Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தவிர்க்கவே முடியாத யுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்கவே முடியாத யுத்தம்

போராட்டம் நிறைந்ததாக மாறியிருக்கின்றது இந்தப் பூமிப் பந்து. எங்கும் போர், யுத்தம், புரட்சி.

விடுதலையின் பெயரால் சுதந்திரம், சமத்துவம், நீதி, நியாயம் வேண்டி மக்கள் புரட்சிகளை நடத்துகின்றார்கள். போர்களை முன் னெடுக்கின்றார்கள். அழிவுகள் அரங்கேறுகின்றன; அவலங்கள் பீடிக்கின்றன; அனர்த்தங்கள் நீடிக்கின்றன.

போரியலின் கொடூரத்தில் சிக்கி நிற்கும் இலங்கை மக்களும் இது தேவைதானா அவசியம்தானா தவிர்க்கமுடியாத தளையா என்று எக்கணமும் சிந்தித்துக் கலங்கும் அளவுக்குக் கோர யுத்தக் கொடுமைகள் அவர்களை வாட்டி வதைத்து வறுத்தெடுத்து நிற்கின்றன. வெந்தணலாகத் தவிக்கும் யுத்தத்தின் குரூரப் பிடிக்குள் அல்லலுறும் அந்த மக்களின் நினைவெல்லாம் இந்த அகோர யுத்தம் அவசியமா என்பதுதான்.

பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் மேலாண்மைத் திமிருக்கு அடக்குமுறைக்கு எதிரான சிறுபான்மை இனத் தமிழர் களின் எழுச்சியும் புரட்சியுமே இன்று இலங்கைத் தீவைக் கொடூரப் போருக்குள் மீள முடியாமல் ஆழ்த்தி நிற்கின்றன. இந்த சன்னதம் கிளர்ச்சி தேவைதானா? இரத்தக்களரி வேண்டியதுதானா? அத்தகைய சுதந்திர வேட்கையும், விடுதலைத் தேடலும் அவசியம்தானா? நம் மனதைக் குடையும் நியாயமான கேள்விகள் இவை.

மனிதன் சுதந்திரமாக வாழ விதிக்கப்பட்டிருக்கின்றான். (Man is Condemned to Freedom) என்றார் பேரறிஞர் ஜோன் போல் சாத்தர். சுதந்திரம் அவனது தவிர்க்கமுடியாத தலைவிதி பிறப்புரிமை என அறை கூவல் விடுக்கிறார் அவர்.

சுதந்திரம் பற்றிய மனிதனின் பிரக்ஞை, தவிர்க்க முடியாத நிரந்தரத் தேடலுக்கான மானசீக இலட்சியமாக விளங்குகின்றது. மனதின் கற்பித இலக்காக, மனித இருப்பின் மையவிசையாக சுதந்திரம் மிளிர்கின்றது. அதையே இலக்காகக் கொண்டு மனித வாழ்வியக்கம் அசைகிறது. மனித வரலாறும் அதைத் தேடியே விரிகிறது.

"சுதந்திரம்' என்று நாம் கூறுவது கருதுவது மனவுலகின் மானசீக விவகாரம் அல்ல. அது சமூக வாழ்நிலையோடு சம்பந்தப் பட்டது; பின்னிப் பிணைந்தது. அடிமைத் தளைகளில் இருந்து விடுபடுவதையும் மனித மேம்பாட்டையும் அது குறிக்கோளாகக் கொண்டது.

நிஜவுலக நிர்ப்பந்தங்களால் ஒரு மனிதக் கூட்டத்தைக் கட்டுப் படுத்தி, மட்டுப்படுத்தி, அவர்களின் வாழ்வியல் இயக்கங்களை அதிகாரச் செல்வாக்கினால் அடக்கி, ஒடுக்கி, அவர்களது வாழ் வியல் விழுமியங்களை மனவுலகச் சிறைக்குள் அடைத்து, சிதைத்து, சுதந்திரத்தைப் பறித்து நசுக்கி, அடிமைச் சிறைக்குள் முடக்கும் மேலாதிக்க ஆட்சியின் அரூபப் போக்கை உலகின் பல்வேறு தேசங்களிலும் பல்வேறு மக்கள் கூட்டங்கள் இன்று சகிக்க முடி யாமல் தாங்கமுடியாமல் சகித்துத் தாங்கிக்கொண்டிருக்கின்றன.

கறுப்பின மக்களுக்கு எதிரான அடிமைத் தளையை அமெ ரிக்க தேசத்தில் ஆபிரகாம் லிங்கன் அடியோடு நீக்கிவிட்டார். ஆனால் நமது தேசங்களில் ஜனநாயகக் கேலிக் கூத்தின் பெயரால் அடிமைத்துவ அபத்தம் தொடர்கின்றது; அவலம் நீடிக்கின்றது.

