பக்கம்-
 

https://www.facebook.com/101881847986243/posts/268535571320869/?d=n

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.