Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்து பாதுகாத்து வைக்கும் அதிகாரம் மிஷேல் பாசிலெட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்து பாதுகாத்து வைக்கும் அதிகாரம்  மிஷேல் பாசிலெட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது

 
1-191-696x392.jpg
 50 Views

இலங்கையில் நடந்ததாகக் குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கவும் பாதுகாத்து வைக்கவும் ஐநா மனித உரிமைகள் சபையில் தலைவர் மிஷேல் பாசிலெட்டுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடையே 26 ஆண்டுகள் நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போரில் 80 ஆயிரம் பேர் முதல் ஒரு இலட்சம் பேர் வரை உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் மன்றம் கருதுகிறது.

ஐநா மனித உரிமை மன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசு “பொறுப்புக்கூற வைக்கப்படுவதற்குத் தடையாக” இருப்பதாகவும் ஐ.நா  குற்றம்சாட்டி உள்ளது.

ஆனால் இந்தத் தீர்மானம் ‘எந்த வகையிலும் உதவிகரமானதாக இல்லை’ என்றும் ‘பிரிவினையைத் தூண்டும்’ வகையிலும் இருப்பதாகவும் இலங்கை அரசு கூறுகிறது.

UN High Commissioner for Human Rights Bachelet, has slammed Sri Lanka's government for reneging on promises to deliver justice to war victims [File: Denis Balibouse/Reuters]

இந்நிலையில், பிபிசி செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த ஐநா மனித உரிமைகள் சபையில் தலைவர் மிஷேல் பாசிலெட், “இலங்கையில் மனித உரிமைகள் கண்காணிக்கப்படுவது மற்றும் கடந்த காலங்களில் நடந்த குற்றங்களுக்கான பொறுப்பேற்க வேண்டியதை வலியுறுத்துவது ஆகியவற்றைத் தொடர ஐநா மனித உரிமைகள்  சபையில் எடுத்துள்ள முடிவை நான் வரவேற்கிறேன்.

உண்மை மற்றும் நீதிக்கான தங்கள் பயணத்தில் துணிச்சலுடனும் உறுதியாகவும் இருந்த இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்,” என்று  தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு தற்போதைய கொள்கைகளிலிருந்து பாதை மாறி, சிறுபான்மையினர், மனித உரிமைகள், பாதுகாவலர்கள் மற்றும் ஊடகம் ஆகியவற்றுக்கான முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும் என்று நான் நம்புகின்றேன்” என்று கூறியுள்ளார்.

https://www.ilakku.org/?p=45373

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான ஐ.நா. ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவிப்பு

30 வருடகாலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது- சர்வதேச மன்னிப்புச் சபை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் 30 வருடகாலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிய தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு  இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் அந்தச் சபை வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, அதிலிருந்து தவறும் பட்சத்தில் மனித உரிமைகள் பேரவையினால் சுயாதீனமான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று நிறுவப்படக்கூடும் என்றும் அந்தச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 46/1 தீர்மானம் நேற்று முன்தினம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் மிக முக்கியமான முன்நகர்வு என தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் இந்தத் தீர்மானத்தின் ஊடாக சர்வதேசத்தின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவதாகவுவும் அந்தச் சபை தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி, நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுவதற்கான ஆதாரங்களை ஐ. நா. மனித உரிமைகள் அலுவலகம் திரட்டுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த காலத்தில் இடம்பெற்ற மற்றும் தற்போது இடம்பெறும் மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்ந்தும் தண்டனைகளில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என்ற சமிக்ஞை இந்தத் தீர்மானத்தின் ஊடாக தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என அந்தச் சபை வலியுறுத்தியுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் ஊடாக இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கண்காணிக்கப்படுவதுடன், கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களும் திரட்டப்படும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2021/1204596

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.