Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குழந்தையைத் துன்புறுத்திய தாய் !?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையைத் துன்புறுத்திய தாய் !?
=============================

கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டதுடன் அதிகம் விமர்சனத்திற்கும் ஆளான ஒரு வீடியோ, ஒரு இளம் தாய் தனது ஏழு மாதக் குழந்தையை ஒரு தடியினால் தனது கோபம் தீரும் மட்டும் அடிக்கும் காட்சியே. அந்த வீடியோவில் அந்தப் பெண் தனது குழந்தையை அடித்து இழுத்துச் சென்று ஒரு அறைக்குள் வைத்து அங்கும் அடிக்கிறார். குழந்தை கதறி அழுகிறது. அந்தப் பெண்ணின் சகோதரன் என்று சொல்லப்படுபவர் இதனைக் கவனமாக வீடியோ எடுக்கிறார். நடு வீட்டில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல (கண் விழித்தபடி) படுத்திருக்கிறார்.

பிந்திக் கிடைத்த தரவுகளின்படி அந்தப் பெண்மணி மத்ஹ்டிய கிழக்கில் வேலை செய்த ஒரு இலங்கைப் பெண். இவரின் கணவன் இந்திய முஸ்லிம். பெண்ணும் குழந்தையும் அண்மையில் இலங்கைக்குத் திரும்பியுள்ளனர். அந்தப் பெண்ணின் கணவன் தற்போது மத்திய கிழக்கில் இருக்கிறார். மனைவி குழந்தையுடன் வேளாங்கண்ணித் தோட்டத்தில் ஒரு வீட்டில் வசிக்கிறார். சகோதரன் ஒருவரும் சகோதரியும் தாயும் உடன் வசிப்பதாகவும் தெரிகிறது.

உளவியல், மருத்துவ அறிவுள்ள சிலர் இது கர்ப்பத்தின் பின்னரான மனவழுத்தம் காரணமாக ஏற்பட்ட நிலையாக இருக்கலாம். ஆனால் முறையான பரிசோதனையின் பின்னரே தெளிவாகக் கூறமுடியும் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். அவரைக் குற்றவாளி என்று அடையாளப்படுத்தாது உதவி தேவைப்படும் ஒருவர் என்ற வகையில் அணுகவேண்டும். குழந்தைக்கும் பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். 

மேலும் இந்தப் பெண்ணை இடபெயர்வும் பெரிதும் பாதித்திருக்கலாம். கணவனும் உடன் இல்லாத நிலையில் 23 வயதில் குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் பொறுப்பும் இவருக்கு மனவழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். 

இது ஒருபுறம் இருக்க இந்த சம்பவம் தொடர்பாக எம்மவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது எமது தமிழ் மக்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. 

இந்த வீடியோவை எடுத்தவர் அந்தப் பெண்ணின் சகோதரர் என்று தெரிகிறது. குழந்தையை அடிக்காதே என்று அவர் ஒருமுறை கூடச் சொல்லவில்லை. அவருக்கு உண்மையில் குழந்தை மேல் அக்கறை இருந்தால் அடிப்பதைத் தடுத்திருக்க வேண்டும் அல்லது எடுத்த வீடியோ ஆதாரத்துடன் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை நேரடியாகவோ தனது நண்பர் ஒருவர் மூலமோ அணுகியிருக்கலாம். உண்மையில் இந்த அளவிற்கு வைரல் ஆக்கித்தான் அந்தக் குழந்தைக்குத் தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவர் தனது சகோதரியைத் தடுக்காது வீடியோ எடுப்பதில்தான் கவனமாக இருக்கிறார். பின்னர் அவர் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததன் நோக்கம் என்ன? 

அந்த சம்பவம் மணியம் தோட்டத்தில் நடைபெற்றதாக முதலில் பகிரப்பட்டது. உடனே ஒருவர் ஓடிவந்து அது மணியம் தோட்டம் இல்லை, இது இந்தியாவில் நடந்திருக்க வேண்டும் என்கிறார். இன்னொருவர் (இவர் புலம் பெயர் தேசத்தில் சமூக சேவையாளராக இருப்பதாக அவர் பக்கம் சொல்கிறது.) அந்தப் பெண்ணின் முக அமைப்பு யாழ்ப்பாணப் பெண்களில் முக அமைப்பில் இல்லை. இது நிச்சயமாக இந்தியாவில் நடந்தது என்று சொல்லித் திருப்திப்படுகிறார். இவர்கள் இருவரும் சொல்ல வருவது என்ன? “எனது கிராமத்தில் அல்லது எனது மாவட்டத்தில் அல்லது எனது நாட்டில் நடந்தால்தான் நான் கவலைப்பட வேண்டும். வேறு நாட்டில் நடந்தால் எனக்கென்ன?” என்ற மனநிலையை வெளிப்படுத்துகிறதா அல்லது இவர்கள், இது எனது சூழலில் நடைபெறவில்லை, அதுவே எனக்குப் போதும் என்று தம்மைத் தாமே ஆறுதல்படுத்திக் கொள்ள நினைக்கிறார்களா??

