Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்விட்டர் முதலீட்டாளர்கள் டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க் மீது வழக்கு: காரணம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்விட்டர் முதலீட்டாளர்கள் டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க் மீது வழக்கு: காரணம் என்ன?

  • அனபெல் லியாங்
  • வணிக செய்தியாளர்
27 மே 2022
 

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஈலோன் மஸ்க் மீதும் ட்விட்டர் நிறுவனத்தின் மீது ட்விட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஈலோன் மஸ்க்கின் திட்டத்தை கையாண்டது தொடர்பாக இந்த வழக்கை முதலீட்டாளர்கள் தொடர்ந்துள்ளனர். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஈலோன் மஸ்க் தெரிவித்திருந்தார்.

கலிஃபோர்னியா பெருநிறுவன விதிகளை ஈலோன் மஸ்க் பலவழிகளில் மீறியதாக தங்கள் வழக்கில் முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க்கின் "தவறான அறிக்கைகள் மற்றும் சந்தை துஷ்பிரயோகம்" ஆகிய "சட்டவிரோத நடத்தை", பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் 'குழப்பத்தை' உருவாக்கியுள்ளது எனவும் முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒரு பங்குக்கு ஈலோன் மஸ்க் அளிக்க முன்வந்த 54.20 டாலர்கள் விலையைவிட ட்விட்டர் பங்கு விலை 27% குறைவாக உள்ளது.

வழக்கில் கூறப்பட்டுள்ளது என்ன?

ட்விட்டரில் தனக்கு கணிசமான பங்குகள் இருப்பதையும், நிறுவனத்தின் இயக்குநர் வாரிய உறுப்பினர் ஆவதற்கான தனது திட்டத்தையும் அறிவிப்பதை தாமதப்படுத்தியதன் மூலம் ஈலோன் மஸ்க் நிதி ரீதியாக பலனடைந்ததாகவும் அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

95 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்வோரைக் கொண்டுள்ள ட்விட்டர் பயனரான மஸ்க் வெளியிட்ட பல ட்வீட்கள் "தவறானவை" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் சமூக வலைதளத்தில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கையில் சந்தேகங்கள் இருப்பதால், அந்நிறுவனத்தை வாங்கும் தனது ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மஸ்க் வெளியிட்ட ட்விட்டர் பதிவும் இதில் அடங்கும்.

மே 13 அன்று அவர் பகிரப்பட்ட இந்த ட்வீட், "போலி கணக்குகள் பற்றி தெரிந்துகொண்டு, ட்விட்டர் பங்குகளுக்கான சந்தையில் திருகல் வேலை செய்யும் முயற்சியை மேற்கொண்டதாக" அவ்வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த ட்வீட்டை பதிவிட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, ட்விட்டர் ஒப்பந்தத்தை "முன்னெடுத்துச் செல்ல முடியாது" என்று கூறியதன்மூலம், ட்விட்டர் மீதான தனது குற்றச்சாட்டுகளின் தாக்கத்தை மஸ்க் "இரட்டிப்பாக்கினார்" என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் முதலீட்டாளர்களுக்காக இவ்வழக்கில் ஆஜராகும் வழக்குரைஞர்களுள் ஒருவரான ஃப்ராங்க் போட்டினி, பிபிசியிடம் கூறுகையில், மஸ்க் "நிறுவனத்தை வாங்குவதற்கான விலை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில், தான் 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்க விரும்பும் நிறுவனத்தை தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்" என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

"சான் பிரான்சிஸ்கோவில் நாங்கள் தொடுத்த இந்த வழக்கு, மஸ்க்கின் சட்ட விரோத நடத்தைக்கு பொறுப்பேற்க வைக்க முயல்கிறது" என போட்டினி தெரிவித்தார்.

இந்த வழக்கு குறித்த பிபிசியின் கேள்விக்கு ஈலோன் மஸ்க்கின் வழக்குரைஞர்கள் மற்றும் டெஸ்லா நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.

பிபிசி தொடர்புகொண்டபோது ட்விட்டர் நிறுவனம் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

 

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,POOL

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான வாய்ப்பை குறைக்க அல்லது ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான வழிகள் குறித்து மஸ்க் யோசிக்கலாம் என்று ஆய்வாளர்கள் ஊகித்துள்ளனர்.

ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் அல்லது பாட்கள் குறித்து தான் அக்கறை கொண்டிருப்பதாக பல சமயங்களில் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

மென்பொருள் மூலம் இயக்கப்படும் பாட் (Bot), தானாக ட்விட்டர் பதிவுகளை வெளியிடும். இந்த பதிவுகள் பெரும்பாலும் தவறான தகவல்களுடன் தொடர்புடையதாகும்.

மேலும் மார்ச் மாதம் ட்விட்டர் நிர்வாகக்குழுவில் ஒப்புக்கொண்ட 44 பில்லியன் டாலர்களை விட குறைந்த தொகையை செலுத்த முற்படலாம் என்பதையும் மஸ்க் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர், குறைந்த விலையில் ஒப்பந்தம் செய்வது "கேள்விக்கு அப்பாற்பட்டது அல்ல" என்று கூறினார்.

கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் கிளாஸ்-ஆக்ஷன் வழக்கு, முதலீட்டாளர் வில்லியம் ஹெரெஸ்னியாக் என்பவரால் இந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அவர் "தன் சார்பாகவும், இதேபோல் உள்ள மற்ற அனைவரின் சார்பாகவும்" வழக்கு தொடுத்திருப்பதாகக் கூறினார்.

'கிளாஸ் ஆக்ஷன்' வழக்கு என்பது, ஒரு குழுவினர் சார்பாக ஒருவரால் தாக்கல் செய்யப்படும் வழக்காகும்.

