Jump to content

அமெரிக்காவின் 'ஹைதர் அலி' பிரிட்டிஷாரை வெறும் 26 நிமிடங்களில் தோற்கடித்த கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் 'ஹைதர் அலி' பிரிட்டிஷாரை வெறும் 26 நிமிடங்களில் தோற்கடித்த கதை

  • ஃபைசல் முகமது அலி
  • பிபிசி செய்தியாளர், டெல்லி
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஹைதர் அலி

பட மூலாதாரம்,HULTON ARCHIVE

இது 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்று. அமெரிக்க சுதந்திரப் போரின்போது, ஒரு அமெரிக்க போர்க்கப்பல், மிகப் பெரிய பிரிட்டிஷ் கப்பலான ஜெனரல் மாங்க்கை 26 நிமிட போரில் தோற்கடித்து சரணடையச்செய்தது.

அமெரிக்கக் கப்பலின் பெயர் ஹைதர் அலி(Hyder Ally). மைசூர் ஆட்சியாளரான ஹைதர் அலியின் நினைவாக சிறிய மாற்றத்துடன் இது பெயரிடப்பட்டது.

'Ally' என்ற ஆங்கில வார்த்தைக்கு நண்பன் அல்லது கூட்டாளி என்று பொருள்.

1782 ஏப்ரல் 8 ஆம் தேதி காலை நடந்த இந்த போரின் சம்பவம் அமெரிக்க கடற்படையின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெலாவேர் வளைகுடாவில் நடந்த இந்த போர் தொடர்பான ஓவியம் அமெரிக்க கடற்படை அகாடமியில் மாட்டப்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் போர்கப்பலின் கேப்டன் ஜோஷூவா பர்னியின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க கடற்படை வரலாற்றில் 'இது அமெரிக்கக் கொடியின் கீழ் நிகழ்த்தப்பட்ட மிகவும் பிரமிக்கவைக்கும் நிகழ்வுகளில் ஒன்று', என்று ஜேம்ஸ் ஃபெனிமோர் கூப்பர் விவரித்தார். ஒருவேளை இது 'பிரிட்டனுக்கு எதிரான அமெரிக்காவின் முதல் பெரிய கடற்படை வெற்றி' என்பதால் இப்படி விவரிக்கப்பட்டிருக்கலாம்.

"தரைப் போரில் பிரிட்டிஷ் ஜெனரல் லார்ட் சார்லஸ் கார்ன்வாலிஸ் ஏற்கனவே 1781 ஆம் ஆண்டு அமெரிக்கத் தளபதி ஜார்ஜ் வாஷிங்டன் முன் மண்டியிட்டுவிட்டார்."

ஹைதர் அலியின் பெயர் அமெரிக்காவிற்கு எப்படி வந்தது?

"தென்னிந்திய மாநிலமான மைசூரு 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து உலகளாவிய அடையாளத்தைக் கொண்டிருந்தது" என்கிறார் மைசூர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் செபாஸ்டியன் ஜோசப்.

"1757 பிளாசி போருக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனி, வட இந்தியாவில் ஒரு பிராந்திய சக்தியாக உருவெடுத்தது. ஆனால் ஹைதர் அலியும் அவருக்குப் பின் வந்த திப்பு சுல்தானும் 30 ஆண்டுகளில் ஆங்கிலேயருக்கு எதிராக நான்கு போர்களை நடத்தினர்.

மேலும் தெற்கின் பெரும்பகுதியிலிருந்து அவர்களை விலக்கி வைத்திருந்தனர். இதற்கிடையில், அமெரிக்காவின் சுதந்திரப் போர் 1783 இல் முடிவடைந்து. அமெரிக்கா என்ற ஒரு புதிய நாடு பிறந்தது," என்று பிபிசியுடனான உரையாடலில் பேராசிரியர் ஜோசப் கூறினார்.

 

ஹைதர் அலி

பட மூலாதாரம்,PRINT COLLECTOR

இருப்பினும், வரலாற்றாசிரியர் ராஜ்மோகன் காந்தி தனது ' மார்டன் சவுத் இண்டியா: எ ஹிஸ்டரி ஃப்ரம் தி செவண்டீந்த் சென்சுரி டு அவர் டைமஸ்' என்ற புத்தகத்தில், அரபி கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் காரணமாக போர்ச்சுகல், ஹாலந்து, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மற்றும் அதன் காரணமாக அவர்களின் தொடர்பு பற்றிக்குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கேள்வி என்னவென்றால், இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள அமெரிக்காவிற்கு ஹைதர் அலியின் பெயர் எப்படி வந்தது?

