Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

45000 மின்னியலாளர்களுக்கு, இலவச தேசிய தொழில் தகைமை – உரிமம் வழங்கப்படும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

45000 மின்னியலாளர்களுக்கு, இலவச தேசிய தொழில் தகைமை – உரிமம் வழங்கப்படும்!

October 6, 2021

spacer.png

மின்னியலாளர்களுக்கு NVQ 3 (தேசிய தொழில் தகைமை மட்டம் 3) இனை இலவசமாக பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாகிறது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை சுமார் 2000 மின்னியலாளர்கள் NVQ 3 சான்றிதழை பெற்று உரிமம் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளனர். இம்மாதத்தில் மேலும் சுமார் 1500 மின்னியலாளர்களுக்கு NVQ 3 இனை பெற்றுக் கொடுப்பதற்கான பரீட்சைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் 3ஆம் கட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாவதுடன், ஆண்டு நிறைவுக்குள் மேலும் 2500 மின்னியலாளர்களுக்கு NVQ 3 சான்றிதழ் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெளிவுபடுத்துகையில்,

நாட்டில் சுமார் 45000 மின்னியலாளர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் 95வீதமானோருக்கு முறையான தொழில் தகைமைகள் எதுவும் இல்லை. இதனால் அவர்களுக்கு தமது தொழில் துறையில் முன்னேற்றமடைவது கடினமாகும்.

அதுமாத்திரமன்றி தரமானமின்னியலாளர்கள் இல்லாமை மின்சார பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும். அதேவேளை,மின்னியலாளர் உரிமங்களை பெற்றுக்கொள்வதற்கு குறைந்தபட்சம் NVQ-3 தகைமை அவசியமாகும்.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்வகையிலேயே அனைத்து மின்னியலாளர்களுக்கும் இலவசமாக NVQ-3 இனைபெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுஆரம்பித்துள்ளது.

அதற்கமைய அனுபம் வாய்ந்த சகல மின்னியலாளர்களுக்கும் துரிதநடவடிக்;கையின் கீழ் எதிர்வரும் ஆண்டுக்குள் இலவசமாக NVQ-3சான்றிதழ்களை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்காகும்.

மின்னியலாளர்களுக்கு NVQ-3 சான்றிதழ்களை பெற்றுக் கொடுக்கும்வேலைத்திட்டத்திற்காக இலங்;கை பொதுப் பயன்பாடுகள்ஆணைக்குழுவானது, மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு, இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை மற்றும் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை ஆகிய நிறுவனங்களுடன் இவ்வாண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.

இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய தேசிய தொழில் தகைமை பரீட்சை மற்றும்கற்கைநெறி கட்டணம் ஆகியவற்றை மின்னியலாளர்கள் சார்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொறுப்பேற்கும்.

மின்னியலாளர்களுக்கு நான்கு நாட்களுக்குள் முன்னனுபவ மதிப்பீட்டு முறையின் (Recognition of Prior Learning-RPL based Evaluation) கீழ் NVQ-3 தகைமையைபெற்றுக் கொள்ள முடிவதானது இவ்வேலைத்திட்டத்தின் விசேட அம்சமாகும்.மின்னியலாளர்கள் NVQ-3சான்றிதழை பெற்றுக் கொண்டதன் பின்னர் மின்னியலாளர்களுக்கான தொழில் உரிமங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளதாகவும் திரு.ஜனக ரத்நாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.

மின்னியலாளர்கள் உரிமம் எதிர்காலத்தில்கட்டாயமாக்கப்பட்டு விதிமுறைகள் விதிக்கப்படும். இதுவரை மின்னியலாளர்களுக்கு 4 தரங்களின் கீழ் உயர்வினை பெற்றுக் கொள்ளும் வகையில் தொழில் உரிம முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைபொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபைஉள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து இந்த உரிமம் வழங்கும் முறை திட்டமிடப்பட்டுள்ளது.உரிமம் பெற்றுக் கொள்வதற்கான குறைந்தபட்ச தகுதி NVQ-3 ஆகும்.நாம் தற்போது அனைத்து மின்னியலாளர்களுக்கும் NVQ-3 சான்றிதழை இலவசமாக பெற்றுக் கொடுக்கின்றோம்.

அதனால் அனைத்து மின்னியலாளர்களுக்கும் தொழில்உரிமத்தை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். மின்னியலாளர் தொழில் உரிமம் வழங்கும்நடவடிக்கை மாவட்ட மட்டத்தில் இம்மாதம் முதல் ஆரம்பிப்பதற்கும்.

நாம் திட்டமிட்டுள்ளோம்.மின்னியலாளர்களுக்கு இலவச NVQ-3 சான்றிதழ் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பான மேலதிக விபரங்கள் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் Facebook.com/pucsl உத்தியோகப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தின்ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

அதேவேளை 0764271030 என்ற இலக்கத்திற்கு உங்களது பெயர் மற்றும் மாவட்டத்தை வட்ஸ்அப் ஊடாகஅனுப்பி வைப்பதன் மூலம் மின்னியலாளர்கள் இவ்வேலைத்திட்டற்காக பதிவு செய்து கொள்ள முடியும்.

https://globaltamilnews.net/2021/166908

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.