Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"அறிவும்" அறியாமையும் ! - ரோலிங் ஸ்டோன் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"அறிவும்" அறியாமையும் !
====================

spacer.png

வரலாற்றுக் காலம் முதல் உளவியல் போரில் பல்வேறு உரிமைகளை இழந்து போனவர்களாக வாழ்ந்ததும் வாழப் பழகியதுமாக இருந்தவர்கள் தமிழர்கள். இதன் தொடர்ச்சியாக ஒரு தொன்மைச் சமூகம் இன்று இழிநிலையின் விளிம்பில் நின்று அல்லாடிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பல இரட்டை மலைச் சீனிவாசன்கள் , பெரியார்கள் வந்தாலும் எதைச் சாதிக்க முடியும் என்பது இற்றைவரையான யதார்த்தமான கேள்வி. பெரியார் போன்ற பல சக்திகள் பயணப்பட்ட பாதை என்பது இன்னும் கண்ணுக்கு எட்டிய தூரத்தை கூட கடக்கவில்லை என்றளவிற்கு சமூக ஏற்றத் தாழ்வுகள் , அடிமைத்தனங்கள், தீண்டாமைகள் என்பன தமிழர் தேசத்தில் இன்றும் பரவி அழுத்தமாக காணப்படுகின்றது. 

இன்றைய காலகட்டத்தில் சமூக அரசியல் பொது அரங்கில் திருமாவளவன் போர்வீரனாக சுழன்று வந்தாலும் உறுதியான மாற்றங்களை உருவாக்க முடியவில்லை. உரிமைகளுக்காக போராட மட்டும் முடிகிறது. 

தீண்டாமைக்கு எதிராக பரந்துபட்ட வெகுஜன எதிர்ப்புணர்வுகள் , போராட்டங்கள் இன்றளவில் வெடிக்காமல் இருப்பதும், அதற்கான வெகுஜன போராட்டங்களில் சகல மக்களும் குதிக்காமல் இருப்பது ஏன்? 

அங்காங்கு தீண்டாமைக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக சில கலகக் குரல்கள் ஒலிப்பதால் என்ன பலன்? 

திரைத்துறையில் இருந்து கொண்டு பா.இரஞ்சித் போன்றோர் தீண்டாமைக்கு எதிராக போராடுகின்றனர். இது எவ்வளவுக்கு சமூக மாற்றத்தை உருவாக்க பயன்படும் என்பது கேள்விக் குறியே!. பா. ரஞ்சித் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள இசைத்துறை ஆர்வலர்களுக்கான வழிகாட்டிகளில் ஒருவராக உள்ளார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அவர் ஒடுக்கப்படும் முழு மக்களுக்கான இரட்சகராக பயணிக்கவில்லை. இருப்பினும் அவரின் திரைப்படங்கள் ஒடுக்கப்படும் மக்களின் கதைகளை பேசி நிற்கிறது. 

பல்வேறு திரைத்துறை நிகழ்வுகளில் தீண்டாமைக்கு எதிராக கலகக் குரலை பா.இரஞ்சித் எழுப்பிக் கொண்டிருந்தாலும் அதில் பல புரிதல் குறைவுகளுடன் அவர் குரல் எழுப்புவதையும் காணமுடிகிறது. 

பா. ரஞ்சித்தின் இந்த புரிதல் குறைவான விமர்சனங்கள் தீண்டாமைக்கு ஆதரவான சக்திகளிற்கு பலம் சேர்ப்பதோடு, தீண்டாமைக்கு எதிரான சக்திகளிடம் பிளவுகளையும் தூண்டிவிடுகிறது. இதனை பா. ரஞ்சித் கவனிக்காது தொடர்ச்சியாக தனது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார். கலகக் குரலை எழுப்பி வருகிறார். 

அவ்வாறான கலகக் குரலில் ஒன்றாகவே பா. இரஞ்சித்தால் அண்மையில் எழுப்பப்பட்ட அறிவின் விவகாரத்தையும் பார்க்க முடியும். 

ராப் பாடல்களை எழுதியும் பாடியும் பிரபல்யமாக மாறி வருபவர் அறிவு என்கிற இளைஞர். கனடாவை மையமாக கொண்ட மாஜா (Maajja) ஆல்பங்களை உருவாக்கி அதனை வணிக மயப்படுத்துகின்றது. அறிவு எழுதி கூட்டாக பாடிய பாடல் என்ஜாய் எஞ்சாமி பிரபல்யத்தை தொட்டதை நாமறிவோம். இப்பாடல் மாஜா நிறுவனத்தின் ஆல்பங்களுக்கான பாடல். 

