Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடத்தல்களில் ஈடுபடும் புலனாய்வுப் பிரிவினர் பற்றிய தகவல்களை வெளியிடக் கூடாது: கோத்தபாய உத்தரவு.

Featured Replies

கடத்தல்களில் ஈடுபடும் புலனாய்வுப் பிரிவினர் பற்றிய தகவல்களை வெளியிடக் கூடாது: கோத்தபாய உத்தரவு.

கொழும்பில் நடைபெறும் கடத்தல்கள் மற்றும் கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் ஈடுபடும் சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தொடர்பான தகவல்களை வெளியிடக் கூடாது என்று குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு மகிந்தவின் சகோதரரும் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பில் மூத்த புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

கொழும்பில் நடைபெறும் கடத்தல்கள் மற்றும் கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்ற சந்தேகத்தின் போரில் சிறிலங்கா இராணுவத்தினரின் புலனாய்வு அதிகாரிகளை குற்றப்புலனாய்வுத் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதனால் கொழும்பு நகரத்தையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் புலனாய்வுத் துறையினரின் இத்தகைய கடத்தல் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளன.

சிறிலங்கா இராணுவம் மற்றும் கடற்படை அணிகளை சேர்ந்த பல புலனாய்வு அதிகாரிகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்ய முயன்ற போது அந்த அணிகளின் உயரதிகாரிகள் அதில் தலையிட்டதுடன் தமது புலனாய்வு அதிகாரிகளுக்கும் கடத்தல்கள், கப்பம் அறவிடுதல் போன்றவற்றிற்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை எனவும் உறுதிப்படுத்த முற்பட்டுள்ளனர்.

கொழும்பிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் விடுதலைப்புலிகளின் ஊடுருவலை தடுப்பதற்கும் பாதாள உலக குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் என பல புலனாய்வு அணிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தற்போது கடத்தல்கள் கப்பப் பணம் அறிவிடுதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் தாமும் எதிர்காலத்தில் சிக்க நேரிடலாம் என்ற அச்சத்தில் அவர்கள் பணியில் ஈடுபட மறுத்து வருகின்றனர்.

கொழும்பில் நடைபெற்ற கடத்தல்கள் தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களையும் கடந்த வாரம் குற்றப்புலனாய்வு துறையினர் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தமது எதிர்காலம் தொடர்பாக எந்த ஒரு உயர் அதிகாரியும் பொறுப்பு ஏற்க மறுப்பதனால் சிறப்பு அதிரடிப்படையினர் அவர்களின் புலனாய்வு நடைவடிக்கைகளை கைவிட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே புலனாய்வு அதிகாரிகளை துன்புறுத்தாது விசாரணைகளை நடத்தும் படியும், அவர்களின் விவரங்களை வெளியிட வேண்டாம் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா குற்றப்புலனாய்வு துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

-Puthinam-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.