Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பீரிஸின் இந்திய விஜயத்தில் நடந்தது என்ன?​​​​​​​

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பீரிஸின் இந்திய விஜயத்தில் நடந்தது என்ன?

அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இந்திய விஜயம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக வெளிவிவாகர அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 பெப்ரவரி 06 – 08 வரை இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கரின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அமைச்சர் தனது முதலாவது விஜயத்தை புது தில்லிக்கு மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோரை சந்தித்தார். இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவும் வெளிநாட்டு அமைச்சரை சந்தித்தார்.

இரு அமைச்சர்களுக்குமிடையிலான சந்திப்பும், அதனைத் தொடர்ந்து பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் பெப்ரவரி 07ஆம் திகதி புது தில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சரின் அழைப்பிற்காகவும், தனக்கும் தனது தூதுக்குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகவும் அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பரிவர்த்தனை உறவில் இருந்து மூலோபாய பங்காளித்துவமாக பரிணமித்துள்ளமையை சுட்டிக்காட்டிய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இலங்கை எப்பொழுதும் நம்பியிருக்கக்கூடிய உண்மையான நண்பன் இந்தியாவாகும் என்பதை இலங்கை மக்கள் அதிகளவில் அங்கீகரித்திருப்பதாகத் தெரிவித்தார். இந்த நிலையில், தற்போதைய நெருக்கடியான தருணத்தில் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை அமைச்சர் பீரிஸ் பாராட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு எப்போதும் இலங்கைக்கு ஆதரவானதாக இருக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.

பொருளாதார ஒத்துழைப்பு, வலு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு, இணைப்பு, மக்களுக்கிடையிலான தொடர்பு போன்றவை உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட திருகோணமலை எண்ணெய்த் தாங்கி பண்ணை ஒப்பந்தம் குறித்தும் விசேட கவனம் செலுத்திய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பை எடுத்துக் காட்டுவதாகவும், அதனால் இரு நாடுகளுக்கும் வெற்றிகரமான சூழ்நிலையில் கணிசமான நன்மைகளை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளிலான ஒத்துழைப்பிற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்திய இக்கலந்துரையாடலில், மருந்துகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தி போன்ற முன்னுரிமைத் துறைகளில் இந்திய முதலீடுகளுக்கான சாத்தியக்கூறுகளை மையப்படுத்தி அமைச்சர் பீரிஸ் இந்திய முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்தார். இலங்கையில் சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறச் செய்வதற்காக அபிவிருத்தியடைந்து வரும் இந்திய வெளிப்புற சுற்றுலாவை பயன்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்திய – இலங்கை உறவின் வேகத்தைத் தக்கவைக்கும் நோக்கில், பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நிலுவையில் உள்ள பல ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முன்கூட்டியே இறுதி செய்வதற்கு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, மீன்பிடி சார்ந்த பிரச்சினை குறித்தும் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடினார். இதனை ஒரு முக்கியப் புள்ளியாகக் குறிப்பிட்ட வெளிநாட்டு அமைச்சர், ஒரு வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டு மீண்டும் மீண்டும் எழும் பிரச்சினையாக இது மாறியுள்ளதாக சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அனைத்து இருதரப்புப் பொறிமுறைகளையும் ஒன்றுகூட்ட வேண்டிய அவசரத் தேவை குறித்து இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அமைச்சர் பீரிஸ் அழைப்பு விடுத்தார். 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் பீரிஸ் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு பெப்ரவரி 08ஆந் திகதி இடம்பெற்றது. இரு நாடுகளினதும் பரஸ்பர மூலோபாய நலன்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரும் கலந்துரையாடினர். இதன்போது, இருதரப்பு உறவின் நிலை மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்கால ஒத்துழைப்பிற்கான முன்னுரிமைப் பகுதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

புது தில்லிக்கான விஜயத்தின் போது, இந்தியாவின் முக்கிய பல அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களையும் வெளிநாட்டு அமைச்சர் சந்தித்தார்.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் புது தில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்புக்களில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடன் இணைந்திருந்தனர்.

 


http://www.samakalam.com/பீரிஸின்-இந்திய-விஜயத்தி/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.