ஆல்பத்துக்கான விளம்பரம் Rolling stone என்கிற அமெரிக்க இணைய வழி சஞ்சிகையில் மாஜா நிறுவனத்தால் விளம்பரப்படுத்தப்பட்டது. அந்த விளம்பரத்தில் அறிவு முக்கியப்படுத்தப்படவில்லை என்றும் காரணம் தீண்டாமை என்கிற குற்றச்சாட்டு அறிவு மற்றும் அறிவின் அனுதாபிகளாலும் முன்வைக்கப்பட்டது. அதற்கு ஆதரவான குரல் இயக்குனர் பா. ரஞ்சித்தால் முன்வைக்கப்பட்டதை அடுத்து இவ்விடயம் பொது வெளியில் பலரது கவனத்தை பெற்று வருகிறது. 

இக் குற்றச்சாட்டின் ஏற்புடைத் தன்மை கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது. காரணம் பா. ரஞ்சித் வைத்திருக்கும் குற்றச்சாட்டு அனைத்துத் தரப்பும் தலித்துக்களை புறமொதுக்குகின்றனர் என்பதாகும். இக்குற்றச் சாட்டின் நேரடி விளைவாக ஈழத்தமிழர்களும் அவர்களின் அரசியல் வேட்கைக்கும் நேரடி மறைமுக பாதிப்புகளை உண்டாக்கும். இதன் அடிப்படையில் சில உண்மைகள் தமிழகத்தை சென்றடைய வேண்டும் என்கிற அடிப்படையில் விளக்கங்களை ஈழத்தமிழர்கள் சார்பில் சொல்ல வேண்டியுள்ளது.

மாஜா - song production company கனடாவில் வாழும் ஈழத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம். அந்நிறுவனம் பாடகர்களை கொண்டு இசை ஆல்பங்களை வணிக நோக்குடன் உருவாக்கும் நிறுவனம். 

மாஜா நிறுவனத்தை நடாத்திச் செல்வோர் இளைஞர்கள், புலம்பெயர் ஈழத்தமிழர்களின் இரண்டாம் சந்ததியினர். அவர்கள் கனேடிய கலாச்சாரத்திற்கு உரிய ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு தென்னிந்தியாவில் நிலவிவரும் சாதீய மேலாண்மைகள், தீண்டாமைகள் குறித்த அறிவோ புரிதலோ இருக்கப் போவதில்லை. இதனை புரிந்து கொள்ளாத பா.ரஞ்சித் எங்கு சென்றாலும் தீண்டாமை நிலவிவருவதாக கலகக் குரலை எழுப்பியது ஈழத்தமிழர்களை நோக்கியோ என கேள்வி எழுகிறது. 

பா. ரஞ்சித் தமிழ் தேசியம், குறித்தும், ஈழப் போராட்டம் குறித்தும், தமிழர்களின் வரலாற்றுத் தொன்மம் குறித்தும் நிறையவே வாசிப்புச் செய்ய வேண்டும். ஏனெனில் அண்மைக்காலமாக பா. ரஞ்சித்தின் விமர்சனங்கள் தீண்டாமை என்பது சனாதனத்தின் சூழ்ச்சி மற்றும் பிரித்தாளும் கோட்பாட்டிற்குரியது என்பதை கவனிக்கத் தவறி நிற்பதோடு தமிழர்களின் தொன்மை, பண்பாடு என்பவற்றின் மீதான கோபமாகவும் மாறி நிற்கிறது. 

சீமான் போன்ற தமிழ்த்தேசியவாதிகளோ அல்லது பிற தமிழ்த் தேசிய சக்திகளோ தீண்டாமை , மற்றும் உள்ளக அடக்கு முறைகளுக்கு எதிராக புரட்சி செய்யத் தயாராக இல்லாத போது பா. ரஞ்சித் போன்றோர் தமிழ்த் தேசியம் மீதான நம்பிக்கையற்று வினையாற்றுவது புரிந்து கொள்ளக் கூடியதே. 

அதிக பிரபல்யத்தை பெறக்கூடிய திரைத்துறையில் இருக்கும் இயக்குனரான பா.ரஞ்சித் ஒரு கலகக்காரனாக அடக்கு முறைகளுக்கு எதிராக போராடும் ஒரு மனிதனாக இருப்பதால் பா. இரஞ்சித் மீது ஒரு ஈர்ப்பு எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் பா.ரஞ்சித் சரியான புரிதல்களோடு தனது கலகக்குரலை உரிமைகளுக்காக தீண்டாமைக்கு எதிராக முன்வைக்க வேண்டும். இல்லையேல் அது சிக்கல்தன்மைகளை உருவாக்குவதோடு தீண்டாமை, மற்றும் அடக்குமுறைக்களுக்கு எதிரான ஒற்றுமையான போராட்டங்களை சிதைத்துவிடவும் கூடும்.

R.G.
 

https://www.facebook.com/101881847986243/posts/399242734916818/?d=n

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.