Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`கிழக்கின் உதயம்' சிங்கள ஆக்கிரமிப்புக்கான அரசாங்கத்தின் உபாயம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`கிழக்கின் உதயம்' சிங்கள ஆக்கிரமிப்புக்கான அரசாங்கத்தின் உபாயம்? -(அஜாதசத்ரு)

[05 - August - 2007]

அரசபடையினரால் கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது என்று பிரகடனப்படுத்திய அரசாங்கம் அது தொடர்பான தேசிய விழாவொன்றை கொழும்பு சுதந்திரசதுக்கத்தில் கொண்டாடியதுடன் அது தொடர்பான நிகழ்வுகளை அரச ஊடகங்கள் மூலம் பெரும் பிரசாரங்களிலும் ஈடுபட்டது.

இதனைவிட `கிழக்கின் உதயம்' என்ற பாரிய அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான ஆரம்ப நிகழ்வுகளையும் கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் ஆரம்பித்துவைத்துள்ளது.

1987 இல் அப்போதைய மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்தன ஆகியோரால் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நம்பிக்கையொன்றை விட்டுச் சென்ற வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை உயர் நீதிமன்றத்தின் ஊடாக இல்லாதொழிப்பதற்கு துணைபோக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியாளர்கள் விழாக்களில் முழுமையான இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்து சுமார் இரண்டு இலட்சம் மக்களின் வாழ்விடங்களை அழித்தொழித்து அகதிகளாக்கிய பின்னர் `கிழக்கின் உதயம்' என்ற வெற்றிக்களிப்பை பிரகடனப்படுத்தியது.

முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தை இவ்வருடம் ஜனவரியின் ஆரம்பத்தில் ஆக்கிரமித்த அரச படையினர் பின்னர் அங்கிருந்து வெளியேறிய மக்களை கட்டாயத்தின்பேரில் மீளக் குடியேற்றினர்.

பின்னர் மார்ச் மாதப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய படுவான்கரைப் பிரதேசம் மீது சுமார் ஒன்றரை மாதகாலமாக தொடர்ச்சியான பல்குழல் ரொக்கெட் தாக்குதல், ஷெல்வீச்சு மற்றும் விமானக்குண்டுத் தாக்குதல்கள் மூலம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அரசபடையினர் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் காரணமாக படுவான்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இவ்வாறு பெருமளவில் இடம்பெயர்ந்த மக்கள் அரச நிவாரண உதவிகள் மறுக்கப்பட்ட நிலையில் அரசசார்பற்ற நிறுவனங்களையும் இடம்பெயர்ந்த பிரதேசங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களினது உதவிகளுடன் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அகதி வாழ்க்கையை எதிர்கொண்டனர்.

சுமார் ஒன்றரை மாதகால இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் கிழக்கை மீட்டதாக அறிவித்த அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு மீளத் திரும்புவதற்கு அனுமதியளித்தது.

மீளக்குடியேறும் மக்களுக்கு வாரத்திற்கு ஒரு தடவை உலருணவுப்பொருட்கள் வழங்கப்படுமென்றும் அரச அதிகாரிகளினால் நஷ்டஈடு மதிப்பிட்டு அறிக்கைகள் கிடைத்த பின்னர் உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படுமென்றும் உறுதியளிக்கப்பட்டது.

எனினும் படுவான்கரைப் பிரதேசத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கு இதுவரை இரண்டு தடவைகள் மாத்திரமே குறிப்பிட்டளவு உலருணவுப் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் நஷ்டஈடு வழங்கப்படுவதற்கான மதிப்பீட்டு அறிக்கைகள் பிரதேச செயலக அதிகாரிகளால் மீள்குடியேற்ற அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளும் இதுவரைகாலமும் முன்னெடுக்கப்படவில்லையென்ற

கேட்பாரற்ற நாதியற்ற அகதிகளாக உலகம் முழுவது அலையும் கேவலமான இனம் ஈழத்தமிழினம்.

யாரும் எதுவும் செய்யலாம் தமிழன் என்றால்.... ஏன் என்றால் விடுதலையை கேட்ட்கிறான்...

அதனால் இருக்கிடம் கிடையாது... உணவு இல்லை கொலை, சித்திரவதை 1948 தொடக்கம் இன்றுவரை

அனுபவிக்காத துன்பங்களை இல்லை...