பிரிட்டனில் திப்பு மற்றும் ஹைதர் என்ற பெயர்கள் ஏன் வைக்கப்பட்டன

இது இரண்டு ஆதாரங்களில் இருந்து உருவாகிறது: அமெரிக்க சுதந்திரப் போரின் முக்கிய வீரர்களுக்கு பிரெஞ்சு ராணுவ அதிகாரிகள் எழுதிய கடிதங்கள் மற்றும் குதிரைகள் என்கிறார் கனடாவின் எட்மண்டனில் இருந்து தொலைபேசியில் பிபிசியிடம் பேசிய வரலாற்றாசிரியர் அமீன் அகமது.

பிரிட்டிஷ் ராணுவத்தில் ஜெனரலாகவும் லெப்டினன்ட் ஜெனரலாகவும் இருந்த என்காஸ்டரின் டியூக் ப்ரெக்ரீன் பெர்டி, குதிரைப் பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் தனது ஒரு குதிரைக்கு ஹைதர் அலி என்று பெயரிட்டார் (1765).

இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹைதர் அலி மைசூரின் ஆட்சியாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இதற்கிடையில் கிழக்கிந்திய கம்பெனி திரிவாதியில் (பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள இடம்) தோற்கடிக்கப்பட்டது. திப்பு சுல்தானும் சிறு வயதிலிருந்தே கிழக்கிந்திய கம்பெனியின் தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கினார்.

இதன் போது இங்கிலாந்தில் பந்தய குதிரைகளை வளர்ப்பவர் ஒருவர், பிறந்த குதிரைக்குட்டிக்கு திப்பு சாஹேப் என்று பெயர் சூட்டினார். பின்னர் இந்த குதிரைகளின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குதிரை அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது. பின்னர் அங்கும் மைசூர் ஆட்சியாளர்களின் பெயரை குதிரைகளுக்கு சூட்டும் செயல்முறை தொடங்கியது.

ஹைதர் அலி என்ற குதிரையின் வழித்தோன்றலைப் பற்றி, அமெரிக்காவின் போர்ட்ஸ்மவுத் நகரில் அச்சிடப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரம் பற்றி அமீன் அகமது எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் நகல் அமெரிக்க நாடாளுமன்ற நூலகத்தில் உள்ளது.

 

ஹைதர் அலி

பட மூலாதாரம்,BONHAMS

'துணிச்சலான முகலாய இளவரசர்'

ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் நீண்ட காலமாகப் போரிட்டபோதும், ஹைதர் அலி ஆங்கிலேயர்களுடன் வணிக மற்றும் ராணுவ ஒப்பந்தங்களை வைத்திருந்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்று அமீன் அகமது கூறுகிறார்.

சில ஆங்கிலேயர்கள் தங்கள் வளர்ப்புப்பிராணிகளுக்கு மைசூர் ஆட்சியாளர்களின் பெயரை சூட்ட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆங்கிலேயர்கள் தங்கள் பந்தய குதிரைகளுக்கு, எதிரிகளின் பெயரை ஏன் வைக்கிறார்கள் என்ற பிபிசியின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய வீரர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் குறித்த 1777 ஆம் ஆண்டின் குறிப்பு உள்ளது.அதில் பிரெஞ்சு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் நெகோம்டே டி டிரசான், பெஞ்சமின் பிராங்க்ளினுக்கு அனுப்பிய கடிதத்தில் 'துணிச்சலான முகலாய இளவரசர்' என்று அவரை அழைத்துள்ளார். ஹைதர் அலியுடன், பணிபுரியும் ஐரோப்பியர்களுடன் அவரை தொடர்பு கொள்ளச்செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

ஹைதர் அலி

பட மூலாதாரம்,SOTHEBY'S

அமெரிக்காவின் முதல் துணை அதிபராகவும், பின்னர் அதிபராகவும் இருந்த ஜான் ஆடம்ஸ் போன்ற அமெரிக்க போர் வீரர்களில் இருந்து, அமெரிக்காவின் ஆறாவது அதிபரான ஜான் குயின்சி ஆடம்ஸ், பின்னர் நான்காவது அதிபராக வந்த ஜேம்ஸ் மேடிசன் வரை அனைவருமே இந்தியப் போராட்டத்தை கூர்ந்து கவனித்தனர்.

பேரரசு விரிவாக்க லட்சியம் காரணமாக, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இந்தியத் துணைக்கண்டம் தொடர்பாக நீண்ட சண்டையும், போரும் நிகழ்ந்தன. இதில் கடைசியாக பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நீண்ட போர் நிலவியது. இறுதியில் பிரிட்டன் வெற்றிபெற்றது.

