Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தாய்நிலம்’ ஆவண பட நிகழ்வில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு: சம்பந்தன்- விக்னேஸ்வரன் கூட்டாக ஆரம்பித்து வைப்பர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘தாய்நிலம்’ ஆவண பட நிகழ்வில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு: சம்பந்தன்- விக்னேஸ்வரன் கூட்டாக ஆரம்பித்து வைப்பர்.

September 25, 202spacer.png

தமிழ் மக்களின் தாயகமான வடக்கு-கிழக்கில் காலம் காலமாக அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் ‘தாய்நிலம்: நில அபகரிப்பு – இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று ( ThaaiNilam: Land Grabbing – The Real Pandemic for the Tamils in Sri Lanka) என்ற ஆவணப் படம் எதிர்வரும் சனிக்கிழமை மாலை இலங்கை நேரப்படி 5.30 மணிக்கு ( லண்டன் நேரம் பிற்பகல் 1.00 மணி, டொரண்டோ மற்றும் நியுஜேர்சி நேரம் காலை 8 மணி) திரையிடப்படவுள்ளது. இந்த ஆவணப்படத்தை சோமீதரன் இயக்கியுள்ளார். இந்த ஆவண பட திரையிடல் நிகழ்வை தொடர்ந்து ‘இலங்கையின் இனஞ் சார்ந்த நில ஆக்கிரமிப்பு: முறைகள், விளைவுகள் மற்றும் தமிழ் நில பாதுகாப்பு’ ( Sri Lanka’s Ethnocratic Land Grabs: Methods, Consequences, and Tamil Land Defence ) என்ற இணையவழி கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் இந்தியாவில் 30 வருடங்களுக்கு மேலாக மக்களின் நில உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளரான கலாநிதி மேதா பட்கார் அம்மையார், சென்னை பல்கலைக்கழ பேராசிரியர் ராமு மணிவண்ணன், அமெரிக்காவின் ஓக்லாந்து நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்வில் இஸ்ரேல் நாட்டில் இருந்து பேராசிரியர் ஓரன் யிப்டசெல் அவர்கள் முதன்மை உரை ஆற்றுவார்.

இந்த குழு விவாதத்தை தொடர்ந்து ஈழத்தை பூர்வீகமாக கொண்ட கனடாவின் புகழ்பெற்ற இசை கலைஞரான ஷான் வின்சென்ட் டி போலின் இசை நிகழ்வு ஒன்று 20 நிமிடங்களுக்கு இடம்பெறும்.

ஆவண படம் திரையிட்ட பின்னர், அந்த படம் தொடர்பிலான ஆய்வு ரீதியான கலந்துரையாடல் ஒன்றில் இளையோர்கள் கலந்துகொள்வார்கள். இந்த கலந்துரையாடலில் பிரித்தானியா, தமிழ் நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து இளையோர்கள் கலந்துகொள்வர்.

இந்த நிகழ்வினை பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுடன் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் அவர்கள் கூட்டாக ஆரம்பித்துவைப்பார்.

தாய்நிலம் என்ற இந்த ஆவண படத்தை தமிழ் மக்கள் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும் என்றும் அதன்பின்னர் நடைபெறும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் இந்த நிகழ்வையும் ஆவண பட வெளியீடையும் ஏற்பாடு செய்துள்ள நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 5. 30 மணிமுதல் சில மணி நேரங்களுக்கு உங்கள் நேரத்தை தயவுசெய்து ஒதுக்கிவைத்து இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று நீதியரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Zoom Link: https://bit.ly/LandGrab2021
Webinar ID: 841 5154 5684
Passcode: TH2021

ஊடகப் பிரிவு – தமிழ் மக்கள் கூட்டணி

https://globaltamilnews.net/2021/166437


 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான அந்தஸ்த்தை தமிழர் பெற்றிருக்க வேண்டும்; ‘தாய்நிலம்’ ஆவணப்பட வெளியிட்டில் சம்பந்தன்

September 27, 2021

SAMPANTHAN025 அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான அந்தஸ்த்தை தமிழர் பெற்றிருக்க வேண்டும்; 'தாய்நிலம்' ஆவணப்பட வெளியிட்டில் சம்பந்தன்

 

“தமிழ் பேசும் மக்கள் தமது பகுதிகளில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அந்தஸ்த்தைப் பெற்றிருக்க வேண்டும். இது புதிய விடயமல்ல. பிரிக்கப்படாத நாட்டுக்குள் வழங்கப்படும் முழு அதிகாரப் பகிர்வினைத்தான் தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் தாயகமான வடக்கு-கிழக்கில் காலம் காலமாக அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் “தாய்நிலம்: நில அபகரிப்பு – இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று” என்ற ஆவணப் படம் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வினை ஆர். சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கூட்டாக ஆரம்பித்துவைத்தார்கள். அதனையடுத்து விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கருத்துப் பகிர்வில் பிரதான உரையை நிகழ்த்திய போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்..

