Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேலிய மென்பொருளை பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் குறிவைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய மென்பொருளை பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் குறிவைப்பு

இஸ்ரேலிய கண்காணிப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ குழுமத்தால் விற்கப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நிருபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வணிக நிர்வாகிகள் மற்றும் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் வருங்கால மனைவி ஆகியோருக்கு சொந்தமான டஜன் கணக்கான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை ஹேக் செய்ய தனியார் இஸ்ரேலிய உளவு மென்பொருளான 'பெகாசஸ் ஸ்பைவேர்' பயன்படுத்தப்பட்டது என்று வொஷிங்டன் போஸ்ட் மற்றும் 16 பிற செய்தி நிறுவனங்கள் நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அறிக்கைகளை என்.எஸ்.ஓ. குழுமம் மறுத்துள்ளதுடன், இது தொடர்பான அனைத்து நம்பகமான உரிமைகோரல்களையும் தொடர்ந்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளது.

பெகாசஸ் ஸ்பைவேர் என்பது ஓர் இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ. குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுத்தப்படும் உளவு மென்பொருளாகும்.
 

https://www.virakesari.lk/article/109644

  • கருத்துக்கள உறவுகள்

பெகாசஸ் ஸ்பைவேர்: இந்திய பத்திரிகையாளர்கள், அமைச்சர்களின் செல்போன் ஒட்டு கேட்பு

19 ஜூலை 2021, 02:10 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
பெகாசஸ் ஸ்பைவேர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேலின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் 'தி வயர்', பிரிட்டனின் 'தி கார்டியன்', அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' உள்பட பல சர்வதேச ஊடகங்களில் இந்தப் புலனாய்வுச் செய்தி இந்திய நேரப்படி நேற்று (ஞாயிறு) இரவு 10 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்பைவேர் என்பது ஒருவருக்குத் தெரியாமல் அவரை வேவு பார்க்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் ஆகும்.

ஆனால், 'அடையாளம் வெளியிடப்படாத' வட்டாரங்கள் அளித்துள்ள இந்தத் தரவுகள் உண்மையில் இருந்து வெகுதூரம் உள்ளது என்கிறது பெகாஸஸ் மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ.

 

பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உருவாக்கிய என்எஸ்ஓ எனும் இஸ்ரேலிய நிறுவனத்தால் உலகெங்கிலும் கண்காணிப்புக்கு உட்பட்டதாகக் கருதப்படும் 50,000 தொலைபேசி எண்களின் பட்டியல் கசிந்துள்ளது. இந்த பட்டியல் குறித்து பிரான்ஸைச் சேர்ந்த லாபநோக்கற்ற ஊடக நிறுவனமான `ஃபார்பிட்டன் ஸ்டோரிஸ்` புலனாய்வு செய்து செய்தியை வெளியிட்டது.

உலகெங்கிலும் உள்ள சமூக உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் செல்போன் இஸ்ரேலின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு, அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் உட்பட பலர் அடங்கியுள்ளனர் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

21 நாடுகளைச் சேர்ந்த 200 பத்திரிகையாளர்கள் கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளனர்.

பெகாசஸ் ஸ்பைவேர் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களைக் கண்காணித்து, அதில் இருக்கும் மேசேஜ்கள், மின்னஞ்சல்கள், தொலைப்பேசி அழைப்புகள் ஆகியவற்றை உளவு பார்த்து ஒட்டு கேட்கிறது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான மொபைலின் மைக்ரோபோன்களையும் இதனால் ரகசியமாக இயக்க முடியும் என்கிறது ஃபார்பிட்டன் ஸ்டோரிஸ்.

என்எஸ்ஓ அளிக்கும் பதில் என்ன?

இந்த பட்டியல் எங்கிருந்து வெளியானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தங்கள் நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

இந்தத் தரவுகள் எங்கள் நிறுவனத்தின் 'சர்வர்களில்' இருந்து கசிந்தது என்பதே நகைப்புக்குரியது. ஏனெனில் இந்தத் தரவுகள் எங்கள் கணினிகளின் சர்வகளில் சேமித்து வைக்கப்படவே இல்லை என்கிறது என்எஸ்ஓ.

பெகாசஸ் ஸ்பைவேர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெகாசஸ் மென்பொருள் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இது நல்ல மனித உரிமை பதிவுகளைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவம், சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் என்எஸ்ஓ கூறியுள்ளது.

ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ் வெளியிட்டுள்ள செய்திகள் முற்றிலும் தவறான அனுமானங்கள் மற்றும் உண்மையுடன் பொருந்தாத கோட்பாடுகளுடனும் உள்ளன. அவர்களுக்கு தகவல் வழங்கியவர்களின் நம்பகத்தன்மை மற்றும் நோக்கம் குறித்து ஐயங்கள் எழுகின்றன.

இந்தச் செய்தியில் உள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம். அவதூறு வழக்கு தொடர்வது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம் என்கிறது என்எஸ்ஓ.

குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் குழுக்களை கண்டுபிடிக்கவும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களைக் கண்டுபிடிக்கவும், காணாமல் போன மற்றும் கடத்தப்படும் குழந்தைகளைக் கண்டுபிடிக்கவும், இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களைக் கண்டுபிடிக்கவும், ட்ரோன்களிடம் இருந்து வான் பரப்புகளைப் பாதுகாக்கவும் எங்கள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்றும் என்எஸ்ஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேவு பார்க்கப்பட்ட்ட இந்தியர்கள் யார்?

இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோதியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக 'தி வயர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, நெட்வர்க் 18, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற செய்தி நிறுவனங்களின் பணியாற்றும் முன்னணி பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டதாக தி வயர் கூறுகிறது.

பெகாசஸ் ஸ்பைவேர்:

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுதவிர ஏஃப்பி, சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ், அல் ஜசீரா உள்ளிட்ட பல சர்வதேச செய்தி நிறுவனங்களின் பணியாற்றும் செய்தியாளர்களின் செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.

``உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆதரவாளர்கள் இந்த கண்காணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர், உலகம் முழுவதும் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை இது காட்டுகிறது" என்று ஃபார்பிட்டன் ஸ்டோரிஸின் நிறுவனர் லாரன் ரிச்சர்ட், பிபிசியின் ஷாஷாங்க் சவுகானிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார்.

கண்காணிப்புக்கு உள்ளானவர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பெகாசஸ் மூலம் 1,400 மொபைல் போன்களில் சைபர் தாக்குதல் நடத்தியதாகக் கடந்த 2019-ம் ஆண்டு என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக வாட்ஸ்ஆப் வழக்கு தொடர்ந்தது.

அந்த நேரத்தில், என்எஸ்ஓ எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்தது, ஆனால் அந்த நிறுவனம் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பெகாசஸ் ஸ்பைவேர்: இந்திய ஜனநாயகத்தை ஆட்டம் காண வைக்கும் உளவுப் பிரச்னையா?

  • செளதிக் பிஸ்வாஸ்
  • பிபிசி இந்தியா
7 மணி நேரங்களுக்கு முன்னர்
ஸ்மார்ட்ஃபோன்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நீங்கள் வேவு பார்க்கப்படுவதாக உணர்ந்தால், அதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்" என்கிறார் 'தி வொயர்' செய்தி வலைதளத்தின் நிறுவனர் சித்தார்த் வரதராஜன்.

"இது ஒரு மிகப் பெரிய ஊடுருவல்" என்கிறார் அவர். "யாரும் இதை எதிர்கொள்ளத் தேவை இல்லை"

ஒரு இஸ்ரேலிய நிறுவனத்தால் அரசாங்கங்களுக்கு விற்கப்பட்ட செல்ஃபோன் ஸ்பைவேரால் உலகம் முழுக்க உள்ள பல செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் சித்தார்த் வரதராஜனும் ஒருவர் என்கிறது ஊடக செய்திகள்.

கண்காணிக்கப்படுவதாகக் கூறப்படும் தரவு தளத்திலிருந்து கசிந்த 50,000 எண்களில் 300 எண்கள் இந்தியர்களுடையது என்கிறது தி வொயர் செய்திகள்.

 

பெகாசஸ் ஸ்பைவேர் குறித்து புலனாய்வு செய்து செய்தி வெளியிட்ட 16 சர்வதேச ஊடகங்களில் தி வொயர் நிறுவனமும் ஒன்று.

ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்துவோரின் கவனத்துக்கே வராமல் பெகாசஸ் ஸ்பைவர் ஸ்மார்ட்ஃபோன்களை பாதிப்பது மற்றும் அதிலிருக்கும் மொத்த தரவுகளைப் பெறுவது போன்ற நடவடிக்கைகள் இது ஒன்றும் முதல்முறை அல்ல.

இந்த பெகாசஸ் ஸ்பைவேரை இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ குரூப் என்கிற மென்பொருள் நிறுவனம் தயாரித்தது. இது பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை இலக்கு வைக்கிறது.

