Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையகத் தொழிலாளர்களை அடிமைகளாக்க அரசு முயற்சி! மனோ கண்டனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத் தொழிலாளர்களை அடிமைகளாக்க அரசு முயற்சி! மனோ கண்டனம்!

மலையகத் தொழிலாளர்களை அடிமைகளாக்க அரசு முயற்சி! மனோ கண்டனம்!

பால் உற்பத்தியை அதிகரிக்கிறோம் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மலைத்தோட்டக் காணிகளை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, கொடுக்க அரசு முயற்சிக்கின்றது. இதனூடாக மலையகத் தொழிலாளர்களை அடிமைகளாக்க அரசு முயற்சிக்கின்றது.
இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான நாவலபிட்டிய கலபொடவத்த தோட்டம், கண்டி அந்தானைப் பகுதியைச் சேர்ந்த தெல்தொட்ட தோட்டம், க்றேவ் வெலி தோட்டம் மற்றும் வட்டவளை மவுன்ட் ஜின் தோட்டம் ஆகியவற்றில் சுமார் ஆயிரத்து 100 ஏக்கர் காணிகளை, உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் தோட்டங்களை உருவாக்கி நூறாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக அங்கு வாழும் தொழிலாளர்களை உள்வாங்கி, அவர்களுக்குக் காணிகள் வழங்கி, பசுமாட்டு வளர்ப்புக்கு உதவி செய்து, வீட்டுப் பண்ணை அடிப்படையில், பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு மறுக்கின்றது.

அத்துடன் தோட்டக் காணிகள் தொழிலாளருக்கு மறுக்கப்பட்டு வெளியாருக்கு மாத்திரம் கொடுக்கப்படும் முயற்சிகள் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும் ஆரம்பமாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக மலையகத் தொழிலாளர்களை இன்னமும் நூறு வருடங்களுக்கு கூலித்தொழிலாளர்களாகவே வைக்கும் முயற்சியை இந்த அரசு முன்னெடுக்கின்றது. இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் வாய் மூடி மௌனியாக துணை போகின்றது. இதற்கு நாம் இடம் கொடுக்க முடியாது.
பால் பொருள்கள் இறக்குமதி நிறுத்தப்பட வேண்டும். உள்நாட்டு பால் உற்பத்தி பெருக வேண்டும். இந்த நாட்டில் பாலாறு, தேனாறு ஓட வேண்டும். இவற்றுக்கு நாம் இரண்டு கைகளையும் தூக்கி ஆதரவு வழங்குவோம்.

ஆனால், இருக்கும் பால்பண்ணைகளை அபிவிருத்தி செய்யாமல், புதிய பண்ணைகளை அமைக்கிறோம் என்ற போர்வையில், மலையகக்காணிகளை அபகரித்து, நமது மக்களை நடுத்தெருவில் நிறுத்த இடம் கொடுக்க முடியாது.
காணிகளைப் பிரித்து, நமது மக்களுக்கும் வழங்குங்கள். கிராமத்து மக்களுக்கும் வழங்குங்கள். இதன் மூலம் அவர்களது வருமானமும் அதிகரிக்கும். பால் உற்பத்தியும் அதிகரிக்கும். நாடும் செழிக்கும்.

நீங்கள் அடையாளம் கண்டுள்ள அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மலைக்காணிகள், பால் பண்ணை நடத்த அல்ல, வேறு நடவடிக்கைகளுக்கு பயன்பட போகின்றது என எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் உள்நோக்கம் மலைநாட்டுத் தொழிலாளருக்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று எமக்குத் தெரிய வந்துள்ளது.
இந்தப் பகுதிகளில் ஏற்கனவே மாணிக்க கல் தோண்டும் நடவடிக்கைகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அவற்றை முழுமையாக்கவா இந்த நடவடிக்கை என நாம் கேட்கிறோம். – என்றார்.
https://newuthayan.com/மலையகத்-தொழிலாளர்களை-அடி/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.