Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துலக அரசியல் சூழ்நிலையில் மத்திய கிழக்கு நெருக்கடிநிலை - சில வரலாற்றுப் படிப்பினைகள்;

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக அரசியல் சூழ்நிலையில் மத்திய கிழக்கு நெருக்கடிநிலை - சில வரலாற்றுப் படிப்பினைகள்; -புரட்சி (தாயகம்)-

அண்மைக்காலமாக சர்வதேச ரீதியாக இடம்பெறும் அரசியல் நடவடிக்கைகளானது உலகம் அமெரிக்காவின் ஒரு துருவ ஒழுங்கிற்குள் இருந்து பல்துருவ ஒழுங்கிற்கு அல்லது பனிப்போர் கால இரு துருவ உலக ஒழுங்கிற்கு மாறுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கப்பண்ணியுள்ளதா என எண்ணவைத்துள்ளது.

அதாவது ஒரு பக்கத்தில் ருஸ்யாவானது அதிபர் புட்டின் தலைமையில் மீண்டும் அரசியல், பொருளாதார மற்றும் படைத்துறை வல்லாண்மையினைப் பெற்று கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களிலே செல்வாக்கினை பெற்றுவருவதை அவதானிக்கலாம். மறுபக்கத்திலே அமெரிக்காவானது நேட்டோவினை அகட்டி பரவலாக்குதல் என்றதன் அடிப்படையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை தனது செல்வாக்கிற்குள் கொண்டுவரும் தந்திரோபாயத்தினை கடைப்பிடித்து வரும் அதேநேரம் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் தென்ஆசியா பிராந்தியங்களிலும் தனது செல்வாக்கினை அதிகரித்து வருகின்றது.

இது தவிர ஆசியக் கண்டத்தின் ப+தமாக கணிக்கப்படுகின்ற சீனாவானது பொருளாதார மற்றும் படைத்துறை ரீதியில் பாரிய வல்லரசாக உருவாகி வருகின்றது. இப்பொழுது அனைத்துலக சமூகம் என்று கூறப்படுகின்ற அமெரிக்கா தலைமையிலான பெரும்பாலும் மேற்கு நாடுகளினாலும் பன்னாட்டு நிறுவனங்களினாலும் இயங்;குகின்ற இந்த சர்வதேச சமூகம், மேலே கூறப்பட்ட பிராந்தியங்களிலே குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் தென்னாசியா பிராந்தியங்களிலே எவ்வாறான கொள்கைகளைக் கடைப்பிடிக்க விரும்புகின்றன என்பதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மத்திய கிழக்கு

இரண்டாம் உலகப் போரின் காலப்பகுதியில் இருந்தே மத்திய கிழக்கானது எந்நேரமும் வெடிக்கக் கூடிய வெடிமருந்துப் பொதி போலவே விளங்கி வருகின்றது. இப்பிராந்தியத்தின் குழப்பத்தன்மை மற்றும் தளம்பல் போக்கானது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வரைக்கும் பரவிவிட்டது. அது மட்டுமல்லாது பங்களாதேஸ் மற்றும் காஷ்மீர் போன்ற இஸ்லாமிய மக்கள் வாழ்கின்ற பகுதிகளையும் எட்டிவிட்டது.

ஆப்கானிஸ்தானின் ரோரா போரா மலைப்பகுதியில் தமது ஏவுகணைத் தாக்குதல்களின் மூலம் தலிபான்களை அழித்துவிட்டதாக நம்பிக்கொண்டிருந்த அமெரிக்கர்களின் நம்பிக்கையில் மண் அள்ளிப்போட்டது போல தலிபான்கள் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

ஈராக்கில் மக்களாட்சியினை நிலைநாட்டுவதற்காக என்று அதிபர் புஸ் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட சதாம் குசையினை தூக்கிலிடுதல் போன்ற நடவடிக்கைகள் அனைத்துமே மிகப்பெரிய நகைச்சுவை என்று எள்ளி நகையாடப்படுகின்றது.

மத்திய கிழக்கிலே இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் என்று இரண்டு தேசங்களை உருவாக்குவதே அண்மைக்காலமாக மேற்குலகின் இராஜதந்திரமாக வெளியுலகத்திற்கு தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றங்களும் குழப்பங்களும் இரண்டு தேசங்களுக்கு பதிலாக மூன்று தேசங்களை உருவாக்கவேண்டிய தேவையை உருவாக்கிவிட்டது.