பெகாசஸ் ஸ்பைவேர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாட்ஸ்ஆப் நிறுவனம், தங்களின் சில வாடிக்கையாளர்கள் ஸ்பைவேரால் இலக்கு வைக்கப்பட்டு இருப்பதாக கடந்த 2019ஆம் ஆண்டு கூறிய போது, இந்தியா உட்பட பல நாடுகளில் கண்டனக் குரல்கள் எழுந்தன. 121 பத்திரிகையாளர்கள், அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டனர்.

இதில் இந்திய உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கும் பங்கு உண்டு என நிபுணர்கள் கூறினர்.

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் 1,400 செல்ஃபோன்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக வாட்ஸ்ஆப் நிறுவனம், என்.எஸ்.ஓ குழு மீது குற்றஞ்சாட்டி வழக்கு தொடுத்து இருக்கிறது.

பெகாசஸ் மூலம் கண்காணிக்கபடுவதாகக் கூறப்படும் செல்ஃபோன் எண்களின் பட்டியல் எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. அதே போல யார் சைபர் ஊடுருவலை நடத்த அனுமதி கொடுத்தார்கள், எத்தனை செல்ஃபோன்கள் உண்மையில் ஊடுருவப்பட்டு இருக்கின்றன என்கிற விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டை போலவே, தற்போதும் என்.எஸ்.ஓ குழு தாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை எனவும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை எனவும் கூறுகிறது.

"பெகாசஸ் ஸ்பைவேரை தவறாகப் பயன்படுத்தியதாக வரும் நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகளை விசாரித்து அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம்" என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அதே போல நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசும், எந்த வித அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என கூறியுள்ளது.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

பட மூலாதாரம்,SONDEEP SHANKAR/GETTY IMAGES

மாநில மற்றும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உச்ச பதவியில் இருக்கும் அதிகாரிகளின் அனுமதியோடு, இந்தியாவின் இறையாண்மை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காக இந்தியாவில் ஒருவரின் செல்ஃபோனை ஒட்டு கேட்கலாம்.

"ஆனால் அதற்கு ஒப்புதல் அளிக்கும் செயல்முறை எப்போதும் வெளிப்படையாக இல்லை" என்கிறார் டெல்லியில் இருக்கும் அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமைப்பின் உறுப்பினர் மனோஜ் ஜோஷி.

கடந்த 2019ஆம் ஆண்டு, பெகாசஸ் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் கேரளத்தைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் கே கே ராஜேஷ் அரசிடம் பல கேள்விகளை குறிப்பிட்டு எழுப்பினார்.

பெகாசஸ் ஸ்பைவேர் இந்தியாவுக்கு எப்படி வந்தது? ஏன் அரசை எதிர்த்து போராடும் மக்கள் இலக்கு வைக்கப்பட்டனர்? இந்தியாவில் இருக்கும் அரசியல் தலைவர்களை வேவு பார்க்க கொண்டு வரப்பட்ட மென்பொருளில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை எப்படி நம்ப முடியும்? என பல கேள்விகளை எழுப்பி இருந்தார்.

என்.எஸ்.ஓ குழுவோ, தங்களின் மென்பொருளை, மக்களின் உயிரைக் காக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், தீவிரவாத செயல்கள் நடக்காமல் தடுக்கவுமே அரசாங்கத்தின் உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே விற்பதாக கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒட்டுக்கேட்பது & வேவுபார்ப்பது

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் அதிகாரபூர்வமாக 10 அரசு முகமைகளுக்கு அழைப்பை ஒட்டுக் கேட்கும் அதிகாரம் உள்ளது. அதில் மிகவும் வலிமையான அமைப்பு என்றால் அது கடந்த 134 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஐபி எனப்படும் இன்டலிஜென்ஸ் பீரோ என்கிற உள்நாட்டு புலனாய்வு அமைப்புதான். இந்த அமைப்பு இந்தியாவிலேயே மிகப் பெரிய மற்றும் வலிமை வாய்ந்தது. இதற்கு பல்வேறு அதிகாரங்கள் இருக்கின்றன.

இந்த அமைப்பு தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து மட்டும் கண்காணிக்காமல், நீதிபதிகள் போன்ற அரசின் உயர் பதவிகளுக்கு வருவிருப்பவர்களின் பின்புலங்களையும் பரிசோதிக்கிறது என ஒரு நிபுணர் கூறினார்.

இந்திய ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் கட்சி பாகுபாடின்றி தங்களின் எதிரணியில் இருப்பவர்கள் மற்றும் தங்கள் சொந்த கட்சியினரை இந்த உளவுத் துறை முகமைகளைப் பயன்படுத்தி வேவு பார்த்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு.

