Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பலமாகிறது அணுகுமுறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-07-21

அம்பலமாகிறது அணுகுமுறை

தொப்பிகலவைக் கைப்பற்றி, கிழக்கை முழுதாக மீட்டுவிட்டோம் என்ற வீரச் செருக்கோடு நேற்று முன் தினம் நாட்டு மக்களின் முன் மார்தட்டிப் பேசினார் இலங் கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினை விடயத் தில் தமது அரசு என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள் ளது என்பதைத் துலாம்பரமாக அவர் வெளிப்படுத்தி யிருக்கின்றார்.

அவரது வார்த்தைகளுக்கு இடையில் வாசகங் களுக்கு மத்தியில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்களைப் புரிந்து கொண்டால் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான அவரது கருத்தியல் நிலைப்பாட் டையும் சிந்தனைப் போக்கையும் துல்லியமாக உணர்ந்து அறிந்து கொள்ள முடியும்.

இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணுங் கள் என்று வாய் சலிக்காது, வலியுறுத்தி வரும் அமெரிக் காவிலிருந்து அடுத்த நாடான இந்தியாவரை முழு சர்வ தேச சமூகமுமே, ஜனாதிபதி மஹிந்தரின் நிலைப்பாட்டை அவரது இந்த உரையினூடாகப் புரிந்துகொள்ள முயன் றால், இப்பிரச்சினையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் தரப்புக்கு நியாயம் கிடைக்க அதுவே வழி சமைத்ததாகி விடும்.

தற்போதைய அமைதி முயற்சிகளுக்கு அடிப்படை யாக ஆதாரமாக இருப்பதே சர்வதேச சமூகத்தின் பங் களிப்போடு உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் தான்.

அந்த ஒப்பந்தம் குறித்து அதிபர் மஹிந்தர் என்ன கூறு கின்றார்? அது அநியாயமான நடவடிக்கை என்கிறார் அவர்.

இலங்கைத் தீவில் இலங்கை அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கட்டுப்பாட்டில் தனித்தனி யாக இரு வெவ்வேறு நிர்வாகப் பிரதேசங்கள் இருக்கின் றன என்ற யதார்த்தத்தின் மீதுதான் இந்த யுத்தநிறுத்த ஒப் பந்தமே கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றது.

அந்த அடிப்படையையே தகர்க்கும் விதத்தில் அதன் மூலம் முழு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையே சிதைத்து விடும் பாங்கில் முழங்குகின்றார் மஹிந்தர்.

""பயங்கரவாதத்திற்கு சட்டரீதியான அதிகாரப் பிர தேசமொன்று இருக்கின்றது என்பதை உடன்படிக்கை ஒன்றின் மூலம் ஏற்றுக்கொண்டதுபோன்ற அநியாயமான செயலொன்று இலங்கை யிலன்றி உலகில் வேறெங் குமே நடக்கவில்லை.'' என்கிறார் அவர்.

அதாவது புலிகளின் கட்டுப்பாட்டில் ஒரு பிரதேசம் உள் ளது என்ற யதார்த்தத்தை உடன்படிக்கை மூலம் ஒப்புக் கொண்டமை அநியாயம் என்கிறார் அவர்.

அந்த உடன்படிக்கை வாசகத்தை அதன் அடிப் படையை தாம் ஏற்றுக்கொள்ள மாட்டார், ஏற்றுக்கொள் ளப் போவதில்லை என்பதை தமது நடவடிக்கை மூலமே தாம் செயலில் உறுதிப்படுத்திக் காட்டியிருக்கின்றார் என் பதையும் அடுத்த வசனத்திலேயே அவர் வெளிப்படுத்துகிறார்.

""இந்தப் பிரதேச அதிகார மாயையை அம்பலப் படுத்தியதன் மூலம் பயங்கரவாதத்தின் ஈழக் கனவு சுக்கு நூறாகச் செல்லும் செய்தியையே தொப்பிகல மலை உச்சி யில் இருந்துகொண்டு எமது வீரம்மிக்க படை வீரர்கள் உலகுக்கு எடுத்துக் கூறினார்கள்.'' என்று அடுத்துக் குறிப் பிடுவதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகின்றார்?

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் புலிகளின் கட்டுப்பாட் டுப் பிரதேசம் என்று வரையறை செய்யப்பட்ட விட யத்தை நானும், எனது அரசும், எனது படைகளும் ஏற்கவே யில்லை. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தொப்பிகல வைக் கைப்பற்றி, அங்கிருந்து புலிகளை விரட்டியடித்து, முழு கிழக்கு மாகாணத்தையும் எனது அரசுப் படைகளைக் கொண்டு மீட்டதன் மூலம், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் புலிகளின் பிரதேசம் என்று குறிப்பிடப்படும் அம்சத்தை நாம் ஏற்கவேயில்லை என்பதை செயலில் உலகுக்கு வெளிப்படுத்தி அம்பலப்படுத்தியிருக்கின்றோ

:) இன்னும் புரியவில்லையா? உலகம் இலங்கை என்னும் ஒரு நாட்டிற்கு என்ன என்ன பிரச்சனைகள்

இருக்குதோ அவற்றை மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவி செய்து கைகொடுக்குது......

வெளி நாடுகளில் கைதுகள்

ஆயுத பணவுதவிகள்....

மனிதவுரிமை மீறல்கள் செல்லமாக கண்டித்தல்......

போர் நிறுத்த மீறல்கள்( ஏ 9 பாதை தொடக்கம். வாகரை,குடும்பிமலை நில ஆக்கிரமிப்பு தொடர்தாக்குதல்கள்

தொடர்தல்) கொலைகள், ஆயுத குழுக்கள் இப்படியே தொடர்வதும் எதுவிதமான உருப்படியான நடவடிக்கைகளும் இல்லாமல் தடுத்து நிறுத்தாமல் மௌனமாக இருப்பதன் மூலம் ஒரு சிறு பிள்ளைக்கும்

விளங்கும் இவ்விடையங்களும்....

சமாதானத்தை எதிர்பார்த்து வானத்தை பார்த்திருக்கும் தமிழ் மக்களுக்கு

பல் குழல் ஏவுகணை, விமானத்தாக்குதல், ஆக்கிரமிப்பு கைதுகள்,காணாமல் போதல்,பசி, பட்டினி,அவலச்சாவுகள் நடந்து கொண்டிருக்கு....

இவை தான் நவீன அகராதியில் இலங்கை சமாதானம் என்னும் சொல்லுக்கு கொடுக்கும் விளக்கம்...

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் சிந்தனைப்படி புலிகளை ஒழித்துவிட்டால் தமிழர் பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம், அதன்பின்னர் சிங்களவர்களை வடகிழக்கு எங்கும் குடியமர்த்தி தமிழர்களின் தாயகம் என்று ஒன்றில்லாமல் பார்த்துக்கொண்டால் வன்முறைகள் மீண்டும் தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளலாம். இவர் போன்றவர்கள் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினை என்பது புலிகள் இயக்கம் தோன்ற முன்னரே இருந்தன என்பதையும், அவ்வடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க புலிகளை அழித்தால் மட்டும் போதாது என்பதனையும் மறந்துவிடுகின்றார்கள். எனவே மகிந்த போன்ற பேரினவாதிகளினால் தமிழர்கள் மீது திணிக்கப்படும் எந்தத் "தீர்வும்" பயனற்றுப்போகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.