அதாவது ஒரு இஸ்ரேல் தேசமும் இரண்டு பலஸ்தீனிய தேசங்களும்- மேற்கு கரையில் பற்றாவின் தலைமையிலான ஒரு தேசமும் காஸா பகுதியில் ஹமாசின் தலைமையிலான ஒரு தேசமும் உருவாக்க வேண்டிய புதிய சூழ்நிலை தோன்றியுள்ளது. இங்கு நாம் மூன்று தேசங்களை அமைக்கவேண்டும் என்று குறிப்பிடுவது கள நிலைமைகளின் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டே தவிர மேற்குலகின் தலைமையிலான பன்னாட்டு சமூகம் இவ்வாறான தீர்விற்கு தன்னை தயார்படுத்தியுள்ளது என்று பிழையாக யாரும் மேற்குலகிற்கு நற்சான்றிதழ் வழங்கிவிடக்கூடாது. பலஸ்தீன மக்களின் தலைகளில் மாவரைக்கும் வேலைகளை அமெரிக்காவும் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளும் நோர்வே உட்பட மேற்குலகமும் இணைந்து இன்னமும் தொடர்ந்து மேற்கொண்டே வருகின்றார்கள்.

கிட்டத்தட்ட 50 வருடகால மேற்கு நாட்டின் இராஜதந்திர நடவடிக்கைகள் மத்திய கிழக்கிலே சாதித்த சாதனை என்னவென்றால்; பலஸ்தீன மக்களின் மனிதாபிமான பிரச்சினையிலோ அல்லது வாழ்க்கையிலோ எந்தவித முன்னேற்றங்களையும் ஏற்படுத்தாது அவர்களை கற்காலத்திற்கு அழைத்துச் சென்றதுதான். தற்பொழுது இன்னுமொருவர் சமாதான நடவடிக்கைகளை மத்திய கிழக்கில் முன்னெடுப்பதற்கு நுழைந்திருக்கின்றார். அவர் வேறு யாருமல்ல. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர்தான். இங்கிலாந்திலே பதவியில் இருந்தது போதும் என்று தொழிற்கட்சியால் நீண்டகாலமாக நெருக்கடி கொடுக்கப்பட்டு இறுதியில் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் பதவி விலகிய ரொனி பிளேயருக்கு மத்திய கிழக்கு மற்றும் இலங்கைத்தீவு ஆகியனவற்றின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவிசெய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் மத்திய கிழக்கையே தெரிவுசெய்துள்ளார். இதற்கான காரணங்கள் சொல்லித்தெரிய வேண்டியதொன்றல்ல மத்திய கிழக்கிலே அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட குவாரெற் குழு (ஞரயசவநவ) என்று அழைக்கப்படுகின்ற ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் ரொனி பிளேயர் ஒரு பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இக்குழுவின் செயற்பாடுகளும் சமாதான முயற்சிகளுக்கு எவ்வாறான பங்களிப்பினை இது வழங்கப்போகின்றது என்பது தொடர்பாகவும் இன்னமும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. எனினும் இங்கிலாந்திலே மூன்று தடவைகள் பிரதம மந்திரியாக விளங்கிய, வட அயர்லாந்து பிரச்சினைக்கு அமைதித் தீர்வினை ஏற்படுத்திய ரொனி பிளேயர் மத்திய கிழக்கு பிரச்சினையை அமைதி வழியில் தீர்த்து வைப்பாரா என்பதுவும் அத்துடன் அவர் விரும்பியபடி தீர்வுகளை கண்டுபிடிப்பதற்கு அவருக்கு தேவையான சுதந்திரமும் ஆதரவும் கிடைக்குமா என்பதுவும் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

