Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிதானம் இழந்துவிட்ட சனாதிபதியும் விதானம் இழந்துவிட்ட அரசாங்கமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிதானம் இழந்துவிட்ட சனாதிபதியும் விதானம் இழந்துவிட்ட அரசாங்கமும்

- முரளிமாறன்-

இப்போது குடும்பிமலையைப் பிடித்துவிட்டதாக கூறி, 19ம் திகதி அதனைக்கொண்டாடும் நிகழ்வுகளும் முடுக்கிவிடப்பட்டது. இந்தியப்படையால் முடியாத ஒன்றை சிறீலங்கா இராணுவம் செய்துவிட்டதாகக் அவர்கள் கூறுகிறார்கள்.

இலங்கையில் இந்தியப் படைகள் தங்கியிருந்த காலகட்டத்தில் இந்தியப் படைகளுக்கு கிழக்கில் தலைமை தாங்கிய இந்திய இராணுவ அதிகாரி அசோக் மேத்தா “கிழக்கு மாகாணத்தில் தொப்பிகல காட்டுப்பகுதி எந்தவிதமான கேந்திர முக்கியத்துவமும் அற்றது” எனக்கூறிய பின்னரும் தொப்பிகல என்ற மாய மானை பிடித்துவிட முப்படைகளின் பிரதம தளபதியான சனாதிபதி உத்தரவுகளை படைகளுக்குப் பிறப்பித்தார்.

மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், கப்பம், காணாமல் போதல், கொலைகள் என சர்வதே சமூகம் போர்க் கொடி தூக்கி நிற்கின்றது. உள்நாட்டில் ஐ.தே.கட்சி, ஜே.வி.பி, மங்கள சமரவீரவின் அணி என மகிந்த ராஜபக்சவிற்கு மும்முனைகளிலிருந்து நெருக்குதல்கள். மறுபுறம் முகமாலை, திகம்பொத்தன, காலி துறைமுகம் என பாரிய தாக்குதல்களை தொடுத்த விடுதலைப் புலிகள் மன்னார் தம்பனை, விளாத்திக்குளம் பகுதிகளிலும், தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பலத்த சேதத்தை உண்டாக்கினர்.

அதற்கு முன்பு, வவுனியா பம்பைமடுவில் இராணுவக் கட்டமைப்புக்கு பௌதீக ரீதியான சேதத்தை உருவாக்கி படைகளின் உளவியல்ரீதியான திறனை சிதைத்தனர். இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் விதானம் இழந்து விட்டது. மூன்றாம் தரமத்தியஸ்த்துடன் பேச்சுவார்த்தையை விரும்புகின்றது.

ஆனால் ஒரு பாரிய இராணுவ வெற்றியையும் பெரிதும் விரும்புகின்றது. இதனால்தான் யுத்த மையைத்தை தொப்பிகல காட்டிற்குள் நகர்த்தியது. ஊடகங்கள் மீதான கெடுபிடிகள் தான் ஒரு இராணுவ வெற்றியைப் பெற்று விட்டதாகவும், இலங்கையின் அச்சு ஊடகங்களுக்கும் இலத்திரனியல் ஊடகங்களுக்கும் தனது இந்த வெற்றியைக் கொண்டாட பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்து பக்கபலம் சேர்க்க வேண்டும் என்று பெரிதும் மகிந்த ராஜபக்ச ஆசைப்படுகின்றார்.

இதனால்தான் 2003ம் ஆண்டு இலங்கை தண்டனைச்சட்ட கோவையிலிருந்து நீக்கப்பட்ட குற்றவியல் அவதூறு சட்டத்தை மீளவும் கொண்டு ஊடகங்களுக்கு கடிவாளமோ வாய்ப்பூட்டோ போட்டுவிட ஆசைப்படுகின்றார். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கைவிடப்பட்ட இந்த சட்ட விதிகளை மீளவும் கொண்டுவர எண்ணுகின்றார். சனநாயக சுதந்திரத்தின் காவல் நாய்கள் ஊடகங்கள் என்பது சர்வதேச மரபு.

ஆனால், இலங்கையிலோ அமைச்சர் ஒருவர் ஊடகவியலாளர்களை விசர்நாய்கள் என்கிறார். அரசபடையினர், ஊடகவியலாளர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையைக் கண்டதும், அவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகின்

றார்கள். இன்று எல்லா மொழி பேசும் ஊடகங்களும் மகிந்த ராஜபக்ச அரசைக் கண்டிக்கின்றன. லேக்கவுஸ் பத்திரிகைகளும் அரச தொலைக்காட்சியுமே அவருக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன.