அமெரிக்கப் புரட்சியின் கவிஞர் எழுதிய ஹைதர் அலி பற்றிய கவிதை

 

ஹைதர் அலி

பட மூலாதாரம்,SOTHEBY'S

"அமெரிக்க சுதந்திரப் போருக்கும் மைசூர் ஆட்சியாளர்களுக்கும் இடையே பிரான்ஸ் ஒரு பெரிய பாலமாக இருந்தது. அங்கு பிரெஞ்சு நிதி மற்றும் ராணுவ உதவியால் அமெரிக்கப் போர் சாத்தியமானது. அதே நேரத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் ராணுவ பயிற்சி மற்றும் ராணுவ தொழில்நுட்பம் ஆகியவற்றைப்பெற பிரான்சுடன் மிக நெருக்கமான உறவுகளை பேணிவந்தனர்," என்று பேராசிரியர் செபாஸ்டியன் ஜோசப்பின் கூறுகிறார்.

பகிரப்பட்ட நட்பு மற்றும் பொது எதிரி (பிரிட்டன்) ஆகியவற்றின் விளைவாக அமெரிக்கப் புரட்சியின் கவிஞராக அறியப்படும் பிலிப் ஃப்ரீனோ, ஹைதர் அலி பற்றி எழுதிய கவிதையின் சில வரிகள் இதோ:

கிழக்கின் இளவரசர் ஒருவரின் பெயர் இது

அவர் இதயத்தில் சுதந்திர ஜோதி பற்றி எரிந்தது

தன் நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்கினார்

ஆங்கிலேயர்களை பெரிதும் அவமானப்படுத்தினார்…..

1781 அக்டோபர் 19 ஆம் தேதி அமெரிக்கப் போராளிகள் பிரிட்டிஷ் ராணுவத்தை தோற்கடித்த பின்னர், நியூ ஜெர்சியின் ட்ரண்டனில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. அப்போது மது கோப்பைகளை முட்டி ஒருவருக்கு ஒருவர் தெரிவித்துக்கொண்ட வாழ்த்துகளில் ஹைதர் அலியின் பெயராலும் வாழ்த்து கூறப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-62181186