கடந்த 1988ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெகடே தன் எதிரணியில் இருப்பவர்கள் மற்றும் சொந்தக் கட்சிக்காரர்கள் என 50 பேரை ஒட்டுக்கேட்க உத்தரவிட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பதவி விலகினார்.

1990ஆம் ஆண்டு, அரசு, தான் உட்பட, 27 அரசியல்வாதிகளின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பதாக குற்றம்சாட்டினார் முன்னாள் பிரதமர் சந்திரசேகர்.

கடந்த 2010ஆம் ஆண்டு நீரா ராடியா மற்றும் முன்னணி அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் நடந்த தொலைபேசி உரையாடல்களை வரித் துறையினர் ஒட்டுக்கேட்டனர். பின் அதை ஊடகங்கள் மத்தியில் கசியவிட்டனர்.

ஒட்டுக்கேட்பது & வேவுபார்ப்பது

பட மூலாதாரம்,GETTY IMAGES

"தற்போது ஒட்டுக் கேட்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, வேகம், தனித்துவம் எல்லாம் மாறி இருக்கிறது. எதிர் கருத்து தெரிவிப்பவர்கள் மின்னணு ரீதியில் கண்காணிக்கப்படுகிறார்கள்" என்கிறார் தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொது மக்கள் கொள்கை ஆய்வாளர் ரோஹினி லக்ஷனே.

மாநில உளவு அமைப்புகள் கண்காணிப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க, அமெரிக்கா போல இந்தியாவில் சிறப்பு நீதிமன்றங்கள் கிடையாது.

இந்தியாவில் இருக்கும் உளவு அமைப்புகளின் அதிகாரங்களைப் பயன்படுத்துவது மற்றும் செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்துவதற்கான ஒரு சட்டம் கொண்டு வரும் முயற்சியில் தோல்வி கண்டார் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி.

"இந்திய மக்களை வேவு பார்க்கும் உளவு முகமைகளை மேற்பார்வை செய்ய யாரும் இல்லை. தற்போது அப்படிப்பட்ட சட்டங்களுக்கான நேரம் வந்து இருக்கிறது" என்கிறார் மனோஜ். அவர் தன் பழைய சட்டத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக என்னிடம் கூறினார்.

"இந்தியாவுக்கு உடனடியாக கண்காணிப்பு சீர்திருத்தம் தேவை" என்கிறார் ரோஹினி லக்ஷனே.

சில கடினமான கேள்விகளை கேட்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார் லக்ஷனே. ஒட்டு கேட்கப்பட்ட தரவுகளின் பயன் முடிந்த பிறகு என்ன செய்யப்படும்? அது எங்கு சேமித்து வைக்கப்படும்? அதை அணுக யாருக்கெல்லாம் அனுமதி உண்டு? அரசு முகமைகள் சாராத வெளி ஆட்கள் யாருக்காவது அதை அணுக அனுமதியுள்ளதா? என்ன மாதிரியான டிஜிட்டல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன போன்றவைகளை கேட்கலாம் என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-57907882

  • கருத்துக்கள உறவுகள்

லத்தீஃபா, ஹயா: பெகாசஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்ட இரு துபாய் இளவரசிகள்- முழு விவரங்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
இளவரசி லத்தீஃபா
 
படக்குறிப்பு,

இளவரசி லத்தீஃபா

பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகம் முழுக்க பலர் வேவு பார்க்கப்பட்டதில் இரண்டு துபாய் இளவரசிகளின் செல்பேசி எண்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.

துபாய் ஆட்சியாளரின் மகளான இளவரசி லத்தீஃபா மற்றும் அவரது முன்னாள் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹுசைன் ஆகியோரது செல்பேசிகள் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தாம் பிணைக்கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் இளவரசி லத்தீஃபா பேசும் வீடியோவை கடந்த பிப்ரவரி மாதம் பிபிசி பனோராமா வெளியிட்டது.

இந்நிலையில் இளவரசி ஹயா கடந்த 2019ஆம் ஆண்டு தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக துபாயில் இருந்து தப்பி வெளியேறினார். இந்த இருவரின் குற்றச்சாட்டுகளை ஐக்கிய அரபு அமீரக அரசு மறுத்துவிட்டது.

ஓர் இஸ்ரேலிய நிறுவனத்தால் அரசாங்கங்களுக்கு விற்கப்பட்ட செல்ஃபோன் ஸ்பைவேரால் உலகம் முழுக்க உள்ள பல செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படி கண்காணிக்கப்படுவதாகக் கூறப்படும் தரவு தளத்திலிருந்து கசிந்த 50,000 எண்களில் இந்த இரு இளசரசிகளின் எண்களும் இருந்ததாக தெரிகிறது.