இந்த மாத தொடக்கத்தில், ட்விட்டர் அதன் நுகர்வோர் மற்றும் வருவாய் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய இருவர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தியது.

வணிக ரீதியிலான முக்கிய பணியிடங்களை தவிர பெரும்பாலான பணியமர்த்தலை ட்விட்டர் நிறுவனம் இடைநிறுத்திவிட்டது.

https://www.bbc.com/tamil/global-61605446

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ட்விட்டர் பேரத்தில் கண்ணாமூச்சி - விசாரணை வளையத்தில் ஈலோன் மஸ்க்

40 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக ஈலோன் மஸ்க்குக்கு எதிராக புலன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்துக்கும்-ஈலோன் மஸ்க்குக்கும் இடையே தொடர்ந்து வரும் இந்த சட்டப்போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மூலம் இந்த செய்தி கடந்த வார இறுதியில் வெளிச்சத்துக்கு வந்தது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஈலோன் மஸ்க் விசாரணை வளையத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், எந்த அம்சத்தின் மீதான விசாரணையை அவர் எதிர்கொள்கிறார் என்பது அம்மனுவில் குறிப்பிடப்படவில்லை. அதே சமயம், "பந்தை மறைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் முடிவுக்கு வர வேண்டும்," என்று ட்விட்டர் நிறுவனம் தனது மனுவில் கூறியுள்ளது.

இது குறித்து கருத்து கேட்க ஈலோன்மஸ்கை அணுகினோம். ஆனால், அவர் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

 

ஒப்பந்தத்தை இறுதி செய்ய கட்டாயப்படுத்தக் கோரி மஸ்க்குக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், தாங்கள் கோரிய ஆவணங்களை தர மறுத்த டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான ஈலோன் மஸ்கின் வழக்கறிஞர்கள், அது தங்களின் விசாரணை உரிமை என்று கூறியுள்ளனர் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

சில மாதங்களுக்கு முன்பு மஸ்க்கின் வழக்கறிஞர்கள், மத்திய அதிகாரிகளுடன் மேற்கொண்ட தகவல் பரிமாற்றங்களை தாக்கல் செய்யும்படி கேட்டதாகவும், அவர்கள் அதனை தரவில்லை என்றும் ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

செப்டம்பர் மாத கடைசியில் மஸ்கின் வழக்கறிஞர்கள், தடுத்து வைக்கப்பட்ட சில ஆவண ஆதாரங்களை அடையாளம் காண்பதற்கான சிறப்புரிமை குறிப்பை கொடுத்தனர்.

இந்த குறிப்பில், சந்தை முறைகேடுகளை தடுக்கும் சட்டத்தை அமல்படுத்தும் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துக்கு (SEC) மே 13ஆம் தேதி அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் வரைவு குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களை முறைகேடாக கையகப்படுத்தும் சட்டத்தை முன்னெடுக்கும் கொள்கையைக் கொண்ட மத்திய வர்த்தக ஆணையத்திடம் காட்டப்பட்ட ஸ்லைடு காட்சி குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் மற்றும் மஸ்க் இடையேயான கையகப்படுத்தும் ஒப்பந்தத்தை முடிக்க அனுமதிக்கும் வழக்கை நீதிமன்றம் தடை செய்த அதே நாளில் நீதிமன்ற கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒப்பந்தம் குறித்த கேள்விகள்

ட்விட்டரை கையகப்படுத்துவது பற்றிய மஸ்க்கின் விமர்சனங்கள் குறித்து அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கேள்வி எழுப்பியது.

கடந்த ஏப்ரல் மாதம், எஸ்இசி மஸ்க்கிடம் எழுப்பிய கேள்வியில், 9% ட்விட்டர் பங்குகளை வெளியிடுவது தாமதமான முடிவா? என்றும் இதனால் ஒரு செயலற்ற பங்குதாரராக இருக்க விரும்புவதாக ஏன் இது சுட்டிக்காட்டுகிறது என்றும் கேட்டது. இதன் பின்னர், தான் ஒரு தீவிர முதலீட்டாளர் என்பதை குறிக்கும் பங்கு வெளியீடுகளை மீண்டும் மஸ்க் தாக்கல் செய்தார்.

ஜூன் மாதம் மஸ்க்குக்கு எஸ்இசி எழுதிய கடிதத்தில், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அல்லது கைவிடும் அவரது கருத்தை வெளிப்படுத்தும் வகையில் பொது வெளியீட்டில் திருத்தம் கொண்டு வர திட்டம் உள்ளதா என்று கேட்டது.

மஸ்க்கின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ ராய்ட்டர் நிறுவனத்திடம் கூறுகையில் ட்விட்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது தவறாக வழிநடத்துவதாக கூறினார்.

"ட்விட்டரின் நிர்வாகிகள்தான் விசாரணையில் உள்ளனர்," என்று அவர் கூறினார்.

இது குறித்து ட்விட்டர் நிறுவனம் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக மஸ்க் அறிவித்த விவகாரம் இன்னும் தொடர்கிறது என்பது இந்த மனு தாக்கல் மூலம் தெரியவந்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கூறிய மஸ்க், அதில் இருந்து பின் வாங்கினார்.

அதன் பின்னர் தான் மஸ்குக்கு எதிராக ட்விட்டர் வழக்கு தொடுத்தது. தனது வார்த்தையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று ட்விட்டர் குறிப்பிட்டது.

இந்த நிலையில், ஒப்பந்தத்தை உறுதியாக செயல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஒப்பந்தத்தை செயல்படுத்த உள்ளதாக மஸ்க் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-63279329

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.