Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

-பண்டோரா பேப்பேர்ஸ்-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-பண்டோரா பேப்பேர்ஸ்-

-திறக்கப்பட்ட பெட்டகமும் அவிழ்க்கப்பட்ட முடிச்சுகளும்-பா.உதயன் 
—————————————————————————————————————
ஆசை இல்லாத மனிதன் எவரும் இல்லை.ஆனால் அளவு கடந்த பணத்தின் மேல் இவ்வளவு ஆசை ஒரு மனிதனுக்கு ஏற்படுமா ஆசை கொண்ட மனிதர்கள் இத்தனை பில்லியன் டாலர் பணத்தை எப்படிச் சேர்த்தார்கள். வரி ஏற்பு, ஊழல், கருப்பு பணம் என்று மக்களின் பணத்தை ஏமாத்த எப்படி அந்த நாட்டின் தலைவர்களால் கூட முடிகிறது.சட்டத்தின் கண்களை எல்லாம் குருடாக்கிவிட்டு மக்களின் பணங்களை கொள்ளை அடித்து வெளி நாடுகளில் சொகுசு மாளிகைகள், சொகுசு வாகனங்கள், நட்ச்சத்திர விடுதிகள், பெரும் மாடி வீடுகள் இப்படிப் பல சொத்துக்களை சேர்த்த மோசடிக்காரர்களின் அதிசய பண்டோரா பெட்டகத்தின் கதவை (the International Consortium of Investigative Journalists) சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர் கூட்டமைப்பு உடைத்துத் திறந்துதிருக்கிறது. 

பண்டோரா என்பது கிரேக்க மொழியில் பெண் கடவுளைக் குறிக்கும் இவளின் கையில் கொடுக்கப்பட்டதே பண்டோரா என்னும்  ஒரு அலாவுதீன் விளக்குப் போன்றதோர் புதையல் பெட்டகம் .இது ஓர் அதிசயப் பெட்டகம் யாரும் இதை இலகுவில் திறந்து விட முடியாதா ஒரு அதிசயக் கதவு. இந்த அதிசய பெட்டகத்தை திறந்தால் பெரும் அதிசயமும் அழிவும் துன்பமும் வெளி வரும் . 

இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணக்களை சுமார் 500 புலணாய்வுப் பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து சுமார் 190 கோடி இரகசிய ஆவணங்களை வெளியுட்டுள்ளனர். ஏங்கிப்போய் நிற்கிறார்கள் மோசடிக்காரர்கள். உலக மூலதனத்தில் முக்கால் வாசிக்கு மேற்பட்ட சொத்துக்களை இப்படியான  முதலாளித்துவ உலக தனி உடைமை முதலாளிகளிடம் போய் சேர்ந்திருக்கிறது. முக்கியமாக அமெரிக்கா, பெரிய பிரித்தானிய, பிரான்ஸ் போன்ற நாடுகளாகும். அதே போல் முன்பு ஒரு காலம் சோஷலிச கம்யூனிச சித்தாந்தக்களை கொண்ட நாடுகளும் அதன் அதிபர்களும் எவ்வளவு பெரிய மோசடிகளை செய்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது ரசிய அதிபர் பூட்டின் உட்பட. பசி, பஞ்சம், நோய் இப்படி எத்தனையோ கோடி மக்கள் உலகில் ஒரு வேளை உணவுக்கே தின்றாடும் போது எந்த மனித நேயமும் இன்றி இவ்வளவு பெரிய பணத்தை கொள்ளை அடித்த இந்த பெரிச்சாளிகளை என்னவென்று சொல்லுவது.

சுமார் 91 நாடுகளின் நிகழ்கால கடந்த கால தலைவர்கள், அதிபர்கள், அரசியல் வாதிகள் , அமைச்சர்கள், தனி நப வியாபாரிகள், கோடீஸ்வரர்கள், நடிகர்கள்,யோர்தான் மன்னர், ரஷ்ய அதிபர், பிருத்தானியாவின் முன்னை நாள் பிரதமர் ரொனி பிளேயர் இப்டியே பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்த நீண்டதொரு பட்டியலை வெளியிட்டு  பண்டோரா பேப்பேர்ஸ் பெரும் பரபரப்பை உலகில் ஏற்படுத்தி உள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் இலங்கை நடப்பு ஆட்ச்சியாளர் ராஜபக்ச குடும்பத்தின் உறவினர்களான நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் உட்பட பெரும் பில்லியன் டொலர் பெறுமதியிலான சொத்துக்களை வெளி நாடுகளில் வேண்டிக் குவித்துள்ளனர். 

இனி வரும் காலங்களில் இன்னும் பல மோசடி முதலைகளின் பெயர்கள் வெளி வரலாம். இந்தியாவின் தமிழ் நாட்டு நடிகர்கள் அரசியல் தலைவர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் எத்தனை கொள்ளையர்கள் மக்களின் பணத்தை திருடியிருக்கிறார்கள் என்று. ஜனநாயக நாடுகள் என்றும் சட்டம் ஒழுங்கை பேணுபவர்கள் என்றும் அடுத்தவருக்கு ஜனநாயகப் பாடம் எடுக்கும் நாடுகள் எப்படி இந்த மோசடியை பார்த்தும் பார்க்காமலும் இருந்திருக்கிறார்கள் . எல்லாமே சட்டதிற்கு அப்பால் சில ஒப்பந்தங்களுடன் தான் நடந்தேறுகின்றன. இது ஒரு முடிந்த கதை இல்லை இன்னும் தொடர் கதையாக தொடரவே உள்ளன.

நாட்டின் சொத்துக்களை திருடும் இந்த நாட்டின் தலைவர்கள் ஆட்சியாளர்களை அரசியல் வியாபாரிகளை தனி நபர் கொள்ளையர்களை மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும். நாட்டையும் மக்களையும் ஏமாற்றுபவர்களை தூக்கி வீச வேண்டும்.சட்டத்தின் பிடியில் இவர்களை தண்டிக்க வேண்டும். சில நாடுகளில் சட்டமே நீதியின் கையில் இல்லாதபோது யாரை யார் தண்டிப்பது. குற்றவாளியே தண்டனையில் இருந்து தப்பி பின் கதவுகளால் வெளியெ வருகிறான். இங்குதான் அதிகாரப் பிரிவு என்று சொல்லக்கூடிய(Separation of Power) அதிகாரங்களைப் பிரிப்பதற்கான நவீன கோட்பாட்டின் பிரான்ஸ் தேசத்தின் அரசியல் சிந்தனையாளரின் மான்டெஸ்கியூ வரையறை செய்த நீதி, நிர்வாகம், சட்டம் தனித்து இயங்க முடியாமல் உள்ள போது ஜனநாயக்கத்தோடு சேர்ந்த ஒரு நீதியை நாம் பெற்றுக் கொள்வது சந்தேகமே.இதனால் தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பிக்கொள்கிறார்கள்.

‘’Its a big club,you are not in it”

பா.உதயன் ✍️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.