சம்பந்தன் தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது;

“சுதந்திரம் அடைந்த நாள் முதல் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் வரலாறு தொடர்பாக கருத்துக்கு அங்கீகாரம் இருந்தது. இது தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்காக கடந்த காலங்களில் பல அரசியல் தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.

அதிகாரப் பரவலாக்கல் தொடர்ந்தும் ஒரே வழியில் தொடராமலிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தமிழ் பேசும் மக்கள் தமது பகுதிகளில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அந்தஸ்த்தைப் பெற்றிருக்க வேண்டும். இது புதிய விடயமல்ல. பிரிக்கப்படாத நாட்டுக்குள் வழங்கப்படும் முழு அதிகாரப் பகிர்வினைத்தான் தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.

வரலாற்று வாழ்விடத்தைப் பாதுகாக்கவும், சுயமரியாதையுடனும், கண்ணியத்துடன் வாழ்தல் அவர்களுடைய உரிமை என மனித உரிமைகள் பிரகடனத்தில் சர்வதேச சிவில் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதாரத்துக்கான சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் மனித உரிமைகளை நிறைவேற்ற உதவும் ஆணையாகக் காணப்படுகின்றது.”

இவ்வாறு சம்பந்தன் தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை சோமீதரன் இயக்கியுள்ளார். இந்த ஆவண பட திரையிடல் நிகழ்வை தொடர்ந்து ‘இலங்கையின் இனஞ் சார்ந்த நில ஆக்கிரமிப்பு: முறைகள், விளைவுகள் மற்றும் தமிழ் நில பாதுகாப்பு’ என்ற இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் இந்தியாவில் 30 வருடங்களுக்கு மேலாக மக்களின் நில உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளரான கலாநிதி மேதா பட்கார் அம்மையார், சென்னை பல்கலைக்கழ பேராசிரியர் ராமு மணிவண்ணன், அமெரிக்காவின் ஓக்லாந்து நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டால் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்த நிகழ்வில் இஸ்ரேல் நாட்டில் இருந்து பேராசிரியர் ஓரன் யிப்டசெல் முதன்மை உரை நிகழ்த்தினார்.

இதனையடுத்து விவாதத்தை தொடர்ந்து ஈழத்தை பூர்வீகமாக கொண்ட கனடாவின் புகழ்பெற்ற இசை கலைஞரான ஷான் வின்சென்ட் டி போலின் இசை நிகழ்வு இடம்பெற்றது. ஆவண படம் திரையிட்ட பின்னர், அந்த படம் தொடர்பிலான ஆய்வு ரீதியான கலந்துரையாடலில் பிரித்தானியா, தமிழ் நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து இளையோர்கள் கலந்துகொண்டனர்.

 

https://www.ilakku.org/அரசியல்-அதிகாரத்தை-பயன்ப/

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசும் கொரோனா வைரஸும் ஒன்றே;இரண்டுமே தமிழர் தலையெடுப்பதை விரும்பவில்லை : சி.வி. விக்னேஸ்வரன்

