Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

27 வருடங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

27 வருடங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை

[15 - August - 2007]

-த. மனோகரன்-

1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அதாவது இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன் இரத்தினபுரி மாவட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட இன வெறிப் பயங்கரவாத வரலாற்றுப் பதிவை மீள நோக்கும் நினைவு நாளாக இந்நாள் அமைகின்றது.

ஆம். அமைதியாக நிம்மதியாக இருந்த இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களைத் திடீரென்று கிளம்பிய ஆழிப் பேரலை அனர்த்தத்தைப் போன்று 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தோன்றிய இன வெறிப்பயங்கரவாதம் தாக்கி நிலைகுலைய வைத்தது. 1958 இல் கிளம்பிய இவ்வாறான பயங்கரவாதம் தோட்டப்பகுதி வாழ் தமிழ் மக்களைத் தாக்காத போதும் 1981 ஆம் ஆண்டு ஒட்டு மொத்தமாகச் சகல தமிழ் மக்களையும் தாக்கியது.

மிகவும் அந்நியோன்னியமாக இருந்த தமிழ் - சிங்கள மக்களைப் பிளவு படுத்திய இப்பயங்கரவாதத்தால் தமிழ் மக்கள் பல்வேறு வழிகளில் தாக்கப்பட்டனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. தொழில், கல்வி, இருப்பிடங்கள் இழக்கப்பட்டன, அகதிகளாக்கப்பட்டனர். சுதந்திர இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்படும் வரலாறு 1956 முதல் நடைபெற்று இன்றும் தொடர்கின்றது.

மாவட்டத்தின் மொத்த சனத் தொகையில் பத்துவீதத்திற்கும் அதிகமாக இன்றும் தமிழ் மக்கள் உள்ளனர். 1981ஆம் ஆண்டு நடைபெற்ற இனவன்முறையால் இரத்தினபுரி, காவத்தை, பெல்மதுளை, பலாங்கொடை, நிவித்திகலை, எஹெலியகொடை, இறக்குவானை, ஓப்பனாயக்க உட்பட சகல நகரங்களிலுமிருந்த தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன் நகரப்பகுதியிலிருந்த தமிழர் வீடுகளும், தோட்டத் தொழிலாளர் குடியிருப்புக்களும் தாக்கப்பட்டன. அனாதரவாக்கப்பட்ட தமிழர்கள் தேவாலயங்களிலும், பாடசாலைகளிலும் தஞ்சமடைந்தனர்.

வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்தனர். பலர் இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தனர். சுமார் ஒருவாரம் கட்டுப்பாடற்ற நிலையில் பயங்கரவாத வெறியாட்டம் இடம்பெற்றது.

அன்றிருந்த அரசாங்கம் இந்த வன்முறை தொடர்பாக ஆராயவென்று இஸ்மாயில் ஆணைக்குழு என்ற ஒரு விசாரணைக் குழுவை நியமிப்பதாகக் கூறியது. ஆனால், ஒன்றுமே நடைபெறவில்லை. ஆணைக்குழுவென்பது வெறும் கண்துடைப்பாகவே அமைந்தது.

தமிழ் மக்களுக்கெதிராக நடைபெறும் வன்முறைச் செயற்பாடுகள் இன வாத செயற்பாடுகளாக மட்டுமன்றி பொருளாதார அபகரிப்பு நோக்கத்தையும் கொண்டதாகவுள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவினர் இனவாதம் மூலம் இன உணர்வைத் தூண்டி அரசியல் இலாபம் பெறுவதை போன்று இந் நடவடிக்கையால் குறிப்பிட்ட குழுவினர் பொருளாதார நலனுக்கும் இந்தஇன வன்முறையைப் பயன்படுத்துகின்றனர். பயன் பெறுகின்றனர்.

தமிழ் மக்கள் பாடுபட்டு சேர்த்த சொத்துக்களை மிகச் சொற்ப விலைக்கு வாங்குவது தொடர்ந்து வரும் நடைமுறையாகவுள்ளது. இதற்குத் தமிழருக்கெதிரான வன்முறை உதவுகின்றது.

1956 ஆம், 1958ஆம், 1977ஆம், 1981ஆம், 1983ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து வரும் இனவெறிப் பயங்கரவாதத்தால் தேன் கூட்டில் தேனீக்கள் சேகரித்து வைக்கும் தேனை எடுப்பது போல் தமிழர் சொத்துக்களும் கைமாறப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் வீடுவாசல்களையும், காணிகளையும், தோட்டங்கள், தொழிற்சாலைகள், கடைகள் எனத் தமக்குரியவற்றைக் கிடைத்தது இலாபம் என்று அற்பவிலைகளுக்கு விற்று விடுகின்றனர்.

இனவாத வெறியாட்டம் ஆடுபவர்களை விட தமிழர்களின் சொத்துக்களைக் கைப்பற்றும் நோக்கம் கொண்டு செயற்படுபவர்கள் ஆபத்தானவர்கள். இவ்வாறான வன்முறைகளால் நன்மை பெறுபவர்கள் மனச்சாட்சியற்றவர்கள். மனிதாபிமானத்தைக் குழிதோண்டிப் புதைப்பவர்கள். நாகரிக சமுதாயம் வெட்கித்தலை குனிய வேண்டியவர்கள்.

1981 ஆம் ஆண்டில் சில ஆயிரம் ரூபாக்களுக்குத் தமிழர்களின் சொத்துக்களை வாங்கியவர்கள் இன்று கஷ்டப்பட்டு உழைக்காது இலட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் உள்ளனர். கறையான் புற்றெடுக்க பாம்பு குடி கொண்டது போன்ற நிலை இது.

அரசியல் ஆதாயத்திற்காகவும், சொத்துக்களை காப்பாற்றும் நோக்கத்திற்காகவும், மட்டுமே தமிழர்களுக்கெதிரான இன வெறிப் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. தேசப்பற்றோ, தேசியப்பற்றோ இங்கில்லை.

நாடு நாசமாகாமலிருக்க இவ்வாறான கொடுஞ் சிந்தனை கொண்டவர்களின் நோக்கங்கள் தடுக்கப்பட வேண்டும். மக்களை மோதவிட்டு இலாபம் பெறும் கீழ்த்தர சிந்தனைகளுக்கு என்று முடிவு வரும்?

நன்றி தினக்குரல்

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.