Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் தாயகத் துண்டிப்பை உறுதிப்படுத்தும் தீர்வு வருகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-08-13

தமிழர் தாயகத் துண்டிப்பை உறுதிப்படுத்தும் தீர்வு வருகிறது

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யோசனைகளை சிபாரிசு செய்யும்படி கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டிய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, இழுத்துப் பறித்து ஒருவாறு தன் திட்டம் ஒன்றை இவ்வாரத்தில் முன்வைக்கும் என்று தெரிகின்றது.

ஆளும் தரப்பின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஒரு யோசனையை முன்னர் முன்வைத்திருந்தது. மாவட்ட மட்டத்தில் அதிகாரத்தைப் பகிர்வது குறித்தும், கிராம மட்ட நிர்வாகம் பற்றியும் அது பிரஸ்தாபித்தது.

அந்தத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர - சற்று விட்டுக்கொடுக்க - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'பெருமனது பண்ணி' இப்போது இணங்கியிருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.

அரசுத் தரப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் கடந்தவாரம் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அப்போது ஜனாதிபதியுடன் அதிகம் தர்க்கம் புரிந்து - வாதம் செய்து - மாவட்ட மட்டத்தை விட்டு மாகாண மட்டத்துக்கு அதிகாரத்தைப் பகிரும் அளவுக்கு ஜனாதிபதியை இறங்கவைத்து, இணங்கவைத்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இலங்கையின் ஒற்றையாட்சி முறையில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவே மாட்டாது என்பதை அங்கு உறுதியாகவும், இறுதியாகவும் ஜனாதிபதி தெரிவித்தார் என்றும் கூறப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்கள் தமக்குத் தந்த ஆணையையே தாம் செயல்படுத்த முடியும் என்றும், அதன்படி பயங்கரவாதத்தை ஒழித்தலும், ஒற்றையாட்சி முறையின் கீழ் அதிகாரப் பகிர்வு வழங்கும் தீர்வுத்திட்டத்தை உருவாக்குதலும் தமது எல்லைகள் என்பதையும் இக்கூட்டத்தில் ஜனாதிபதி உறுதிபடத் தெரிவித்தார் என்றும் கூறப்பட்டது.

நல்லது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆணை கொடுத்தவர்கள் தென்னிலங்கைச் சிங்கள மக்களே. தமிழர் தாயக மக்கள் அல்லர் என்பது வெளிப்படையானது.

ஆக, தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு மாகாண மட்டத்தில் - ஓர் அதிகாரக் கட்டமைப்போடு ஒற்றை ஆட்சியை உறுதிப்படுத்தும் யோசனைத்திட்டம் ஒன்றுடன் அதிபர் மஹிந்தவின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் வரப்போகின்றது என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது.

இந்த உத்தேசத் திட்டம் தொடர்பாக பின்வரும் விடயங்கள் இப்போதைய நிலையில் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

* இந்த யோசனைத் திட்டத்தைத் தயாரித்த தரப்புகளில் தமிழர்கள் சம்பந்தப்படவில்லை. தமிழர் தரப்பின் ஏக - அதிகாரபூர்வ - பிரதிநிதிகளான புலிகளோ அல்லது கடந்த பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தினால் தெரிவுசெய்யப்பட்டு அவர்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டுக்கு அழைக்கப்படவும் இல்லை; அதில் அவர்கள் பங்குபற்றவுமில்லை. ஆக, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தென்னிலங்கை முன்வைக்கும் ஆகக் கூடிய விட்டுக்கொடுப்பைக் காட்டும் திட்டமாக இது வெளிவரப்போகின்றது. அவ்வளவே.

*அடுத்தது, ஏற்கனவே இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட - வடக்கு - கிழக்கு இணைந்த - மாகாண மட்ட அதிகாரப் பகிர்வையும் இந்த உத்தேசத் திட்டம் கொண்டிருக்கப் போவதில்லை என்பதும் தெளிவு.

இலங்கையின் பூர்வீகத் தேசிய இனமான தமிழர்கள், பாரம்பரியமாக - காலங்காலமாக - தாங்கள் தனித்துவத்தோடு வாழ்ந்த தமது தாயகப் பூமியில் தங்களைத் தாங்களே ஆளும் சுயாட்சி முறை ஒன்றையே தங்களின் ஏக அபிலாஷையாக வெளிப்படுத்தி நிற்கிறார்கள். அதற்காகவே உயிரையும் உடைமையையும் ஈகம் செய்து போராடுகின்றார்கள். அவர்களின் எதிர்பார்ப்பைத் திருப்தி செய்யும் அளவுக்கு இந்தத் திட்டம் கிட்டவும் வரப்போவதில்லை என்பது உறுதி.

'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' என்ற தனது கோஷத்தை முன்வைத்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்தருடன் அணி சேர்ந்திருக்கும் ஒரேயொரு தமிழ் எம்.பியை மட்டும் கொண்டிருக்கும் - ஈ.பி.டி.பி. கூட 'வடக்கு - கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி' யையே வலியுறுத்தி வரும் பின்னணியில், வடக்குக் கிழக்கைத் துண்டு போடும் இந்த உத்தேசத் திட்டத்திற்கு அது ஆதரவு தருமா என்பது சந்தேகத்துக்குரியதே.

ஆக, தன்னைத் தேர்ந்தெடுத்த தென்னிலங்கை மக்களை - பௌத்த, சிங்களப் பேரினவாதிகளை திருப்திப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு திட்டத்தை தீர்வு யோசனையாக வெளிப்படுத்தப் போகின்றார்.

சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த முன்னர் அது நீதியையும், நியாயத்தையும் திருப்திப்படுத்துவதாக அமையுமா என்பதே முக்கியம்.

நீதியின்பாற் படாத - தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்து அவர்களைத் திருப்திப்படுத்தாத - அரைகுறையான, உருப்படியற்ற திட்டங்களை, பெரும்பான்மை என்ற ஒரே ஆயுதத்தை வைத்துக்கொண்டு தீர்வு யோசனையாகத் திணிப்பதன் மூலம், இச்சிக்கலுக்கு பயனுள்ள தீர்வை எட்டிவிட முடியாது. இதை அரசு உணர்ந்துகொள்வது நல்லது.

நன்றி - உதயன்

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சிக்காரர் இந்த தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவு தருவினமா? எண்டு உதயன் கேள்வி எழுப்புது.

தீர்வுத் திட்டம் வைக்கும்போது இவை மட்டுமல்ல, ஆ... நொந்த, மற்றும் ஏனைய எடுபிடிகளும் அதற்கு முழு ஆதரவு கொடுப்பது மட்டுமல்ல. இதைப்போல ஒரு தீர்வுத்திட்டத்தை யாரும் முன்வைக்க வில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய இதுவே சிறந்தது என வாழ்த்துக்களும் பாடுவினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.