Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர்களின் கைகளில் தான் மகிந்த ராஜபக்ஸவின் ஜனாதிபதி பதவி உள்ளது : ரவூப் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்களின் கைகளில் தான் மகிந்த ராஜபக்ஸவின் ஜனாதிபதி பதவி உள்ளது : ரவூப் ஹக்கீம்

Written by Ravanan - Aug 03, 2007 at 02:35 PM

இலங்கையில் உள்ள சகல முஸ்லிம் கட்சிகளும் தன்னுடன் இருக்கின்றன என்று ஜனாதிபதி கூறி வருகிறார். 18 முஸ்லிம் அமைச்சர்கள் அரசில் அங்கம் வகிக்கின்றனர். இதனை கௌரவமாக பார்க்க முடியாது. இத்தகைய நிலை உண்மையிலேயே அவமானமாகும் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அமைச்சுப்பதவிகளுக்காக சமுகத்தையும் கௌரவத்தையும் விற்றுவிட்டுப் போவதற்கு தயாரானவர்கள் இவர்கள் என மற்றைய சமுகம் எம்மை பார்க்கிறது. இத்தகைய நிலை இனிமேலும் நீடிக்கக்கூடாதென நான் பிரார்த்திக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.

கிண்ணியாவில் செவ்வாய்க்கிழமை மாலை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது: ஜனாதிபதியின் தயவில்தான் அமைச்சர்கள் அனைவரும் இருக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி ஒன்றை மறந்துவிடக்கூடாது. இன்று அமைச்சர்களின் கைகளில் அவரும் இருக்கின்றார்.

ஜனாதிபதி சகலருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கியிருந்தாலும் அதிகாரத்துக்காக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மட்டத்தில் ஆசையுள்ளது. இன்று இலங்கையில் உள்ள எல்லா முஸ்லிம் கட்சிகளும் என்னோடுதான் இருக்கின்றன என்று ஜனாதிபதி கூறுகிறார். 18 பேர் முஸ்லிம் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

18 முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருப்பது இனிமேல் நடக்காத விடயம். இப்படியான நிலை இனிமேல் நடக்கக்கூடாது என நான் பிரார்த்திக்கிறேன். ஏனெனில் உண்மையிலேயே இது ஒரு அவமானம். இதனை கௌரவமாக யாரும் பார்க்க முடியாது. அமைச்சுப் பதவிகளுக்காக சமுகத்தையும், கௌரவத்தையும் நாங்கள் விற்றுவிட்டுப்போகத் தயாராக இருக்கிறோம் என்று மற்றவர்களுக்கு காட்டுகின்ற கேவலமான அரசியலைச் செய்பவர்களாகவே மற்ற சமுகம் எங்களைப் பார்க்கிறது.

அரசோடு இருந்து அரசில் நடப்பவைகளை நடப்பவைகளாகவே வெளிப்படையாக விமர்சிக்கின்ற அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் செய்ய வேண்டும். நாங்கள் பகிரங்கமாக விமர்சனம் செய்கிறோம். இதன் மூலம் மற்றைய கட்சிகளுக்கும் சில செய்திகளை நாங்கள் ஏத்தி வைக்கிறோம்.

கிழக்கு மாகாண கொடிகளில் யாருக்கும் தெரியாமல் மிருகங்களைப் போட்டிருக்கிறார்கள். திருகோணமலைக்கு கழுகு, அம்பாறைக்கு சிங்கம் என்று சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்னவென்றும் யாரால் வந்தது என்றும் யாருக்கும் தெரியாது. ஆனால் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு பீதி உருவாகிவிட்டிருக்கிறது.

கிழக்கை பிரித்ததின் உண்மையான உள்ளார்ந்தம் இதுதானா என்று கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு சொல்வதெல்லாம் தயவு செய்து உங்களுடைய தனித்துவமான அரசியல் பிரதிநிதித்துவங்களுக்காக நீங்கள் போராட வேண்டும்; உங்களுக்கு திராணியுடன் பேசுகின்ற சக்திகளை நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதுதான்.

முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான நோக்கமும் அதுதான். நாங்கள் இரட்டைவேடம் போட்டுக்கொண்டு செயற்படுவதாக சிலர் மேடைகளில் பேசித் திரிகிறார்கள். ஒருபோதும் நாங்கள் இரட்டை வேடம் போட்டது கிடையாது. வேசதாரிகளாக மேடைகளில் எமது அரசியலைச் செய்யாமல் மிக வெளிப்படையாக சொல்கிறோம்.

புதிய சூழல் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பற்றி நாங்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. கிழக்குப்பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற அதீதமானஆசை இன்று அரசாங்கத்துக்கு வந்திருக்கிறது.

இதற்குப்பின்னால் உள்ள நிகழ்ச்சி நிரல் என்ன என்பதைப்பற்றி நாங்கள் அவதானமாக இருக்கவேண்டும். இதை அரசாங்கத்துக்குள் இருந்து பேசுவது மட்டுமன்றி, அதை அவதானித்துக்கொண்டு எங்களுக்கு செய்யப்படுகின்ற அவமானங்களையெல்லாம் சகித்துக்கொண்டு, நடக்கப்போகின்ற அநியாயங்களைத் தட்டிக்கேட்கின்ற திராணியை எங்களிடம் நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும். அந்த முதுகெலும்பு எமக்கு வேண்டும். எங்களுக்கு அந்த முதுகெலும்பு இருப்பதற்கு காரணம் நாங்கள் எந்தக் கட்சியிடமும் தங்கியிருக்காமையே ஆகும்.

இன்று இரு பிரதான அரசியல் கட்சிகளும் தங்களுக்கே உரிய வாக்கு வங்கிகளுக்கு ஏற்ற விதமாகப்பேசிக்கொண்டிருக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.