Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணையைக் கொண்டுவருவோம் - பிரதான எதிரணி அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணையைக் கொண்டுவருவோம் - பிரதான எதிரணி அறிவிப்பு

(நா.தனுஜா)

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை, மறுபுறம் ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணையைக் கொண்டுவருவதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதுடன் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நீக்கி, 19 திருத்தத்தில் காணப்பட்ட சிறந்த விடயங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவத்றகு நடவடிக்கை எடுக்கக்கூடிய இடைக்கால அரசாங்கத்துடனேயே தமது கட்சி இணையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை  [11.04.2022]  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

 இன்றளவிலே நாடளாவிய ரீதியில் 'கோ ஹோம் கோட்டா' (வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா) என்ற கோஷம் மிகவும் வலுவாக ஒலிக்கின்றது.

இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உரத்தை வழங்குமாறுகோரி விவசாயிகளிடமிருந்து ஆரம்பித்த போராட்டம், இப்போது ஒட்டுமொத்த நாட்டுமக்கள் மத்தியிலும் வியாபித்துள்ளது. கடந்த இரு தினங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைதந்திருக்கும் மக்கள் காலிமுகத்திடலில் தங்கியிருந்து 'கோ ஹோம் கோட்டா' என்ற கோஷத்துடன் போராடுகின்றார்கள்.

இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச நாடுகள் பலவற்றிலும் வாழும் இலங்கையர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்கள். இந்த அரசாங்கத்தைப் பதவியில் அமர்த்தியவர்களே இப்போது அவர்களைப் பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றனர்.

 இவ்வாறானதொரு பின்னணியில் பிரதான எதிரணி என்ற அடிப்படையில் நாம் முன்னெடுக்கவேண்டிய விடயங்கள் அடங்கிய யோசனையைக் கட்சிக்குள் நிறைவேற்றியிருக்கின்றோம்.

அதன்படி முதலாவதாகத் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன், அதற்கு ஆதரவாகக் கையெழுத்துப்பெறும் நடவடிக்கைகள் கடந்த வாரமே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

அதேவேளை ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணையைக் கொண்டுவருவதற்கும் தீர்மானித்துள்ளோம்.

அதற்கு ஆதரவாக 113 உறுப்பினர்கள் கைச்சாத்திடும் பட்சத்தில், அதனை விவாதத்திற்கு எடுப்பதா? இல்லையா? என்பதை சபாநாயகர் தீர்மானிக்கவேண்டும். ஆனால் அதில் 150 பேர் கையெழுத்திட்டால் சபாநாயகரின் அபிப்பிராயம் அவசியமற்றதாக மாறும்.

 அதேவேளை ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணையை நிறைவேற்றி, அவரை நீக்கியதன் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள ஜனாதிபதி முறைமையைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் அனைவரும் எதிர்பார்க்கின்ற பலனை அடைந்துகொள்ளமுடியாது. ஆகவே அடுத்தகட்டமாக எமது நாட்டிற்குப் பலவருடகாலமாக நெருக்கடியை ஏற்படுத்திவரும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதுடன், அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நீக்கி, 19 ஆவது திருத்தத்தில் உள்ள சிறந்த விடயங்களை மீண்டும் நடைமுறைக்குக்குக் கொண்டுவரவேண்டும் என்பதில் அக்கறையுடன் இருக்கின்றோம்.

 இவ்விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் எமது கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்.

எனவே மேற்கூறப்பட்ட எமது நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்படுகின்ற இடைக்கால அரசாங்கத்திற்கு மாத்திரமே நாம் ஆதரவு வழங்குவோமே தவிர, கோட்டாபய ராஜபக்ஷ அல்லது மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்படுகின்ற அரசாங்கத்தில் ஒருபோதும் இணையமாட்டோம் என்றார். 

 

https://www.virakesari.lk/article/125686

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.