Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயுதங்களுடன் கருணா குழு தேர்தலில் போட்டியிடலாம்: சிறிலங்கா அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்களுடன் கருணா குழு தேர்தலில் போட்டியிடலாம்: சிறிலங்கா அழைப்பு

[புதன்கிழமை, 1 ஓகஸ்ட் 2007, 20:39 ஈழம்] [கொழும்பு நிருபர்]

கிழக்குப் பிரதேசத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கருணா குழுவினரைப் பங்கேற்குமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கிறது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது:

கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலை அரசாங்கம் விரைவில் நடத்த உள்ளது. தற்போதைய நிலையில் ஆயுதங்களுடன் இருக்கும் கருணா குழுவினரும் இந்த தேர்தலில் போட்டியிடுவர். அவர்களது ஆயுதங்களைக் களைவது அவர்களது பாதுகாப்பிற்கு சிறந்ததல்ல. தற்போதைய சூழ்நிலையில் அவர்களுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகின்றது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது.

புலிகளுக்கு கிழக்கில் ஆதரவு இருந்தால் அவர்களும் தேர்தலில் போட்டியிடலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தோ அல்லது தனித்தோ புலிகள் போட்டியிடலாம். அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் கருணா குழுவினர் கட்டாயமாக தேர்தலில் போட்டியிட வேண்டும். அப்போது தான் கிழக்கில் ஐனநாயகம் மலரும்.

கருணா குழுவினர் தேர்தலில் போட்டியிடுவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. அதாவது கருணாவின் கட்சியை பதிவு செய்வதில்தான் அந்த சிக்கல் உள்ளது. அந்த சிக்கல்களை நிவர்த்திக்கும் பணியில் அரசு தற்போது ஈடுபட்டுள்ளது.

கருணா குழுவினர் ஆயுதங்களை கீழே வைத்தால் புலிகள் அவர்களை கொன்று விடுவார்கள். அதற்காகவேனும் கருணாவுக்கு ஆயுதங்கள் தேவை. கருணா ஆயுதங்களைக் கீழே வைத்தால் ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா, புளொட் சித்தார்த்தன் போன்றோரும் ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும். அப்படி ஆயுதங்களைக் கீழே வைப்பது புலிகளுக்கு சாதகமாகிவிடும். புலிகள் அவர்கள் அனைவரையும் கொன்று விடுவார்கள்.

எனவே கருணா குழுவினர் ஆயுதங்ளுடனேயே தேர்தலில் போட்டியிடுவர். தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் தமது ஆயுதங்களைக் கைவிடலாம்.

புலிகளைத் தோற்கடிக்கும் விடயம் ஒரு "அரசியல்" என்பதை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் சம்பந்தப்படாத விடயங்களில் அனைத்துலகம் தலையிட முடியாது. கிழக்கில் புலிகளைத் தோற்கடிக்கும் நடவடிக்கைக்கு அனைத்துலகம் அழுத்தம் கொடுக்கவில்லை. அதேபோல வடக்கிலும் அழுத்தங்களை அது கொடுக்காது என்று நம்புகிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் வலதுகையாக வெளிநாடுகளில் செயற்பட்டு வருகிறது. அண்மையில் சிவாஜிலிங்கம் லண்டனில் தமது ஆதரவாளர்களைத் திரட்டி அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதற்காக ரணிலை பதவியேற்ற வேண்டுமாம்.

வன்னியில் தாக்குதல்கள் தொடங்கும் முன்னர் ரணிலை பதவியேற்ற வேண்டும் என்று அவர் அந்த கூட்டத்தில் கூறியிருப்பதை வைத்து பார்க்கின்ற போது அனைத்துலக ரீதியில் ஏதோ சூழ்ச்சிகள் நடப்பது புலனாகிறது.

குடும்பிமலைப் பிரதேசத்தை இராணுவத்தினர் கைப்பற்றியதற்கு எதிராக ரணில் கூறியது ஒரு தேசத்துரோகமாகும். ரணிலின் செயற்பாடுகளால் இன்று அவரைவிட்டு பலர் பிரிகின்றனர். இரண்டு பேரை தன்னுடன் இணைக்கப்போய் அவர் தற்போது திலக் கருணாரட்னவை இழந்து விட்டார்.

நாடாளுமன்றத்தில் வரவு - செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது அரசுடன் உள்ள 20 பேர் ஐ.தே.கவுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனையும் பார்ப்போம். மங்களவுக்கு உப பிரதமர் பதவியைப் பெற்றுக்கொடுப்பதற்காக 20 பேர் அரசுடன் சேர்வார்களா?

அரசாங்கத்தின் பின்னால் மக்கள் கூட்டம் இருக்கிறது. நாங்கள் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம். அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் தொடரும் என்றார் அவர்.

புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் கருணா போட்டியிட்டால் தான் கிழக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும்

வீரகேசரி நாளேடு

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பிரதேசத்தில் விரைவில் உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்படவுள்ளது. அந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போட்டியிடுவது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. கிழக்கில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் கருணா தரப்பினரையும் போட்டியிடுமாறு கோருகின்றோம் அந்த தேர்தலில் கருணா போட்டியிட்டால் தான் அங்கு ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் தேர்தலில் தங்களது தரப்பினரின் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய நிலை கருணா தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. கிழக்கில் தேர்தல்கள் முடிந்ததன் பின்னர் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது என்று அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணன்டோபுள்ளே தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

கிழக்கில் நடைபெற்றவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் கருணா தரப்பினரை போட்டியிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கிழக்கில் புலிகளுக்கு ஆதரவு இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அல்லது தனியாக தேர்தலில் புலிகளும் போட்டியிடலாம். அந்த தேர்தலில் விசேடமாக கருணாவை போட்டியிடுமாறு கோருகின்றோம் அப்பொழுது தான் கிழக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும்.

கருணாவின் அரசியல் கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் தேர்தல்கள் திணைக்களத்தில் கட்சியை பதிவு செய்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. அந்த சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜே.வி.பி தேர்தலில் முதன் முறையாக போட்டியிடுகின்ற போது தங்களது பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருந்தனர் அன்று இருந்த நிலை இன்று கிழக்கில் இல்லை .கிழக்கில் நடைபெறும் தேர்தல்களின் போது பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருக்கலாம் எனினும் தேர்தல்கள் முடிந்ததன் பின்னர் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது.

கருணா தரப்பினர் ஆயுதங்களை கீழே வைத்தால் டக்ளஸ்,சித்தார்த்தன் போன்ற குழுக்களும் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் அவ்வாறு ஆயுதங்கள் கீழே வைக்கப்பட்டால் புலிகள் சகல குழுவினரையும் கொன்றுவிடுவார்கள். ஜனநாயக நீரோட்டத்தில் இணைவதற்காக கிழக்கில் நடைபெறவுள்ள தேர்தல்கள் முடியும் வரை அந்த குழுவினர் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருக்கலாம் என்றார்.

கிழக்கு உள்ளுர்ராட்சித் தேர்தலில் கருணா அணியினர் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டுப் பங்கு பற்ற வேண்டும்.

அரசின் சார்பில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அழைப்பு.

'அரசால் மீட்கப்ட்டிருக்கும் கிழக்கில் முழுமையான ஜனநாயகம் நிலவ வேண்டும்என்றால் கருணா தரப்பினர், ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அங்கு நடைபெறப்போகும் உள்@ராட்சி சபைத் தேர்தலில் போடடியிட்டு அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டும். அதே போல புலிகளும் இத் தேர்தலில் இதே நிபந்தனையுடன் போட்டியிடலாம்."

இவ்வாறு அமைச்சர் ஜெயராஜ் நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியவையாவது:-

அரசால் கைப்பற்றபட்டிருக்கும் கிழக்கில் உள்@ராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசு தீர்மானித்துள்ளது. கிழக்கில் புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி மக்களைப் புலிகளின் பிடியில் இருந்து மீடடெடுத்த அரசு. இத்தேர்தலின் ஊடாகக் கிழக்கின் முழுமையான ஜனநாயகத்தை நிலை நடாட்ட முற்படுகிறது. இத் தேர்தலில் எத்தரப்பினரும் போடடியிடலாம். ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு இத் தேர்தலில் போட்டியிட முன்வருமாறு ஆயுதக் குழுக்களை அழைக்கின்றோம்.

குறிப்பாக, கருணா அணியினர் இத் தேர்தலில் போட்டியிட வேண்ம் என்று நாம் விரும்புகிறோம். அவர்கள் தமது ஆயுதங்களை தற்போது கீழே வைக்க முடியாத நிலையில் உள்ளனர்.

புலிகள் கருணா அணியினரைக் கொன்று விடுவார்கள் என்ற நிலை இருப்பதானலேயே கருணா அணியினர் ஆயுதங்களை ஏந்தியிருக்கின்றனர் என்பதை நாம் உணர்கிறோம்.

கருணா அணியினருக்கு மாத்திரமல்ல, ஈ.பி.டி.பியினர், ஆனந்தசங்கசர, சித்தார்ததன் ஆகியோருக்கும் புலிகளால் ஆபத்துள்ளது. ஆகையால புலிகளின் அச்சுறுத்தல் இருக்கும் வரை இவர்களால் நிச்சயம் ஆயுதங்களைக் கீழே வைக்க முடியாது.

