Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் களம் இறங்கும் சிறிரங்கா? சக்தி டிவி ஊடகவியலாளர் பின்னணியில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் களம் இறங்கும் சிறிரங்கா? சக்தி டிவி ஊடகவியலாளர் பின்னணியில்!

எதிர்வரும் மாகாண சபை தேர்தலை குறிவைத்து கிழக்கு மாகாணத்தில் ஊடகவிலாளர்களை இணைத்து களம் இறங்கவுள்ளார் மாகாராஜா நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊடகவியலாளர் சிறிரங்கா.

கடந்த ஜனவரி மாதம் 19ஆம் திகதி அம்பாறை ஊடக அமையத்தில் தமிழ் தந்தி பத்திரிகையின் கிழக்கு மாகாண பணிப்பாளரும், சக்தி தொலைக்காட்சியின் பிராந்திய செய்தியாளராக பணிபுரியும் உதயகாந் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் சிறிரங்கா இதனை தெரிவித்துள்ளார்.

சிறிரங்காவின் தேர்தல் அணிக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு கோரப்பட்ட போது அதற்கு சில அச்சு, இலத்திரனியல், தொலைக்காட்சி மற்றும் இணையத்தள ஊடகங்களில் பணிபுரியம் ஊடகவியலாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஒரு புறம் மாகாராஜா நிறுவனத்தில் இருந்து ஊடகவியலாளர் சிறிரங்காவை நீக்கியதாக கூறும் மாகாராஜா நிர்வாகிகள் மறு புறம் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஊடாக சிறிரங்காவுக்கு ஆதரவு வழங்குமாறு கோரியுள்ளனர்.

மாகாராஜா நிறுவனத்தில் இருந்து ஊடகவியலாளர் சிறிரங்கா நீக்கப்பட்டாலும் சிறிரங்கா மறைமுகமாக சக்தி தொலைக்காட்சியின் தமிழ் பிரிவை இயக்கிவருகிறாரா? என்ற கேள்வி அம்பாறையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதன் ஊடாக பக்கச்சார்பின்றி நடுநிலையாக நின்று மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவரும் ஊடகவியலாளர்களை தேர்தலில் நிறுத்தி ஊடகவிலாளர்களின் ஊடகதர்மத்தை சிதைப்பதற்கான சதி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

குறிப்பாக சக்தி டிவி ஊடகவியலாளர் உதயகாந் கிழக்கு மாகாணத்தில் உள்ள சக்தி டிவி ஊடகவியலாளர்கள் அனைவரும் சிறிரங்காவிற்கு உதவி செய்ய வேண்டும் இல்லை என்றால் மகாராஜா நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுவீர்கள் என அச்சுறுத்தி உள்ளார்.

இதேவேளை, 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது மாகாராஜா நிறுவனத்தில் பணியாற்றிய மட்டக்களப்பு மாவட்ட ஊடகவிலாளர்கள் சிலரை சிறிரங்கா சுயேட்சையாக கேடயம் சின்னத்தில் போட்டியிட வைத்து படுதோல்வி அடையச் செய்திருந்தார். இதில் முக்கியஸ்தராக செயற்பட்டவர் சக்தி டிவி ஊடகவியலாளர் உதயகாந், அவரே தற்போது மீண்டும் சிறிரங்காவுடன் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார். எதிர் வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை பிரிப்பதே இவர்களது நோக்கம் என தெரியவந்துள்ளது.

 

https://www.meenagam.com/கிழக்கில்-களம்-இறங்கும்/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.