Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயர்பாதுகாப்பு வலயப் பிரகடனத்தை கண்டித்து வடக்கு - கிழக்கில் பணிப்புறக்கணிப்பு: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயர்பாதுகாப்பு வலயப் பிரகடனத்தை கண்டித்து வடக்கு - கிழக்கில் பணிப்புறக்கணிப்பு: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு

திருகோணமலை மாவட்டம் மூதூர், சம்பூர் பிரதேசங்களை உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியதை கண்டித்து வடக்கு - கிழக்கில் நாளை மறுநாள் புதன்கிழமை (25.07.07) பணிப்புறக்கணிப்பு கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை:

மூதூர் கிழக்கை அதியுயர் பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியதற்கு எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாளை மறுநாள் புதன்கிழமை (25.07.07) வடக்கு - கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கடமை புறக்கணிப்பும், கதவடைப்பும் செய்து அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிர்ப்புக் காட்டுமாறு தமிழ் பேசும் மக்களையும், அப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் சகோதர இன மக்களையும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 25 ஆம் நாள் கொழும்பில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மூதூர் கிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு கண்மூடித்தனமான வான், பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை மிகக் கொடூரமாக நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொது மக்களைக் கொன்றொழித்தும், ஆயிரக்கணக்கானோரை காயப்படுத்தியும் அப்பகுதி மக்களை உடுத்த உடுப்புடன் வெளியேற வைத்தது. இம்மக்களின் வீடு, வாசல்கள், உடைமைகள், கால்நடைகள், பாடசாலைகள், கோயில்கள், பொதுக்கட்டடங்கள் சேதமாக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் கல்வி, பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை முற்றாக சீரழிக்கப்பட்டுள்ளது.

மூதூர் கிழக்கில் ஏறக்குறைய 28 கிராமங் களில் 4,500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 16,000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தவர்கள். இப்பிரதேசத்தில் 19 பாடசாலைகளும் 25-க்கும் மேற்பட்ட வணக்க தலங்களும், பல பொதுக் கட்டடங்களும் இருந்தன. வளமான வயல் நிலங்களையும் தோட்ட நிலங்களையும் 88 சிறு குளங்களையும் உள்ளடக்கிய பிரதேசம் இது.

ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் பல கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வீடமைப்புத் திட்டங்களையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் இன்று அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களிலும் மூதூர், கிளிவெட்டி அகதி முகாம்களிலும் பல துன்ப துயரங்களுடன் முடங்கிக் கிடக்கின்றனர். காணாமல் போதல், கொலை செய்யப்படுதல் போன்ற சம்பவங்களுக்கு இம் முகாம் மக்களும் விதிவிலக்கல்ல.

மூதூர், சேருவில பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாகியும் மூதூர் கிழக்கு மக்களைப் பொறுத்தளவிலே எவ்வித ஆக்கமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதற்குப் பதிலாக இப்பிரதேசத்தை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் அப்பிரதேச அபிவிருத்தியில் எதுவித அக்கறையும் கொள்ளாத அரசு அப்பகுதி மக்களை விரட்டியடித்து விட்டு அபிவிருத்தி செய்ய முனைவது வேடிக்கையாகவுள்ளது.

இம் மனித உரிமை மீறல் செயற்பாடுகளைக் கண்டித்து எவ்வித வன்செயல்களிலும் ஈடுபடாது சாத்வீக முறையில் வீடுகளிலிருந்து தங்கள் அனைவரின் எதிர்ப்பை அரசுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் உணர்த்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் தாங்கள் ஒவ்வொரு வரும் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு மனப்பூர்வமான நன்றியையும் தெவித்துக் கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.