Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா வழங்கிய 6 லட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனா வழங்கிய 6 லட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது.

00e5b8c41b4e0b310cffe246c3b2592a745b783e
 11 Views

சீனா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய 6 லட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன. 

இந்த தடுப்பூசி, முதல்கட்டமாக இலங்கையில் வசிக்கும் சீன குடிமக்களுக்குத்தான் வழங்கப்படும் என்று  தொற்றுநோய்ப் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் பல ஆயிரக்கணக்கான சீனர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபாக்ச பெற்றுக் கொண்டார்.

உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து இந்த கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தப் பிறகே, இது இலங்கை குடிமக்களுக்கு போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=46065

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனா வழங்கிய தடுப்பூசியை பயன்படுத்துவதில் சிக்கல் – மருத்துவ நிபுணர்கள்  

 
1-2.jpg
 11 Views

சினோபார்ம் தடுப்பூசிகள் சீனாவில்  இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அதனை இலங்கைக்கான சீனாவின் தூதுவர்   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று அதிகாரப்பூர்வமாக கைளித்தார்.

இந்நிலையில், சீனா வழங்கிய கொரோனாவைரஸ் தடுப்பூசியை இலங்கைமக்களிற்கு வழங்க கூடாது என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவிததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 600,000 கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவது குறித்து அரச மற்றும் தனியார்துறையை சேர்ந்த சிரேஸ்ட மருத்துவ நிபுணர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சீனாவின் தடுப்பூசி குறித்தும் அதற்கு அவசர அனுமதியை வழங்கலாமா என்பது குறித்தும் ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவை நியமித்தது என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் அந்த குழு சீனாவின் தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் போன்றவை குறித்து உறுதி செய்வதற்கான போதுமான தரவுகள் இல்லை என தெரிவித்துள்ளது என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் சீனாவின் தடுப்பூசியை தற்போதைய சூழ்நிலையில் பயன்படுத்தகூடாது என தீர்மானிக்கப்பட்டது என்றும்  கூறப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார கொள்கைகள் குறித்த நிறுவகத்தின் இயக்குநர் வைத்தியர் ரவீந்திர ரன எலிய சீனாவின் தடுப்பூசி போதுமான தகவல்களை கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில், உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 568ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=46095

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.