எதிரி திட்டமிட்டு தனது நடவடிக்கைகளை தனது இறைமையுள்ள நாடு என்ற உரிமையை வைத்து உலகத்திற்கு பொய்முகம் காட்டி தன் மக்களுக்கு இனவெறியூட்டி தொடகிறான்.....

தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஒரு நம்பிக்கையில் நாளை நாளை என்று இழப்பதற்கு ஒன்றுமில்லாமல்

ஒரு மனித அவலங்களில் ஒரு நெளியும் புழுக்கள் போன்ற 50வருடங்களு மேல் தொடரும் வாழ்க்கை..

இது கானல் நீராகுமா? அல்லது மாயமான் போன்றதா?

அல்லது நம்பிக்கை பிழைக்காதா? என்பதற்கு இன்னும் காத்திருக்கவேண்டியுள்ளது?....

ஆனல் எதிரி எப்படியாகினும் தான் சாதிக்க நினைத்த விடையங்களை போர் நிறுத்தம் அமுலில் செய்து முடிக்கிறான்....

மாயமானா? நம்பிக்கையா? சரிவரும் என்பதற்கு இன்னும் காத்தல் அழித்தலின் பின்னரா?படைத்தல் முடியவா?

பொறுத்தார் பூமியள்வாரா?

அல்லது அல்லது உள்ள பூமியும் இழப்பா? என்பது கடந்த கால அனுபவங்கள் பிழைக்காத படியால் ஒரு

நம்பிக்கை கீற்று தொடர்கிறது.....வடக்கும் கிழக்கும் எமது இரு கண்கள்.... ஒரு கண் மங்கிவிட்டது....

குணப்படுத்தக்கூடியது.......மருத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்பாரற்ற நாதியற்ற அகதிகளாக உலகம் முழுவது அலையும் கேவலமான இனம் ஈழத்தமிழினம்.

யாரும் எதுவும் செய்யலாம் தமிழன் என்றால்.... ஏன் என்றால் விடுதலையை கேட்ட்கிறான்...

அதனால் இருக்கிடம் கிடையாது... உணவு இல்லை கொலை, சித்திரவதை 1948 தொடக்கம் இன்றுவரை

அனுபவிக்காத துன்பங்களை இல்லை...

எதிரி திட்டமிட்டு தனது நடவடிக்கைகளை தனது இறைமையுள்ள நாடு என்ற உரிமையை வைத்து உலகத்திற்கு பொய்முகம் காட்டி தன் மக்களுக்கு இனவெறியூட்டி தொடகிறான்.....

தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஒரு நம்பிக்கையில் நாளை நாளை என்று இழப்பதற்கு ஒன்றுமில்லாமல்

ஒரு மனித அவலங்களில் ஒரு நெளியும் புழுக்கள் போன்ற 50வருடங்களு மேல் தொடரும் வாழ்க்கை..

இது கானல் நீராகுமா? அல்லது மாயமான் போன்றதா?

அல்லது நம்பிக்கை பிழைக்காதா? என்பதற்கு இன்னும் காத்திருக்கவேண்டியுள்ளது?....

ஆனல் எதிரி எப்படியாகினும் தான் சாதிக்க நினைத்த விடையங்களை போர் நிறுத்தம் அமுலில் செய்து முடிக்கிறான்....

மாயமானா? நம்பிக்கையா? சரிவரும் என்பதற்கு இன்னும் காத்தல் அழித்தலின் பின்னரா?படைத்தல் முடியவா?

பொறுத்தார் பூமியள்வாரா?

அல்லது அல்லது உள்ள பூமியும் இழப்பா? என்பது கடந்த கால அனுபவங்கள் பிழைக்காத படியால் ஒரு

நம்பிக்கை கீற்று தொடர்கிறது.....வடக்கும் கிழக்கும் எமது இரு கண்கள்.... ஒரு கண் மங்கிவிட்டது....

குணப்படுத்தக்கூடியது.......மருத?துவர்களுக்குதான் தெரியும் எது முக்கியம் என்று?......

அண்னை ரெண்டு கிழமைக்கு முன்னமே பிடிச்சிட்டாங்கள் எண்டு ஒத்துக்கொண்டாச்சு ஒப்பாரி வைச்சு என்ன பிரயோசனம் அடுத்த கட்டமா எப்பிடி பிடிக்கிறதெண்ட திட்டம் பற்றி தமிழ்செல்வன் அண்னா த சண்டே இன்டியனுக்கு பேட்டி குடுத்திருக்கிரார்.

