Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதமரை பதவி விலகுமாறு நான் ஒருபோதும் கூறவில்லை - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரை பதவி விலகுமாறு நான் ஒருபோதும் கூறவில்லை - ஜனாதிபதி

(இராஜதுரை ஹஷான்)

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஒருபோதும் குறிப்பிடவில்லை சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண சகல தரப்பினரும் பொறுமையுடனம், பொறுப்புடனும் செயற்பட வேண்டும். 

பொருளாதார நெருக்கடியுடன், அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்தால் மக்களின் போராட்டம் இன்னும் தீவிரமடையும் ஆகவே ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் கௌரவமாக செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும முதுகிற்கு பின்னால் இருந்து கத்தியால் குத்தும் நபரல்ல,அவரை பற்றி நான் நன்கு அறிவேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (28) இரவு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது வாதப்பிரதிவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. 

உறுப்பினர்களுக்கிடையிலான கருத்து முரண்பாடு எல்லை மீறி சென்றதை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் கூட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

சமூக கட்டமைப்பில் தீவிரமடைந்துள்ள எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்சார விநியோக தட்டுப்பாடு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய யதார்த்த நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டும் என இதன்போது முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டதை தொடர்ந்து கூட்டத்தில் அமைதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராட்சி முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மீது கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

'தான் ஒருபோதும் சூழ்ச்சி செய்யும் நபர் அல்ல,வெளிப்படை தன்மையுடன் செயற்படுவேன்,அரசாங்கம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை இதற்கு முன்னரும் குறிப்பிட்டுள்ளேன். அதற்கு எவரும் செவிசாய்க்கவில்லை. தற்போதும் குறிப்பிடுகிறேன் அரசாங்கம் புதுப்பிக்கப்பட வேண்டும்.' என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அதிகார போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.அது தீர்க்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவை நோக்கி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ 'என்னிடம் ஒன்றை கதைத்து விட்டு,கூட்டத்தில் பிறிதொன்றை கதைக்கின்றீர்கள்'என குறிப்பிட்டுள்ளார்.

கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களை நோக்கி  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 'டலஸ் அழகப்பெருமவை நான் அரசியலுக்கு கொண்டு வந்தேன், பின்பக்கம் இருந்து கத்தியால் குத்தும் நபர் அவர் அல்ல,அவரை பற்றி நான் நன்கு அறிவேன்'என குறிப்பிட்டுள்ளார்.

'பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு தான் ஒருபோதும் அறிவிக்கவில்லை' என ஜனாதிபதி இதன்போது குறிப்ப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியராட்சி இடைக்கால அரசாங்கத்தின் எண்ணக்கருவை விமர்சித்ததை தொடர்ந்து கூட்டத்தில் அiதியற்ற தன்மை தீவிரமடைந்தது. 

கூட்டத்தில் பறிமாற்றிக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் முரண்பாட்டை நோக்கி செல்லும் தன்மையில் காணப்பட்டதால் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் பிரதமர் கூட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/126586

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.