இருப்பினும், தேர்தல் காலத்தில் இவர்கள் ஆயுதங்களுடன் தேர்தலில் போடடியிட அரசு ஒருபோதும் அனுமதிக்காது. ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டே இவர்கள் போடடியிட வேண்டும்.

கருணா அணியினரை ஓர் அரசியல கட்சியாகப் பதிய முடியாதா நிலை தேர்தல் ஆணையாளருக்கு ஏற்பட்டிருப்பதால், அதைப் பெரிதுபடுத்தாது வேறு கட்சிகளில் அல்லது சுயேச்சைக் குழுக்களில் இணைந்து அவர்கள் போடடியிடலாம். என்றார்.

நன்றி : சுடா ஒளி

மஹிந்தவை நீக்கி ரணிலை ஜனாதிபதியாக்க புலிகளும், தமிழ்க் கூட்டமைப்பும் முஸ்தீபு!

இப்படி கதை விடுகிறார் அமைச்சர் ஜெயராஜ்

மஹிந்த அரசைக் கலைத்து எதிர்க்கட்சித தலைவர் ரணிலை ஜனாதிபதியாக்கும் சதி முயற்சியில் த.தே.கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே நேற்றுத் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் கூட்டமைப்பினர் இது தொடர்பான பிரசாரத்தை மேகொண்டுள்ளனர் என்றும புலிகளின் உத்தரவுடனேயே ரணிலை ஜனாதிபதியாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளானர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இத்தகவலை அவர் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது :

கிழக்கில் புலிகள் தற்போது முற்றாக இழந்துள்ளனர். மீதியாகவுள்ள வடக்கைத் தக்கவைத்துக் கொள்ளும் தேவை புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதை நன்குணர்ந்துள்ள த.தே.கூட்டமைப்பினர், புலிகளின் தேவையை நிறைவேற்ற வித்தியாசமான திட்டம் ஒன்றை வகுத்தச் செயற்படுகின்றனர்.

மஹிந்த ஆட்சியைக் கலைத்து, அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ரணிலை ஜனாதிபதியாக்குவதன் மூலமே வடக்கைத் தக்க வைக்கும் புலிகனின் தேவையை நிறைவேற்ற முடியும் எனக் கருதி கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்;.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் லண்டனில் இது தொடர்பாகப் புலிகளின் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். இச்சந்திப்பில் 150 புலிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

'வடக்கை தக்கவைத்துக்கொள்வதற்காக ரணிலை புலிகள் ஜனாதிபதியாக்க வேண்டும். அதற்காக முழுமையான ஆதரவையும் புலிகள் ரணிலுக்கு வழங்க வேண்டும்". என்று சிவாஜிலிங்கம் அச்சந்திப்பில் புலிகளின் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

த.தே.கூட்டமைப்பினரும் புலிகளும் இணைந்து எமது ஆட்சியைக் கவிழ்க்க ஜனாதிபதி பதவியில் இருந்து மஹிந்தவை நீக்க முயற்சி செய்கின்ரனர்.

நாம் புலிகளுக்குப் பணம் கொடுத்தோம் என்று ஐ.தே.கட்சியினர் கூறுகின்றனர். உண்மையாகவே புலிகளுக்கு ஆதரவாகச் செயறபடுகிறவர்கள் யாரேன்பது இப்போது தெரிகின்றது.

ரணில் ஜனாதிபதியாவதன் மூலம் புலிகள் உயிருடன் வாழ்வர் என்றும் வடக்கு-கிழக்கு அரசால் கைப்பற்றப்படாமல் போகும் என்றும் புலிகளுக்கும் த.தே.கூட்டமைப்பினரும் உறுதியாக நம்புகின்றனர். அதுதான் நிலைமை.

ரணில் ஜனாதிபதியனால் நிச்சயம் புலிகள் மீண்டும் பலம் பெறுவர். பயங்கரவாதச் செயற்பாட்டை மீண்டும் துரிதப் படுத்துவர். இந்த மாதிரியான நிலை மீண்டும் ஏற்பட அரசு ஒரு போதும் இடம் கொடுக்காது. இந்த ஆட்சியைக் கவிழ்க்கும் இவர்கள் கனவு ஒரு போதும் எடுபடாது. என்றார்.

நன்றி : சுடர் ஒளி

ஜெயராஜ் ஒரு கோமாளி போல இருக்கு

லூசு மகிந்தன் இருக்கும் போது ஏன் ரணிலை மாற்ற வேண்டும் இதன் மூலம் தெனிலைங்கை அரசியலை தீர்மானிக்கும்சக்தி புலிகளுக்கு இருக்கு என்பதை ஒத்து கொள்கின்றாரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.