Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 வருடங்களாக தேடப்பட்டு வந்த இலங்கை கடத்தல் மன்னன் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10 வருடங்களாக தேடப்பட்டு வந்த இலங்கை கடத்தல் மன்னன் கைது

வீரகேசரி நாளேடு

15 ஆயிரம் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்தவர் கடந்த 10 வருடங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த கடத்தல் மன்னன் ஜெயரத்தினம் என்பவர் மண்டபம் கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 10 ஆண்டுகளில் 15 ஆயிரம் அகதிகளை தோணி மூலம் ஏற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடத்தல்காரர்களை பிடிக்க இராமேஸ்வரம் கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில் பலர் கைது செய்யப்பட்டனர். பொருட்கள் கடத்தப்படுவதும் தடுக்கப்பட்டது. ஆனால் இலங்கையை சேர்ந்த ஜெயரத்தினம் என்ற ஒரு கடத்தல் புள்ளி மட்டும் பொலிஸாரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.

கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இவர் இந்தியாவிற்குள் பிளாஸ்டிக் படகுகள் மூலம் கள்ளத்தனமாக 15 ஆயிரம் அகதிகளை ஏற்றி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மண்டபம் கடற்கரைப் பகுதியில் கியூ பிரிவு பொலிஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் பிளாஸ்டிக் படகுடன் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்தான் கடந்த 10 ஆண்டுகளாக பொலிஸார் தேடி வந்த கடத்தல் புள்ளியான இலங்கையைச் சேர்ந்த ஜெயரத்தினம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் இலங்கையில் இருந்து கடந்த 10 வருடங்களாக சுமார் 15 ஆயிரம் அகதிகளை இராமேஸ்வரம், குந்துகால் உள்ளிட்ட பகுதிகளில் இறக்கி விட்டுள்ளார். அத்துடன் மண்டபம் முகாமில் இருந்து மீண்டும் தாயகம் செல்ல விரும்பும் அகதிகளை ஏற்றிச்சென்று இருக்கிறார். இதுதவிர பீடி பொதிகள், ஜெலட்டின், டெட்டனேட்டர், அலுமினிய கட்டிகளையும் இவர் கடத்தி வந்துள்ளார். 40 வயதான இவர் பேசாலை 8ஆவது வட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும் மண்டபம் உச்சிப்புளியை சேர்ந்த சில கடத்தல் முகவர்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும்

தெரிவிக்கப்படுகின்றது. இவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் பல முக்கிய தகவல்களும் கிடைத்துள்ளதாக கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைக்கு பிறகு ஜெயரத்தினம் மண்டபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். கள்ளத்தோணி மூலம் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இவர் மீது கடத்தல், கடவுச்சீட்டு இல்லாமல் இந்திய நாட்டுக்குள் நுழைந்தது ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் இராமேஸ்வரம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில்

ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.