இந்த விடயம் தொடர்பாக செய்தி வெளியிட்ட ஒரு பத்திரிக்கை, குறித்த பெண்ணும் குடும்பத்தவரும் சேர்ந்து குவைத்தில் இருக்கும் கணவனிடம் பணம் பெறுவதற்காகவே இந்த இந்த வீடியோவைத் தயாரித்தார்கள் என்றும் அதனால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. போலீசார் கைது செய்து ஒருநாள் முடியும் முன்னரே விசாரணையும் செய்து தீர்ப்பும் வழங்கிவிட்ட இந்தப் பத்திரிக்கையின் சமூக அக்கறையையும் திறமையும் எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

இன்னும் ஒருவர் (அவர் ஒரு படித்த பட்டதாரியாம்) இந்தப் பெண்ணுக்கு கள்ளக் காதலன் இருக்கிறதாம் அதனால்தான் இப்படி நடக்கிறாராம். 
இன்னொருவர், அந்தப் பெண் தனது பாலியல் இச்சையைத் தீர்க்க முடியாத கோபத்தில் இப்படிச் செய்கிறார் என்று கண்டு பிடித்திருக்கிறார்.
வேறொருவர், இந்தப் பெண் ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்த பிசாசு என்றும் அதனால்தான் இப்படி நடக்கிறாராம்.
சாப்பாட்டுக்கு வழியில்லாதவர் எதற்காகப் பிள்ளையை பெற்றுக் கொண்டார் என்று இன்னொரு சமூக விஞ்ஞானி கேள்வி கேட்கிறார்.
நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே... குழந்தைக்கு இப்படி வெறித்தனமாக தாக்குபவர்கள் குரூரமானவர்கள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஒரு பெண்ணே தெரிவித்திருக்கிறார். 
இன்னொரு உளவியல் அறிஞர், இந்தப் பெண் இப்படி வீடியோ எடுத்துப் பிரபலமாவதை இந்தியாவில் கற்றுக் கொண்டாராம். இலங்கையில் அதை செய்ய முயற்சித்து மாட்டிக் கொண்டாராம். 
யாழ் வைத்திய சாலையில் வேலை செய்யும் ஆண் தாதி ஒருவர், இந்தப் பெண்ணுக்கு கட்டாயக் கருத்தடை செய்ய வேண்டும் என்ற உயரிய சமூக அக்கறையுள்ள கருத்தைத் தெரிவித்துள்ளார்.

வேறு பல Face book நீதிபதிகள் அந்தப் பெண்ணைத் தூக்கில் போடவேண்டும் என்று தீர்ப்பே எழுதி விட்டார்கள். 

 இவ்வாறன பதிவுகளிடையே பலர் சமூக அக்கறையோடு அறிவார்ந்த முறையில் தமது கருத்தை முன்வைத்த போதும், பெரிது உணர்ச்சிகளால் உந்தப்பட்டே இயங்கும் இந்த “சமூக விஞ்ஞானிகள்” எவருமே அவர்கள் சொல்ல வருவதைக் காதில் போட்டுக் கொள்வதாகவே தெரியவில்லை. அந்தப் பெண் தொடர்பான முழுமையான விபரம் வெளிவந்த பின்னரும் இவர்களின் போக்கில் எந்த மாற்றமும் வரவில்லை. 

குற்றம் சுமத்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை செய்கின்ற அதே நேரத்தில் மேலே நாம் குறிப்பிட்ட பொன்னான கருத்துகளை உதிர்த்த “அறிஞர்களுக்கும்” அவர்களின் நண்பர்களும் சுற்றமும் இணைந்து உதவி அவர்களுக்கும் உளவள சிகிச்சை வழங்குவார்கள் என்றால் நன்றாக இருக்கும். 

தமது பிரச்சனைகளிற்கு வடிகாலாக ஏதுமறியாப் பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்தும் முட்டாள்தனமான செயற்பாடுகள் எமது சமூகத்தில் இன்னமும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதேநேரம் கர்ப்பகால, கர்ப்பகாலத்தின் பின்னர் ஏற்படும் மனவுளைச்சல், மனவழுத்தம் என்பன பற்றியும் அதன் விளைவுகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பற்றி இப்போதெல்லாம் இலகுவாக இணையத்திலேயே வாசித்து அடிப்படை அறிவைப் பெற்றுக் கொள்ளமுடியும். 

இந்தத் தாயிற்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டும் தீர்வல்ல. சரியான உளவள நிபுணர்கள் மூலம் உளவள சிகிச்சை வழங்கப்பட வேண்டும். கணவர் மத்திய கிழக்கு நாட்டில் இருப்பவர் என்றால் அவர் இப்போது போதிய வருமானம் அற்ற சூழ்நிலையிலும் இருக்கக்கூடும். இதனைவிடவும் இவர் தனது குடும்பத்தில் நிலவும் ஏனைய பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இணையத்தில் வரும் சில தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு வாய்க்கு வந்தபடி கருத்து தெரிவிப்பதை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் எங்களை நாங்களே சுயதணிக்கை செய்யப் பழக வேண்டும். 

தற்போது உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் தலையிட்டு இருக்கும் நிலையில் தாய் மற்றும் குழந்தை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை சிறுவர் சீர்திருத்த நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தாயாரை சட்ட மருத்துவ வல்லுநர் முன்னிலையில் முற்படுத்தி மனநிலை மற்றும் பிற மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், குறித்த குழந்தையை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி, காயங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டார்.

எல்லாம் நல்லபடி நடக்கும் என்று நம்புவோம். முடிந்தால் அந்தக் குடும்பத்திற்கு தேவைப்படும் உதவிகளைச் செய்ய முயற்சிப்போம்.
 

 

https://www.facebook.com/101881847986243/posts/283295566511536/?d=n
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.