பெகாசஸ் எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன.

ஹயா

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

இளவரசி ஹயா

இந்த வேவு பார்க்கும் மென்பொருளை அரசுகள் பயன்படுத்துவது குறித்துப் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் என்எஸ்ஒ நிறுவனத்துக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளன.

யார் இந்த லத்தீஃபா?

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் 25 குழந்தைகளில் ஒருவர் லத்தீஃபா. சேக் மக்தூம் துபாயை ஒரு மினுமினுப்பு மிகுந்த நகரமாகவும், வணிகத்தில் ஈடுபட விரும்புபவர்கள் வந்து குவியும் இடமாகவும், அப்பிராந்தியத்தில் இருப்பவர்கள் விளையாட விரும்பும் இடமாகவும் மாற்றியிருந்தார்.

ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெண்களுக்கு சட்டங்கள் மற்றும் பழக்கங்கள் அவர்கள் வாழ்க்கையை மிகவும் கட்டுப் படுத்தும் விதத்தில் இருந்தன.

துபாயில் இருந்து தப்பிக்கும் முயற்சியை லத்தீஃபா முன்னெடுத்தபோது, அவர் பிடிபட்டு அடைத்துவைக்கப்பட்டார்.

"நான் வாகனம் ஓட்ட அனுமதிக்கப் படுவதில்லை. துபாயில் பயணிக்கவோ, துபாயை விட்டு வெளியேறவோ, எனக்கு அனுமதி இல்லை," என்று அவர் தப்பிக்கும் முன்பு பதிவு செய்த காணொளி ஒன்றில் கூறியுள்ளார் லத்தீஃபா.

"2000மாவது ஆண்டு முதல் நான் நாட்டை விட்டு வெளியே செல்லவில்லை. நான் வெளியே சென்று பயணிக்க வேண்டும், படிக்க வேண்டும், ஏதாவது இயல்பானவற்றைச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறேன் ஆனால் அவர்கள் என்னை விடவில்லை. நான் இங்கிருந்து செல்ல வேண்டும்," என்று அந்தக் காணொளியில் அவர் கூறியுள்ளார்.

இளவரசி லத்தீஃபா

பட மூலாதாரம்,UAE GOVERNMENT HANDOUT

இளவரசி லத்தீஃபாவுக்கு கடவுச்சீட்டு கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். அதன் காரணமாக அவர் துபாயில் இருந்து நழுவி வெளியேறி ஓமன் கடற்கரையோரம் வரவேண்டியிருந்தது.

ஒரு பாழடைந்த சிறு படகில் அவர்கள் சர்வதேச கடல் எல்லைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின. அன்று மாலை அவர்களை சுதந்திரத்திற்கு அழைத்துச்செல்ல இருந்த படகை அவர்கள் சென்றடைந்தனர்.

தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில் "நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன்," என்று லத்தீஃபா அறிவித்தார்.

இந்தியப் பெருங்கடலைக் கடந்து சென்று அதன் பின்பு அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டும் என்பது அவர்களது திட்டம். அங்கு அரசியல் தஞ்சம் கோரலாம் என்று லத்தீஃபா எண்ணியிருந்தார்.

ஆனால் 8 நாட்கள் கழித்து அவர்கள் இந்திய கரையோரம் நெருங்கியபோது அவரது தப்பும் முயற்சி மிகவும் மோசமாகிப்போனது.

இளவரசி ஹயா யார்?

இளவரசி ஹயா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஷேக் முகமது அல் மக்தூம் உடன் இளவரசி ஹயா

துபாயிலுள்ள தனது கணவரை விட்டு சென்ற இளவரசி ஹயா லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மக்தூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், தனது கணவரை விட்டு பிரிந்து சென்ற பின்னர் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது,

தனது முன்னாள் கணவர் மீது கடத்தல், துன்புறுத்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த இளவரசி ஹயா, கடந்த 2019ஆண்டு ஏப்ரல் மாதம் தனது இரண்டு குழந்தைகளோடு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரது குற்றச்சாட்டுகளை பிரிட்டன் நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது.

ஜோர்டானில் பிறந்து, பிரிட்டனில் கல்வி பயின்ற 45 வயதான இளவரசி ஹயா, கோடால்பின் குதிரை பந்தய திடலின் உரிமையாளரான ஷேக் முகமது அல் மக்தூமை 2004ம் ஆண்டு திருமணம் செய்து, அவரது ஆறாவது மற்றும் கடைசி மனைவியுமாக மாறினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.