(சி.எல்.சிசில்)
இலங்கை அரசும் கொரோனா வைரஸும் ஒன்றே.இரண்டுமே எம்மைத் தலையயெடுக்க விட விருப்பமில்லை. எம்மை எப்படியாவது அடக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இரண்டும் இயங்கி வருகின்றன எனத் தெரிவித்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி.யுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
cv-1-300x210.jpg
தமிழ் மக்களின் தாயகமான வடக்கு – கிழக்கில் காலம் காலமாக அரசுகள் மேற்கொண்டு வரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் ‘தாய்நிலம்: நில அபகரிப்பு – இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந் தொற்று’ என்ற ஆவணப் படம் சனிக்கிழமை மாலை இணையவழியில் திரையிடப்பட்டது.
அதன்பின்னர் அந்தப் படம் தொடர்பான ஆய்வு ரீதியான கலந்துரையாடல் நடைபெற்றது.இதில் பிரித்தானியா, தமிழ் நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து இளையோர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்தநிகழ்வை தமிழ் மக்கள் தேசிய கூட்டணித் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்னேஸ்வரனும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தனும் கூட்டாக ஆரம்பித்து வைத்தனர். இதில் விக்னேஸ்வரன் எம்.பி. தலைமையுரை ஆற்றும்போதே இவ்வாறு தெரிவித்ததுடன் மேலும் கூறுகையில்,
இலங்கை அரசு போல் கொரோனா வைரஸும் எம்மைத் தலையெ டுக்கவிட விருப்பமில்லை. எம்மை எப்படியாவது அடக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அதுவும் இயங்கி வருகின்றது. எனினும் கட்டுப்படுத்தல்களையும் தனிமைப்படுத்தல்களையும் மீறி நாங்கள் இன்று புகழ் மிக்க அறிஞர்களை இந்த மெய் நிகர் தொடர் கருத்தரங்கத்துக்கு வரவழைத்துப் பங்குபற்ற வைத்திருக்கின்றோ மெனில் அதற்கு எமது விடாமுயற்சியுடைய சோர்வற்ற இளைஞர் குழாமே பொறுப்புடையவர்கள். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
இன்றைய நாள் மிகவும் முக்கியமான ஒரு நாள். இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களில் ஒன்றான தமிழ் மக்களின் வடக்கு – கிழக்கு தாயகத்தை கடந்த 70 வருடங்களாக அபகரித்து வரும் தொடர் இலங்கை அரசுகளின் செயற்பாடுகளை ஆவணப் படமாக ஆதாரபூர்வமாக ஆய்வுபூர்வமாக வெளியிடும் நாள் இது.
இவ்வாவணப் படம் நில அபகரிப்பு நடக்கும் இடங்களில் வைத்தே எடுத்த படம். இதனை நாம் என்றோ செய்திருந்திருக்க வேண்டும். இது போன்ற ஆவணப் படங்கள் பலவற்றை நாம் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், காலம் கடந்தேனும் அவசியமும் முக்கியமுமான இந்தச் செயற்பாடு இன்று அரங்கேற்றம் பெறுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது.
அதேபோல், நில அபகரிப்பு எவ்வாறு ஒரு பெருந்தொற்றாக வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களைப் பீடித்து அவர்களின் இருப்பு, அடையாளம், வாழ்வு ஆகியவற்றை இல்லாமல் செய்கின்றது என்பது பற்றி விவாதிப்பதற்கு உலகின் பிரபல்யம் மிக்க கல்விமான்களும் செயற்பாட்டாளர்களும் இங்கு வந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் மிக்கது. இத்தகைய சிறப்பும் முக்கியத்துவமும் மிக்க இன்றைய நிகழ்வை என்னுடன் கூட்டாக ஆரம்பித்து வைத்து உரையாற்ற வந்திருக்கும் முதுபெரும் அரசியல்வாதியும் எனது பெருமதிப்புக்கும் கெளரவத்துக்கும் உரிய முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவரும் எம்.பி.யும் என்னை 2013ஆம் ஆண்டு அரசியலுக்குக் கொண்டு வந்தவருமாகிய சம்பந்தனுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வடக்கு – கிழக்கின் தலைநகரம் என்று அழைக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சம்பந்தன், எவ்வாறு 1948 ஆம் ஆண்டு சு த ந் தி ர த் து க் கு ப்  பி ன் ன ர்  அ ங் கு பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் நிலங்கள் அரசின் குடியேற்றத் திட்டங்களினாலும் வன்முறை களினாலும் பறிக்கப்பட்டு இன்று அவர்களின் இருப்பு கேள்விக்குறியாகும் நிலையில் இருக்கின்றது என்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றார். 1956ஆம் ஆண்டு முதல் சாத்வீக வழியில் தமிழர் தாயகத்தின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி வரும் சம்பந்தன், இன்றைய நிகழ்வின் முக்கியத்து வத்தை உணர்ந்து இங்கு கலந்துகொண்டிருப்பது சிறப்பானது.
இன்றைய தினம் ஆவணப் படம் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட இருக்கும் இளையோர்களுக்கு எனது நன்றிகள் உரித்தா கட்டும். நீங்கள் தான் எமது நம்பிக்கை நட்சத்திரங்கள். உங்களிடம் எமது மக்கள் நிறைய எதிர்பார்க்கின்றார்கள். உங்கள் செயற்பாடு களை நிறுவன மயப்படுத்தி அறிவை ஆயுதமாகப் பயன்படுத்தி எமது விடிவுக்காக நீங்கள் நிறையவே சாதிக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றார்.

https://thinakkural.lk/article/139756

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.