Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்மார்க் தமிழ் மக்களின் பணத்தை மோசடி செய்த தமிழ் சங்க நிர்வாகத்தினர் அம்பலப்படுத்தப்பட்டனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டென்மார்க்கில் கிறின்ஸ்ரட் என்ற நகரில் தமிழ் மக்களின் கலாச்சாரத்தை பேணுவதற்காக இயங்கிவந்த ஒரு அமைப்பை கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து நிர்வகித்தவர்களினால் மக்களின் பணம் கையாடப்பட்டமை சமூக நல விரும்பிகளினாலும் அந்த நகரத்தில் வசிக்கும் தமிழ் மக்களினாலும் கண்டுபிடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

கணக்கு விபரம் கேட்டவர்கள் மீது பணத்தை கையாடல் செய்தவர்கள் பல பயமுறுத்தல்களை விடுத்திருந்ததுடன் சிலர் மீது காவல்துறையில் பொய்யான வழக்குகளையும் தொடர்ந்துள்ளனர். இறுதியாக தம்மை யாரும் கணக்கு விபரம் கேட்டால் தாம் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்பவர்களை தற்போதைய ஐரோப்பிய தடையை பாவித்து காட்டிக்கொடுக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

குறிப்பிட்ட அமைப்பை நிர்வகித்தவர்கள் பொதுக்கூட்டங்களில் அங்கத்தவர்களுக்கு கணக்கறிக்கை ஒன்றை பார்வைக்கு வைத்துள்ளார்கள். ஆனால் வருடா வருடம் மக்களிடம் சேகரிக்கும் பணத்தில் ஒரு பகுதியை கணக்கறிக்கையில் காட்டாமல் இருந்திருக்கின்றார்கள். சில வருடங்களில் கையிருப்பு எதுவும் இல்லையெனவும் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

கையாடப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட பிணக்கால் நிர்வாகத்தில் இருந்த ஒருவர் தகவலை கசியவிட்டதும் மக்களினால் கேள்விகள் தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் நிர்வாகத்தினர் தமது பிழைக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். ஆனால் அதே நிர்வாகத்தினர் சங்கத்தை தொடர்ந்தும் நிர்வகிப்பதை நகர மக்கள் ஏற்றுக்கொள்ளாத போதும் பொதுக்கூட்டத்தை ஒரு சதி முறையில் நடத்தி மீண்டும் சங்கத்தை கைப்பற்றிக்கொண்டனர்.

பொதுக்கூட்டம் நடைமுறைக்கு மாறாக சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெற்றதுடன் கூட்டத்திற்கு பணம் கையாடியவர்களும் அவர்களுக்கு துணைபோனவர்களும் வழமைக்கு மாறாக தமது மனைவிகளுடன் சமூகமளித்திருந்தனர். தாம் பணத்தை கையாடவில்லை எனவும், ஒரு பெரிய தொகை பணம் சேர்ந்ததும் மக்களுக்கு அறிவித்தல் தர தாம் தயாராக இருந்ததாகவும், விடயம் வெளியில் தெரிந்தால் மக்கள் தாம் பணம் சேகரிக்கும் பொழுது பங்களிப்பு செய்யமாட்டார்கள் அதனாற்தான் தாம் பொதுக்கூட்டங்கிளில் பொய்யான கணக்கை காட்டியதாகவும் கூறியதுடன் தாம் பிழை செய்யவில்லையென (தமக்கு சார்பாக தாம் கூட்டியந்தவரகள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில்) ஒரு வாக்களிப்பு நடத்த வேண்டும் என வாதிட்டனர்.

ஆனால் வாக்களிப்பு தேவையில்லையென முடிவு எடுக்கப்பட்டதும், பணத்தை கையாடல் செய்த நிர்வாகம் தமது குடும்ப அங்கத்தவர்களின் ஆதரவுடன் மீண்டும் சங்க நிர்வாகத்தை கைப்பற்றிக்கொண்டது

இந்த நிர்வாகத்தினர் தாயகத்தில் அகதிகளுக்கு உதவுவதாகவும் ஆழிப்பேரலை ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகவும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் நாடுகளில் தமது சொந்த நலன்களுக்காக கோவில் கட்டி பணம் சேர்ப்பவர்களும் சங்கம் நடத்துபவர்களும் அதிகரிக்கும் நிலையில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

மேற்குறிப்பிட்ட விடயம் நெருப்பிற்கு பல ஒலிப்பதிவுகள் புகைப்படங்கள் வேறு ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றதுடன் மோசடியில் ஈடுபட்டவர்களின் பெயர்களும் கிடைக்கப்பட்டுள்ளன. புகைப்படங்கள் பெயர்களை தற்காலிகமாக நெருப்பு தவிர்த்துள்ளது.

http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.