Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணா குழுவினரின் ஆயுதங்களைக் களைய ஐ.நா. அதிகாரி கோரிக்கை!

Featured Replies

இலங்கையிலிருந்து புறப்பட முன் தெரிவிப்பு

கருணா அணி போன்ற துணைக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா உயரதிகாரி ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கின்றார்.

நான்கு நாள் விஜயமாக இலங்கை வந்திருந்த அவர் நேற்று இங்கிருந்து புறப்பட முன்னர் ஊடுகவியலாளர் மாநாடடிலும், ஊடகங்களுக்குத் தனித்து பேட்டியளித்த சமயத்திலும் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உயர் நிலை அதிகாரியன ஜோன் ஹோம்ஸ் நேற்று முற்பகல் ஊடுகவியலாளர் மாநாட்டில் கலந்து கொள்ள முன்னர் ஜனாதிபதியை சுமார் 15 நிமிட நேரம் குறுகிய காலம் சந்தித்துப் பேசினார்.

ஊடகவியலாளர் மாநாட்டிலும் அதற்கு முன்னர் உடகவியலாளர்களைத் தனித்துச் சந்தித்த போதும் ஹோம்ஸ் தெரிவித்த விடயங்கள் வருமாறு:-

மனிதாபிமானப் பணியாளர்களின் பாதுகாப்பு இங்கு கவலைக்குரியதாக உள்ளது. அந்த நோக்கில் பார்த்தால் உலகில் அப்பணிக்கு மிக மோசமான இடம் இதுதான். கடந்த 18 மாதங்களில் 30க்கும் மேற்பட்ட தொண்டுப்பணியாளர்கள் இங்கு கொல்லப்பட்டிருக்கின்றார்கள

கருணா குழு ஆயுதத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக செய்த கொலை இன்னும் பல கொலைகள் இடம்பெறலாம்.

ஜ வெள்ளிக்கிழமைஇ 10 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

கிழக்கு மாகாணத்துக்கான சிறிலங்காவின் பிரதம செயலாளர் கேரத் அபயவீர அண்மையில் கருணா குழுவினால் சுட்டுக் கொல்லபட்டார் என்று நாம் செய்தி வெளியிட்டு 3 நாட்கள் கடந்த நிலையில் கருணா குழுவினர் அவருடைய கொலைக்கு நியாயம் கற்பித்திரந்தனர். கிழக்கு மாகாணம் இராணுவத்தால் ஆக்கிரமிக்கபட்ட நிலையில் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் கருணா குழுவின் ஆயுதங்களை களையுமாறு முஸ்லீம் அரசியல் கட்சிகள் சர்வதேச நாடுகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏன் இலங்கை அரசுக்கு ஆதரவான கட்சிகளான ஜெ.வி.பி மற்றும் ஜ.தே.கட்சி ஆகிய கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் புலிகள் நடமாட்டம் இருக்கின்றது என்று காட்டுவதன் ஊடாக தமது ஆயுதங்களை பாதுகாத்துக் கொள்ள கருணா குழு எண்ணியது. விடுதலைப் புலிகளால் செய்யபட்ட கொலை போன்று காட்டுவதற்காக கிழக்கு மாகாணத்தில் அரச அதிகாரியினை கொலை செய்தனர். இந்த கொலையுடன் கருணா குழு நின்றுவிடவில்லை. பிபிசி தமிழ் ஓசைக்கு பேட்டி கொடுத்த கருணா குழுத் தலைவர் கருணா கிழக்கு மாகாண அரச உயர் அதிகாரி கொல்லபட்டிருக்கிறார் ஆகவே எமது ஆயுதங்களை இப்போதைக்கு களையவேண்டாம் என்று அறைகூவல் விடுத்திரந்தார். இதன் மூலம் கருணா குழுவினர் இரண்டு செய்தியினை இலங்கை அரசிற்கு சொல்லியுள்ளனர். அதாவது கிழக்கு மாகாணத்தில் கருணா குழுவினரின் ஆயுதம் களைய முற்பட்டால் அரச அதிகாரிகளை சுட்டுவிட்டு புலிகளின் மீது பழிபோடுவோம். இரண்டாவது கிழக்கு மாகாணத்தில் புலிகள் பலமாக உள்ளார்கள் என்று நாமே உலகிற்கு எடுத்து காட்டுவோம் என்று பொருள்பட கருணாவின் கொலைக்கான நோக்கம் அமைந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் இதே நேரம் கிழக்கில் கருணா குழுவின் ஆயுதங்களை களையுடாறு தற்போது சார்வதேச அதிகாரிகள் கோரியுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் புலிகள் உள்ளனர் என்று காட்ட வேண்டிய தேவை கருணா குழுவிற்கு உருவாகி உள்ளது எனவே முக்கிய தலை ஒண்று மிகவிரைவில் உறுளலாம் என்று தெரியவருகிறது.

நன்றி

நிதர்சனம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

INTERVIEW - Sri Lanka a top danger spot for aid workers - U.N.

Reuters

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.