Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மணற்காடு கடற்பரப்பில் கடற்மசர்: சிறிலங்கா கடற்படை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மணற்காடு கடற்பரப்பில் கடற்மசர்: சிறிலங்கா கடற்படை

[வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2007, 19:41 ஈழம்] [கொழும்பு நிருபர்]

யாழ். வடமராட்சி பருத்தித்துறை மணற்காடு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகளுக்கும் இடையே சுமார் இரண்டு மணி நேரமாக மோதல் நிகழ்ந்ததாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல் குறித்து சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க கூறியதாவது:

மணற்காடு கடற்பரப்பில் கரையில் இருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான படகு ஒன்றை அவதானித்துள்ளனர். அந்த படகை நெருங்கி அதனைச் சோதனையிட முயற்சித்த போது படகில் இருந்து கடற்படையினரை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து கடற்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் படகில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். அந்த படகில் இருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டன. 40 மி.மீ.லோஞ்சர் ஒன்று கைக்குண்டுகள் மூன்று துப்பாக்கி தோட்டாக்கள் மூன்று மற்றும் சயனைட் வில்லை ஒன்றும் கைப்பற்றப்பட்டன.

அப்பகுதிக்கு மேலும் பல படகுகள் வந்ந போதும் அவை தாக்குதலை நடத்தாமலேயே திரும்பிச் சென்றுவிட்டன. இந்த மோதலில் சிறிலங்கா கடற்படையினருக்கு எதுவித இழப்பும் ஏற்படவில்லை என்றார்.

புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணற்காடு கடற்பரப்பில் கடற்படைபுலிகள் மோதல்

வீரகேசரி நாளேடு

யாழ்ப்பாணம் பருத்திதுறை மணற்காடு கடற்பரப்பில் கடற்படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை 2 மணியளவில் ஆரம்பமான இந்த மோதல் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றதாகவும் இதன் போது கடற்படையினர் மீது தாக்குதல்கள் நடத்துவதற்காக வந்த விடுதலைப்புலிகளின் தாக்குதல் படகு கைப்பற்றபட்டதுடன் அதிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் படை தரப்பினர் தெரிவித்தனர்.

இந்த மோதல் தொடர்பாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் எஸ்.ஏ.பிரசாத் சமரசிங்க கருத்து தெரிவிக்கையில்;

யாழ்ப்பாணம் மணற்காடு கடற்பகுதியில் நேற்று அதிகாலை ரோந்து நடவடிக்கைகயில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சுமார் 50 கடல்மைல் தூரத்தில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை அவதானித்ததுடன் படகை சோதனைக்கு உட்படுத்துவதற்கு முயற்சி செய்துள்ளனர். எனினும் சந்தேகத்துக் இடமான படகை கடற்படையினரால் சோதனைக்கு உற்படுத்த முடியவில்லை என்பதுடன் படகிலிருந்த படையினரை நோக்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனையடுத்து கடற்படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் படகிலிருந்த புலிகள் உறுப்பினர் ஒருவர் பலியானதுடன் படகும் கைப்பற்றப்பட்டது இதிலிருந்து ஒன்பது கைக்குண்டுகள், தோட்டாக்கள் ஒன்பது, 40 மில்லி மீற்றர் ரக லோஞ்சர் மற்றும் சையனைட் குப்பி ஆகியவற்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ரோந்து நடவடிக்கைகளில் போது குறித்த கடற்பரப்பில் கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான பல படகுகளை அவதானித்ததாகவும் படையினர் மீது ஒரு படகிலிருந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஏனைய படகுகள் தப்பிச்சென்று விட்டதாகவும் தெரிவித்தார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலி உறுப்பினரின் சடலத்துடன் படகு

பருத்தித்துறைக் கடற்பகுதியில் மீட்பு

தரைத் தாக்குதலிலும் ஒருவர் பலியாம்

கொழும்பு,ஓக. 18

பருத்தித்துறை, மணற்காட்டுப் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் சடலத்துடன் புலிகளின் படகு ஒன்றைத் தாம் கைப்பற்றியிருக்கின்றனர் எனக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மணற்காட்டு கடற்பகுதியிலிருந்து சுமார் அரைமைல் தூரத்தில் இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

படகுடன் சயனைட் வில்லை 01, 40 மில்லிமீற்றர் நீளமான கிரனேட் லோஞ்சர் மற்றும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருடைய சடலம் ஆகியன மீட்கப்பட்டன என்றும் கடற்படையினர் கூறியிருக்கின்றனர்.

எனினும், விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இந்தச் சம்பவம் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் வெளிவரவில்லை.

இதேவளை, பருத்தித்துறையில் உள்ள படையினரின் முன்னரங்க காவலரணுக்குள் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஊடுருவ முயன்றவர் எனக் கூறப்படும் நபர் ஒருவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உயிரிழந்த நபர் விடுதலைப் புலி உறுப்பினர் எனவும் சம்பவத்தின் பின்னர் அந்தப் பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதலில் அவரின் சடலத்துடன், 5 கிலோகிராம் எடையுடைய கிளைமோர்க் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டது என்றும் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி - சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.