"ஜனநாயக சிறப்பின்' கீழ் ஆட்சி அதிகாரத்தை தன்வசம் வைத்திருக்கும் பெரும்பான்மை இனம், தன்னோடு அதே மண்ணில் வசிக்கும் சிறுபான்மை இனத்தை சமத்துவமாகப் பார்க்க மறுக்கின்றது. வரலாற்றின் பெயரால் புனைந்து விடப்பட்ட பொய் களிலும், திரிக்கப்பட்ட கதைகளிலும் மூழ்கிப்போன பெரும்பான்மை இனம், மற்றைய சிறுபான்மை இனத்தை சகோதரத்துவத்துடன் நோக்க மறுக்கிறது. பகையுறவுடனும், விரோதப் போக்குடனும், காழ்ப்புணர்வோடும் பார்த்துத் தனது அதிகாரச் செல்வாக்கின் மூலம் சிறுபான்மை இனத்தை அடக்கி, ஒடுக்கி, நசுக்கி, அழித்து இல்லாதொழிக்க நினைக்கின்றது.

இந்த அடக்குமுறையின் குரூரமாக சிறுபான்மை இனத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து அடிமைப்படுத்தும் பேரவலம் இந்த மண்ணில் கடந்த அறுபது ஆண்டுகளாக அரங்கேறி வருகின்றது.

சிறுபான்மையினரான தமிழரின் தேசிய வாழ்விற்கு அத்தியா வசியமான ஆதாரமான அடித்தளங்களைப் படிப்படியாகத் தகர்ப்பதும், ஒன்றுபட்ட தேசிய இனக் கட்டமைப்புடன் தமிழ் மக் கள் தழைத்து நிற்பதற்கு அவசியமான கட்டுமானங்களை ஒரே யடியாகச் சிதைத்து நாசப்படுத்துவதன் மூலம் தமிழினத்தின் தனித்துவத்தை இல்லாமல் அழிப்பதும் பேரினவாதத்தின் தந்தி ரோபாயமாக இருக்கிறது.

இந்த பல்முனை பலமுக இன அழிப்புத் தாக்குதல் முதலில் தமிழரின் இன அடையாளத்துக்கும் தனித்துவத்துக்கும் ஆதாரமாக இருக்கும் மொழி உரிமை மீது கை வைத்தது. அடுத்து தமிழர்களின் கல்வி உரிமைக்கும், வேலைவாய்ப்பு உரிமைக்கும் ஆப்பு வைக் கப்பட்டது. தமிழரின் இனப் பரம்பலுக்கு ஆதாரமான தாயக மண் மீதான உரிமையைப் பறிக்கும் விதத்தில் திட்டமிடப்பட்ட சிங் களக் குடியேற்றங்கள் வலிந்து திணிக்கப்பட்டன. சொத்துரிமை பிடுங்கப்பட்டது.

தமிழ் இனத்தின் ஸ்திரத்தையும் வாழ்வாதாரங்களையும் அழித்தொழிக்கும் இனக் கலவரங்கள் மிகக் கொடூரமான முறையில் காலத்துக்குக் காலம் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இறுதியாகத் தமிழினத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் நாசகார யுத்தத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டது பேரின வாதம்.

பிரிட்டனிடமிருந்து இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் காலம் முதல் சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் கைமாறியது முதல் இந்தக் குரூர அடக்குமுறை அரசியல், அதிகார, நிர்வாக, வன்முறை எனப் பல வடிவங் களில் தமிழினம் மீது தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. மாறிமாறி ஆட்சிப்பீடம் ஏறிய சகல அரசுகளும் இந்த அடக்குமுறைக் கொள்கைகளையே ஒன்றுக்கு நிகராக மற்றது போட்டி போட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன.

டி.எஸ்.சேனநாயக்கவிலிருந்து இன்றைய ஆட்சியாளர்கள் வரை இலங்கையின் சிங்களத் தலைவர்கள் ஒவ்வொருவரினதும் அந்தரங்க ஆன்மாவுக்குள் பேரினவாதப் பிசாசு நிலையாகக் குடி கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

இந்த ஆளும் பேரினவாத அதிகாரவர்க்கத்திடமிருந்து நீதி, நியாயம், கௌரவமான வாழ்வு, சமத்துவம் என்பவை சமரச வழிகளில் கிடைக்கமாட்டாது என்பதால்தான் தமிழ் இளைஞர்கள் வேறு வழியின்றி ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட் டார்கள்.

சுதந்திரம் அன்பளிப்புச் செய்யப்படுவதில்லை. "மயிலே! மயிலே! இறகு போடு!' என்று கேட்டால் மயில் இறகு போடப் போவதில்லை. பிடுங்கித்தான் எடுக்கவேண்டும். அது போல சுதந் திரம் போராடித்தான் பெற வேண்டும். அது தவிர்க்க முடியாதது.

அதுவும்,பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள் சிக்குண்டிருக்கும் சிறுபான்மையினரின் சுதந்திரம்,பேரினவாதத்தின் போக் கில் மனமாற்றம் ஏற்பட்டு, அது நியாயமாக நடக்க முன்வராத வரையில் போராடியே பிடுங்கி மீட்கப்பட வேண்டும்.

எனவே, இலங்கைத் தீவில் யுத்தம் தேவையா, அது தவிர்க்கப் படக்கூடியதா என்ற கேள்விக்கு பதில் தரவேண்டியது பேரின வாத அதிகாரவர்க்கமே. அது நீதியாக நடக்க நியாயம் செய்ய முன் வராத வரையில் யுத்தத்தைத் தவிர்ப்பது இயலாத காரியமே!

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.