ஏனெனில் பிளேயரின் உற்ற நண்பனான அமெரிக்கா இஸ்ரேல் பிரச்சினையில் பிளேயர் அளவுக்கதிகமாக தலையீடு செய்வதை விரும்பவில்லை. சில வாரங்களுக்கு முன்பு இது தொடர்பாக கருத்துக் கூறிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொண்டலிசா ரைஸ் பிளேயர் சமாதான அனுசரணையாளராக கடமையாற்றமாட்டார். அவரது கடமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீனத்தில் சமரச தீர்வுகளை மேற்கொள்ளக் கூடிய வகையில் அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்குவதே அவரது பணி என்று தெரிவித்தார். மத்திய கிழக்கின் சமாதான முயற்சிகளைப் பற்றி சற்று பின்நோக்கிப் பார்த்தோமானால் 1978 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட காம் டேவிற் உடன்பாடுகளில் இருந்து இன்று வரைக்கும் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளுமே எந்தவிதமான உருப்படியான தீர்வுகளையும் உருவாக்கவில்லை என்பதோடு பலஸ்தீன மக்கள் மேற்கு நாடுகளின் ஒவ்வொரு சமாதான முயற்சிகளுக்கு பின்பும் மிகவும் மோசமான அடக்குமுறைகளையும் நிலப்பறிப்புக்களையும் உயிரிழப்புகளையுமே பரிசாகப் பெற்றார்கள் என்பதே உண்மை.

இரு தேசங்களின் தீர்வுத்திட்டம் அல்லது நீதியான விவகாரத்து என்று சொல்லப்பட்ட இரு தேசத் தாயகங்கள் கொண்ட ஒரு பிரதேசம் - ஒன்று மற்றொன்றில் இருந்து சிறியது ஆனால் இறைமையுள்ளது, சாத்தியமானது, தொடர்ச்சியானது ஆனால் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்படாதது போன்ற கவர்ச்சிகரமான ஏட்டுச்சுரைக்காய் தீர்வுகள் எதுவுமே பலஸ்தீன மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுகொடுக்கத் தவறியதோடு மட்டுமல்லாது அவர்கள் குந்தியிருந்த இடங்களைக்கூட இஸ்ரேல் அரசின் அடக்குமுறை படை நடவடிக்கைகளுக்கு இழக்க வேண்டியும் ஏற்பட்டது. இது தொடர்பாக பலஸ்தீன மக்கள் கூறிய கருத்துக்களை லி மொண்ட் என்ற சஞ்சிகையில் றெஜீ ரெப்ரே (டுநஅழனெந னipடழஅயவiஉ) பின்வருமாறு பதிவு செய்துவைத்துள்ளார்.

~இப்போது எமக்கிருப்பது இரு மேடைகள் கொண்ட அரங்கமாகும். சர்வதேச மேடையில் நாங்கள் திரும்பத்திரும்ப தெளிவற்ற ஆனால் உற்சாகப்படுத்துகின்ற உரைகளைக் கேட்கின்றோம். அதாவது ~படை மீளப்பெறல்|, ~இணைந்து வாழ்தல்|, ~பலஸ்தீன நாடு| போன்ற வார்த்தைகள் மந்திரங்கள் போல உச்சரிக்கப்படுகின்றன. ஆனால் உள்நாட்டிலோ குடியேற்றத்திட்டங்கள், வீதிகள், பாதாளப் பாதைகள், நீர் நிலைகள் என்பன எதிரிகளினால் திட்டமிட்ட ரீதியில், எமது மண்ணையும் உரிமைகளையும் பறிக்கும் விதத்திலே முன்னெடுக்கப்படுகின்றன.

~ஜனநாயகத்திலே எவ்வாறு பேரினவாதமும் பொதுமக்கள் அபிப்பிராயமும் தாக்கம் செலுத்துகின்றது என்பதைப் புரிந்துள்ள, அடுத்தடுத்து பதவிக்கு வரும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மக்களின் வாக்கு வங்கிகளைப் பெறுவதற்குத் தேவையான மருந்துகளையோ களிம்புகளையோ வழங்குவதற்குத் தவறுவதில்லை. ஒற்றையாட்சித் தீர்வு, அரசியல் யாப்பிற்கு உட்பட்ட வகையில் சமாதானத் தீர்வு, பெரும்பான்மை இனங்களின் உரிமைகளைப் பாதிக்காதவகையில் அதிகாரங்கள் பகிர்தல் போன்றவையே இம்மருந்துகளாகும்.