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரஸ்யமான செய்தி.....தகவலுக்கு நன்றி ஏராளன் .......!  😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God ! I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
    • 26 SEP, 2024 | 12:24 PM பிரசாத் வெலிக்கும்புர தென்னிலங்கையின் பிராந்தியங்களில் இருந்து குறிப்பாக, சிங்கள பௌத்தர்கள் அதிக பெரும்பான்மையாக வாழும் பாகங்களில் இருந்து பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதற்கு மாறாக, சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளின் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூடுதலான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவாக, திசாநாயக்கவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மைச் சமூகங்களை குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை அவரின் ஆதரவாளர்கள் கண்டனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். திசாநாயக்கவுக்கு பதிலாக பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களிப்பதற்கு இந்த சமூகங்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள் என்று வாதிடும் அவர்கள் அரசியல் யதார்த்தங்களை விளங்கிக்கொள்ளாதவர்களாக "அறிவிலிகள்" என்று அந்த மக்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதேவேளை, பிரேமதாசவையும் விக்கிரமசிங்கவையும் ஆதரித்த தாராளவாத முகாமைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தெற்கைச் சேர்ந்த இரு சிங்கள பௌத்த பேரினவாதிகளான நாமல் ராஜபக்ஷ மற்றும் திலித் ஜயவீரவுடன் தமிழ்ப் பொதுவேட்பாளரான பாக்கியசெல்வம்  அரியநேத்திரனை  ஒப்பிட்டிருப்பதுடன் மூவரும் ஒரே விதமான கோட்பாடுகளை கொண்டவர்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.   மேலும், பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்ச் சமூகம் வழங்கிய ஆதரவு அவர்கள் பெருமளவுக்கு பொதுமைப்பட்ட, தேசிய அரசியலுக்கு சாதகமாக தமிழ் அடையாள அரசியலை நிராகரித்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று அந்த தாராளவாத போக்குடைய முகாமைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். முதல் கண்ணோட்டத்தில், இந்த இரு வாதங்களும்  வேறுபட்டவையாக தோன்றலாம். ஆனால், உன்னிப்பாக அவதானித்தால் அவை ஒரே மாதிரியானவை. இருப்பதையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்த இரு கருத்துக் கோணங்களுமே இந்த சமூகங்களுக்கு இடையில் இருக்கும் தனித்துவமான கலாசாரம், நடத்தை ஒழுக்கங்களையும் அடையாள வேறுபாடுகளையும் கொண்டவை என்பதை ஏற்றுக்கொள்ளத் தவறுகின்றன. இந்த குழுக்களின் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் அபிலாசைகள் ஒற்றைத்தன்மை கொண்டவையல்ல. இந்த கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இப்போது இல்லை என்று கருதுவதுடன் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டுவிட்டால் சமத்துவமும் இணக்கநிலையும் ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறார்கள். அனால், இந்த கருத்தியல் நோக்கு யதார்த்தத்தில் இருந்து வேறுபட்டது. நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, இலங்கை தனித்துவமான அடையாளங்களையும் முன்னுரிமைகளையும் கொண்ட பிராந்தியங்களாக பிளவுபட்டிருக்கிறது. இந்தப் பிளவு இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே மிகவும் வெளிப்படையாகத் தெரியும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் வேறுபட்ட ஒரு நிலப் பிராந்தியம், வரலாறு, சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட அடையாள உணர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள்.  நாடு சுதந்திரமடைந்த பிறகு பல தசாப்தங்களாக அவர்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டமை, 30 வருடகால உள்நாட்டுப்போர், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆகியவை காரணமாகவும் அரசாங்கங்கள் பொறுப்புக்கூறத் தவறியமை காரணமாகவும் இடைவெளி விரிவடைந்துவிட்டது. இந்த காரணிகள் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவர்களிடமிருந்து தமிழ்ச் சமூகத்தை மேலும் தூர விலக்குகின்றன. 2009ஆம் ஆண்டுக்கு பிறகு, வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் போரின் இறுதிக்கட்டங்களில் ஒப்பீட்டளவில் குறைந்தளவு ஈடுபாட்டைக் கொண்டிருந்த அரசியல் பிரிவுகளுடன் தொடர்ச்சியாக அணிசேர்ந்து வந்திருக்கிறார்கள். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வரை  அவர்கள் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகவே வாக்களித்தார்கள்.  ஆனால், இந்த தேர்தலில்  பிரதான வேட்பாளர்களில் ஒரு ராஜபக்ச இல்லாத நிலையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் அங்கமாக இருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) மீது கவனம் குவிந்தது. குறிப்பாக, போரின் இறுதிக்கட்டங்களில் ஜே.வி.பி. சம்பந்தப்பட்டிருந்தது. "எந்த வழியில் என்றாலும்" போருக்கு முடிவைக் கட்டிவிடுமாறு மகிந்த ராஜபக்சவை தாங்களே வலியுறுத்திக் கேட்டதாக  ஜே.வி.பி.யினர் தேர்தல் பிரசாரங்களின்போது பெருமை பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது. இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சம் பேர் மாண்டார்கள். வடக்கில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவரை அந்த படுகொலைகளில் இழந்திருக்கிறார் என்ற உண்மை நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை தெளிவுபடுத்தி நிற்கிறது. அதனால் தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்படவேண்டிய ஒரு கட்சி என்று அவர்கள் கருதியது இயல்பானதேயாகும். தேர்தல் பிரசாரங்களின்போது ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான லால்காந்த போரில் தனது கட்சியின் ஈடுபாடு குறித்து பெருமையாகப் பேசினார்.  மேலும், கறைபடிந்த சிங்கள பௌத்த பேரினவாத வரலாறு ஒன்றைக் கொண்ட ஜே.வி.பி. ஒரு குறைந்தபட்ச அதிகாரப் பரவலாக்கல் வடிவத்தைக் கூட கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. வடக்கு பிராந்தியத்தில் உள்ள வர்த்தகர் குழாத்துடன் ஊடாட்டங்களைச் செய்வதற்கு சில முயற்சிகளை ஜே.வி.பி. மேற்கொண்ட அதேவேளை தமிழ் மக்களுடனான அல்லது  ஏனைய சிறுபான்மைக் குழுக்களுடன் அர்த்தபுஷ்டியான முறையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு எதையும் செய்யவில்லை. அதனால் ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதை தமிழர்கள் தவிர்த்துக்கொண்டது முற்றிலும் நியாயமானதே. அதேபோன்று தமிழர்கள் இப்போது தேசிய இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்ற காரணத்தினால் அவர்கள் தமிழ் வேட்பாளரை நிராகரித்து பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களித்தார்கள் என்ற தாராளவாத போக்குடைய முகாமின் வாதமும் தவறானது. சிங்கள பௌத்த பேரினவாத வரலாற்றையும் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் தொடர்பையும் கொண்ட ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவதற்கு ஒரே வழி என்று நம்பியதன் காரணத்தினாலேயே தமிழர்கள் அந்த இருவருக்கும் வாக்களித்திருப்பார்கள் எனலாம். (கட்டுரையாளர் சமூக - அரசியல் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாட்டாளர்) https://www.virakesari.lk/article/194830
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.