தனது சனநாயக விரோதப் போக்குகளோடு உடன்பாடு கொள்ளாத தனியார் ஊடகங்களை ஒடுக்கும் நோக்குடன்தான் இந்த குற்றவியல் அவதூறு சட்டத்தை கொண்டுவர சனாதிபதி முயல்கின்றார். உபாயங்களும் ஆயுதங்களும் கடந்த காலங்களிலும் தென்னிலங்கையில் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் மகிந்த இராஜபக்ச காலத்திற்கு காலம் ஒவ்வொரு ஆயுதங்களை கையில் எடுத்து வந்துள்ளார்.

நோர்வே அனுசரணையாளர்களை வெளியேற்றுமாறு ஜே.வி.பி ஆர்ப்பாட்டங்களை நடத்திய போதும், விடுதலைப் புலிகளை தடைசெய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய கோரியபோதும், இனவாதியான சனாதிபதியால் இனவாதக் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. சனாதிபதி தேர்தலின் போது அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.

இங்கே யதார்த்தங்களுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. விடுதலைப் புலிகளை தடை செய்தால் இனப்பிரச்சினை பற்றி யாருடன் பேசுவது? இது உள்ளூர் யதார்த்தம். நோர்வேயை வெளியேற்றினால் யாரை அடுத்து அனுசரணையாளர்களாக அழைப்பது? நோர்வேயை தவிர்க்காது எந்த ஒரு நாடும் அனுசரணைப்பணிக்கு வராது.

விடுதலைப் புலிகளும் நேர்வேயின் அனுசரணைப் பணிகளைத்தவிர எந்தவொரு நாட்டையும் ஏற்கமாட்டார்கள். இது சர்வதேச யதார்த்தம். இந்த இரண்டு யதார்த்தங்களையும் மகிந்தரால் மீறமுடியவில்லை. இதனிடையே மகிந்தரிடம் இன்னுமொரு கோரிக்கை ஜே.வி.பியினரலும் ஜாதிகஹெல உறுமயவினாலும் முன்வைக்கப்பட்டன.

இதன்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை 14 நாட்கள் முன்னறிவித்தல் கொடுத்து இரத்துச் செய்து அதனின்றும் வெளியேறுமாறு இரு இனவாதக்கட்சிகளாலும் கோரப்பட்டன. அதையும் மகிந்த ராஜபக்ச ஏற்கவில்லை. இதனால் அரச பேச்சுவார்த்தைக்குழு தலைவர் நிமால் சிறிபால டிசில்வா, போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அறிவிப்பு ஒன்றைச் செய்தார்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு கோரி கொழும்பில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பிக்குகள் தமது போராட்டத்தை கைவிட்டார்கள். போர்றிறுத்த ஒப்பந்தம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே ஒழிய அரசின் தேசிய பாதுகாப்பு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த அல்ல என பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

வான்புலிகளின் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது. காரணம் வான்புலிகள் தென்னிலங்கையின் கட்டுநாயக்கா முத்துராஜவல, கொலன்னாவ முதலான இடங்களில் நடாத்திய வான் தாக்குதல்களேயாகும். இதனால், தென்னிலங்கையில் அரசியல் நெருக்கடி எற்பட்டது. விடுதலைப் புலிகளினால் புதிதாக திறக்கப்பட்ட வான்வழிப் போர் முனை சிங்கள மக்களுக்கு மனக்கிலேசத்தையும் சிங்களப்படைகளுக்கு உளவலியையும் ஏற்படுத்தியது.

இதைச்சமாளிக்க விரும்பிய மகிந்த ராஜபக்ச, இன்னொரு ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அதுவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து போருக்கு போவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பொதுசன வாக்கெடுப்பு என்ற அறிவிப்பாகும்.

சிங்கள மக்களே இது தொடர்பாக தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பார்கள் என அவரது அமைச்சரவை பேச்சாளர்கள் விளக்கம் கொடுத்தார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் போர்நிறுத்த ஒப்பந்தத்திலேயே போர்நிறுத்தத்தை இரத்து செய்வது பற்றி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதற்கு கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து பொதுசன வாக்கெடுப்பு நடத்தத் தேவை

யில்லை என்று மகிந்த ராஜபக்சவுக்கு விளக்கம் கொடுத்தார்கள். அத்தோடு அந்த அறிவிப்புப் புஸ்வானமாகப் போனது. மறுபக்கம் இராணுவத் தீர்வில் பூரண நம்பிக்கை வைத்து படுகொலைகளை தீவிரப்படுத்திய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் நிலப்பிரதேசங்களை ஆக்கிரமித்து அங்கு வாழ்ந்த மக்களை அவலநிலைக்குத் தள்ளியது.

இடம்பெயர்ந்த மக்களின் நலனில் அக்கறை கொண்ட சர்வதேச அமைப்புக்களின் செயல்பாடுகள் மகிந்த ராஜபக்சவின் முகத்திரையைக் கிழித்தன.

ஆனால், நில ஆக்கிரமிப்புக்களின் போலித்தன்மையை சாதாரண சிங்கள மக்கள் எவ்வளவு காலத்திற்கு நம்பப் போகிறார்கள்?

- ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.