~இதன் பின்னர் பன்னாட்டு சமூகத்திற்கு காது குளிரப்பண்ணுகின்ற வேலைகளை இவ் ஆட்சியாளர்கள் மேற்கொள்வார்கள். படைப்பின்வாங்கல், அதிகாரப் பகிர்வு, குடியேற்றத்திட்டங்களைக் கலைத்தல் போன்ற கவர்ச்சிகரமான விடயங்கள் பதவியேற்ற புதிதில் ஆட்சியாளர்களால் உற்சாகமாக உச்சரிக்கப்படும். ஆனால் ஒன்றுமே நடக்காது. ஊடகங்கள் மட்டும் இதனைப் பெரிதாக தூக்கிப்பிடிக்கும். பின்னர் இது உடனடியாகவே மறக்கப்பட்டு விடும். உதாரணமாக காம்ப்-டேவிட் மற்றும் வைநதி உடன்படிக்கைகளைப் பற்றி யாருமே இப்போது கவலைப்படுவது கிடையாது. அதேபோன்று ரோட் மப் (சுழயன ஆயி) என்றழைக்கப்பட்ட 2005 ஆம் ஆண்டிற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என்ற பன்னாட்டு சமூகத்தின் கால வரையறையுடன் கூடிய வீதி வரைபடம் மாதிரியான தீர்வுத் திட்டங்கள் எல்லாமே குப்பைக் கூடையில் போடப்பட்டுவிட்டது.

இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை பலஸ்தீன மக்களின் இனப்பிரச்சினையுடன் நாம் ஒப்பிட்டு பார்ப்போமானால் பல விடயங்களில் ஒத்த தன்மைகளை நாம் அவதானிக்கலாம். சர்வதேசத்தின் தலையீடுகள், அரைகுறை தீர்வுகளை அடக்கப்பட்ட மக்களின் தலைகளில் கட்டியடித்தல், அரசுகளுக்கு சார்பாக நிலைப்பாடுகள் எடுத்தல் என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இப்பொழுது மத்திய கிழக்கிலே என்ன இடம்பெறுகின்றது என்றால், பலரும் விரும்பும் அல்லது அறிவிக்கும் பாலஸ்தீன தேசத்தின் உருவாக்கமல்ல. மாறாக, மூன்று பலஸ்தீன பிரதேசங்களும் இன்னமும் கண்ணுக்குப் புலனாகாத வகையில் சுற்றிவளைக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கிலே சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருமே இன்றுள்ள சர்வதேச பாசாங்கை பாதுகாக்க வேண்டிய சுயதேவைகளைக் கொண்ட நலன்கள் உள்ளன. இஸ்ரேலியர்களுக்கு வரலாறொன்று உள்ளது என்ற கருத்து இப்பாசாங்கிற்கு பின்னால் உருவாக்கப்பட்டு வருகின்றது.

பலஸ்தீனியர்களோ உண்மையை சொல்லமுடியாது. அவர்கள் ஆக்கிரமிப்பிற்குள் உள்ளனர். நல்வாழ்வு வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஐரோப்பியர்கள் தங்கள் மனச்சாட்சிற்கு ஒத்தடம் கொடுக்கும் பாதையை தேர்ந்தெடுகின்றனர். தங்களது தற்தேர்வு குருட்டுத்தனத்திற்கும் அரசியல் செயலற்ற போக்கிற்கும் மன்னிப்பு கோருவதற்காக நிதி உதவிகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

இப்பொழுது எமது பிரச்சினையில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் இதேபோன்ற போக்கிலேயே சென்றுகொண்டிருந்தன என்பதை நாம் அவதானிக்கலாம். தம்மைத் தாமே இணைத்தலைமை நாடுகள் என்று பிரகடனப்படுத்திக்கொண்டு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான் மற்றும் நோர்வே ஆகியன செத்துக்கொண்டிருந்த சமாதான முயற்சிகளுக்கு சேலைன் ஏற்றுவதற்காக அலைந்தன.

தமிழ் மக்களின் போராட்டத்தினை மழுங்கடிப்பதற்காக ரோட் மப் என்ற வீதி வரைபடத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் மீது சவாரி விடுவதற்கு பன்னாட்டு சமூகம் முழு முயற்சிகளையும் மேற்கொண்டது. இவை எல்லாவற்றிலும் இருந்து தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினையும் காப்பாற்றி அதனை வெற்றி நடை போடச் செய்கின்ற எமது தேசியத் தலைவரின் மதியூகத்தினையும் அரசியல் இராஜதந்திர நகர்வுகளையும் முழு உலகமுமே இன்று வியப்புடன் பார்த்து நிற்கின்றது. பலஸ்தீன மக்களுக்களுக்கோ இவ்வாறான ஒரு தலைவன் இல்லை என்பதே அம்மக்களின் சோகமாகும்.

நன்றி - தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.