Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொப்பிகல அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிகல அரசியல்

[13 - July - 2007]

தொப்பிகல பிராந்தியம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணம் முழுவதும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டதாக பிரகடனம் செய்திருக்கும் அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பெரும் கொண்டாட்டங்களுக்கு தயாராகிக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. 1995 இல் யாழ்ப்பாணக் குடாநாட்டை இராணுவம் கைப்பற்றியதை அன்றைய ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் அரசாங்கம் பெருவெற்றியாகக் கொண்டாடியதைப் போன்று இன்று கிழக்கில் தொப்பிகல வெற்றியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் கொண்டாடத் தலைப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் உத்தேச வெற்றிக் கொண்டாட்டங்களின் தகுதி பற்றி விமர்சனங்கள் ஏற்கனவே கிளப்பியிருக்கின்ற போதிலும், கிழக்கின் இராணுவ நிலைவரத்தைப் பயன்படுத்தி அரசியல் அனுகூலத்தை அடைவதில் ஜனாதிபதி ராஜபக்ஷ ஆரம்பம் முதலிருந்தே ஆர்வம் காட்டி வந்திருப்பதை நிகழ்வுப்போக்குகள் வெளிக்காட்டி நின்றன. அதன் காரணத்தினால் எதிரணியினர் குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தொப்பிகல வெற்றிக் கொண்டாட்டங்களை கடுமையாக கண்டிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அரசியல், பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்திருக்கின்ற சூழ்நிலையில் அரசாங்கத்துக்கு எதிரான இயக்கத்தை எதிரணியினர் உத்வேகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். வானளாவ அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவும் மக்களின் கஷ்டங்கள் தொடர்பில் அரசாங்கத் தரப்பினர் மத்தியில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற அலட்சிய மனோபாவமும் எதிரணிக்கு சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவித்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதனால் தனது அரசியல் எதிரிகளை மடக்குவதற்கு தொப்பிகல வெற்றியை சாத்தியமானளவுக்கு பயன்படுத்துவதில் ஜனாதிபதி ராஜபக்ஷ ஈடுபட்டிருக்கின்றார் என்பது வெளிப்படையானது.

இனநெருக்கடிக்கு இராணுவ ரீதியான தீர்வொன்றைக் கண்டுவிட முடியுமென்று சிங்கள மக்களை மீண்டும் நம்ப வைக்கின்ற முயற்சிகளில் பேரினவாத சக்திகள் அண்மைக்காலமாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் விளைவாக தென்னிலங்கை அரசியலில் பேரினவாதம் முன்னென்றுமில்லாத அளவுக்கு மேலோங்கியிருக்கும் ஆரோக்கியமற்ற ஒரு சூழ்நிலையில், சொந்த மக்களில் இலட்சக்கணக்கானவர்களுக்கு அவலங்களைத் தந்த ஒரு இராணுவ நடவடிக்கையில் கிடைத்ததாகக் கூறப்படும் வெற்றியைக் கொண்டாடுமாறு அரசாங்கமே கேட்பதனால் ஏற்படக்கூடிய துரதிர்ஷ்டவசமான விளைவுகளை அரசாங்க உயர் மட்டம் சிந்தித்துப்பார்க்கத் தவறியமை பெரும் கவலை தருகிறது. அரசியல் தீர்வொன்று காணப்படவேண்டியதன் அவசியம் குறித்த அக்கறை கடுமையாக தாழ்நிலையில் காணப்படுகின்ற இவ்வேளையில், இராணுவ வெற்றி குறித்த கொண்டாட்டங்கள் இராணுவத்தீர்வுக்காக கூச்சலிட்டு முற்று முழுதான போரை முன்னெடுக்குமாறு கோரும் சக்திகளின் கரங்களையே வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அரசியல் தீர்வின் அவசியம் குறித்து இருக்கக் கூடிய எஞ்சிய உணர்வும் மழுங்கடிக்கப்படுவதாகவே போய்முடியும்.

நாட்டிலே பாரதூரமான பிரச்சினைகள் தோன்றினால் அவற்றைச் சமாளிப்பதற்குச் சிறந்தவழி அயல் இராச்சியங்கள் மீது போரைத் தொடுப்பதே என்று இத்தாலிய அரசியல்வல்லுனர் நிக்கலோ மாக்கியவல்லி ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினாராம். சரித்திரத்தில் பல ஆட்சியாளர்கள் மாக்கியவல்லி கூறிய தந்திரோபாயத்தை பின்பற்றி அயல் நாடுகளுடன் போரைத் தொடுத்தார்கள். அயல் நாட்டுக்கு எதிராகவோ அல்லது உள்நாட்டிலோ தொடுக்கக் கூடியபோர் ஏனைய பிரச்சினைகளை மக்கள் தற்காலிகமாக மறப்பதற்கு வழி செய்யும் என்பதே இந்த தந்திரோபாயத்தின் பின்னணியில் உள்ள நோக்கமாகும். ஏனைய பிரச்சினைகளை மறந்துவிட்டு நாட்டுக்காக மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். போர்க்களத்தின் வெற்றிகள் ஆட்சியாளர்களின் அரசியல் நோக்குடனான பிரசாரங்களுக்கு தாராளமாகவே பயன் படுத்தப்படும். இத்தகையதொரு சூழ் நிலையையே இன்று நாம் இலங்கையில் காண்கின்றோம்.

தொப்பிகல வெற்றியைப் பயன்படுத்தி ஏனைய சகல பிரச்சினைகளையும் நாட்டுமக்கள் மறந்துவிடக்கூடிய நிலைமையை அரசாங்கத்தினால் தோற்றுவிக்க முடியுமா இல்லையா என்பதை அடுத்துவரும் நாட்களில் பார்க்க முடியும். போருக்குள் அரசியலைப் புகுத்தக் கூடாதென்றும் இராணுவநடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் தலையீடுகளைச் செய்யக்கூடாது என்றும் புதுமையான உச்சாடனங்களை செய்தவர்கள் அதே போரையும் இராணுவ நடவடிக்கைகளையும் பயன்படுத்தி இன்று தாராளமாகவே தங்கள் அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார்கள். போரைத் தவிர அவர்களிடம் வேறு எந்த அரசியலையும் எம்மால் காணமுடியவில்லை.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.