Q: சம்பூர், வாகரை தொடங்கி தற்போது குடும்பிமலை (தொப்பிக்கல) என புலிகள் தரப்புக்கு அண்மைக்காலமாக பின்னடைவு ஏற்பட்டிருப்பது போலத் தோன்றுகிறதே... கிழக்கு மாகாணத்திலிருந்து முற்றிலுமாக புலிகளை விரட்டிவிட்டோம் என்றும் அதை தேசிய தினமாக கொண்டாடுவதாகவும் இலங்கை அரசு கூறுகிறதே?

A: கிழக்கில் எமது தாக்குதல் உத்தியினையே நாம் மாற்றியிருக்கின்றோம். எமது தந்திரோபாயத்தினை மாற்றியுள்ளோம். அங்குள்ள புவியியல் அமைவு, சூழ்நிலை கருதி அவை மாற்றப்பட்டிருக்கின்றனவே தவிர எமது படைக்கட்டுமானம் எவையுமே அங்கிருந்து அகற்றப்படவில்லை. பின்வாங்கிவந்ததாகவும் இல்லை. இனிவரும் காலங்களில் அங்கு எமது தாக்குதல்கள் தீவிரமடையும். சிறிலங்கா இராணுவம் பல தடவைகள் கிழக்கிலே பிரதேசங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாகவும் பின்னர் அவர்கள் விரட்டியடிக்கப்படுவதாகவும் காலம் காலமாக மாறி மாறி இடம்பெற்றிருக்கின்றது. இதனையே பெரும் கொண்டாட்டமாக கொண்டாடுவதென்பது சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை கிளப்பி விடுவதும் தற்போது சிங்கள மக்கள் மத்தியில் இந்தப் போரினால் எழுந்துள்ள அன்றாட வாழ்வியல் நெருக்கடிகளை, பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவுமே தவிர அதனைப் பெரியொரு வெற்றியாக யாரும் கருதவுமில்லை. அவர்களே அதனைப் பெரிதாக்கி கொண்டாடுகின்றார்கள். அத்தோடு தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துச் சிங்கள மயப்படுத்த முனைவதும் மகிந்த அரசின் நோக்கமாகும். இதை முறியடிப்பதற்கான தீவிர செயற்பாடுகளில் எமதும் எமது மக்களினுடைய செயற்பாடுகளும் தீவிரமடையும். சிங்களப் படைகளின் வெற்றிக் கொண்டாட்டங்கள் மிக விரைவில் சிங்களப் படைகளுக்கான பேரழிவாகவே முடியும்.

Q: இலங்கை இராணுவத்துக்கு உங்கள் முகாம்கள் மற்றும் திட்டங்கள் பற்றி கருணா குழுவினர் தகவல் கொடுப்பதாகவும் கிழக்கில் இராணுவத்தின் வெற்றிக்கு அது உதவியாக இருந்ததாகவும் சொல்கிறார்களே...

A: சிறிலங்கா இராணுவம் கருணா குழு போன்ற இந்த தேசவிரோத சக்திகளிடருந்து இப்படியான தகவல்களை பெறுவதென்பது உண்மைதான். அவை சிறிலங்காப் படைகளின் தாக்குதல்களுக்கு உதவியிருக்கலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

Q: உங்களது விமானங்கள் சாதாரணமான விமானங்கள் என்றும் இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என்றும் இலங்கை அரசாங்கம் கூறுகிறதே?

A: எமது விமானம் சாதாரண விமானமாக இருந்தால் அதனைச் சிறிலங்கா அரசாங்கப் படைகள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம். அந்த அரசின் அதி உச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட கோட்டைக்குள்ளேயே சென்று நாம் தாக்குதல்களை மேற்கொண்டு வெற்றிகரமாக திரும்பியிருக்கின்றோம். இப்படிக் குறிப்பிடுபவர்கள் அதனைத் தடுத்திருக்கலாமே!. மூன்று தடவைகளுக்கு மேல் நாம் தாக்குதல் நடத்தியிருக்கின்றோம். இவர்களின் இயலாமையை வைத்துக்கொண்டே நீங்கள் உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.