Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் பீரங்கித் தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பிய யாழ். மாவட்ட இராணுவத்தளபதி

Featured Replies

[ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2007, 06:59 ஈழம்]

யாழ். மாவட்டத்தில் உள்ள முன்னணி பாதுகாப்பு நிலைகளின் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கி மற்றும் மோட்டார் படைவலு அதிகரித்துள்ள நிலையில் யாழ். குடாநாட்டில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இலக்குகளான படை உயர் அதிகாரிகளை பீரங்கித் தாக்குதல் முலம் குறிவைப்பதற்கு அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறீ அங்கு உள்ள முன்னணி பாதுகாப்பு நிலைகளுக்குச் சென்ற போதும் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய பீரங்கித் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளார். இந்த சம்பவம் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதுடன் அதனை பாதுகாப்பு தரப்பினர் மூடி மறைக்கவும் முற்பட்டுள்ளனர்.

முன்னர் விடுதலைப் புலிகள் இராணுவத் தளபதியான லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை குறிவைத்திருந்தனர். கடந்த ஆண்டு ஏப்பிரல் 25 ஆம் நாள் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்திருந்தார். இதனால் அவர் மூன்று மாதங்கள் பணியில் இருந்து அகற்றப்பட்டிருந்தார். அவர் அதற்கு முன்னரும் இரு தடவைகள் கடுமையாக காயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொன்சேகா காயமடைந்திருந்த வேளையில் இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் பரமி குலதுங்கா மற்றுமொரு தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.

எதிர்கால இராணுவத் தளபதியாக வருவதற்குரிய தகுதி உடைய ஜெனரல் சந்திரசிறீ இந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சந்திரசிறீயின் நடமாட்டங்களை படையினர் தரப்பில் உள்ள தகவல் வழங்குபவர்களின் உதவியுடன் விடுதலைப் புலிகள் அவதானித்து வந்துள்ளனரா என்பது தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொள்ளலாம்.

இராணுவத்தினர் தற்போது தமது படையினரையும், விடுதலைப் புலிகளையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். விடுதலைப் புலிகள் முன்னர் தற்கொலை குண்டுதாரிகளை மிகவும் திறமையாக பயன்படுத்தி வந்திருந்தனர். தற்போது அதற்கு அடுத்தபடியான தெரிவாக இராணுவ உயர் அதிகாரிகளை பீரங்கித் தாக்குதல்கள் மூலம் குறிவைப்பதை மேற்கொண்டு வருகின்றனர்.

பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்ட இணைப்பு புள்ளிகளை கொண்டு இலக்கை நோக்கி மிக அதிகளவான பீரங்கித் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தி வருவது தெளிவானது. அண்மைய காலத்திலும் அவர்கள் இத்தகைய தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியதற்கு இரு உதாரணங்களை கூறலாம்.

முதலாவதாக இந்த வருடம் பெப்ரவரி மாதம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற கவசத் தாக்குதல் படைப் பிரிக்கேட்டின் உத்தியோகபூர்வ வைபவத்தின் போது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலை குறிப்பிடலாம். இந்த தாக்குதலில் அந்த பிரிக்கேட்டின் கட்டளை அதிகாரியான லெப். கேணல் ரால்ஃப் நுகேரவும் அவரது இரு கட்டளை தளபதிகள் உட்பட 13 படையினரும் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதல் பளை, பூநகரி உட்பட மூன்று திசைகளில் இருந்து நடத்தப்பட்டிருந்தன. அன்று காயமடைந்தவர்களில் ஒரு கட்டளை தளபதி மீண்டும் பணிக்குத் திரும்பிய போதும் மற்றைய கட்டளை அதிகாரியும், லெப். கேணல் ரால்ஃப் நுகேரவும் இன்றுவரை கடமைக்குத் திரும்பவில்லை. தற்போது 53 ஆவது படையணியின் 1 ஆவது பிரிக்கேட்டின் பிரதி கட்டளை அதிகாரியாக கஜபா ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த லெப். கேணல் சாந்தா திசநாயக்க கடமையாற்றி வருகின்றார்.

இரண்டாவது உதாரணமாக, ஊடகவியலாளர்களை முகமாலை முன்னணி நிலைகளுக்கு படையினர் அழைத்துச் சென்ற போது நடைபெற்ற பீரங்கித் தாக்குதலை குறிப்பிடலாம். துருப்புக்காவி கவச வாகனங்களில் ஏற்றிச்செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் பீரங்கி எறிகணைகள் சரமாரியாக வீழந்து வெடிக்க தொடங்கியதுடன், அங்கு காவல் கடமையில் நின்ற படையினரும் பலியாகியிருந்தனர்.

விடுதலைப் புலிகளிடம்

122 மி.மீ பீரங்கிகள் - 22

152 மி.மீ நீண்டதூர பீரங்கிகள் - 02

130 மி.மீ பீரங்கிகள் என்பன உள்ளதுடன் அதன் மூலம் துல்லியமான பீரங்கி தாக்குதல்களை நடத்தக்கூடிய பலமும் அவர்களிடம் உண்டு.

கண்காணிப்பு செய்மதிகளின் மூலம் பெறப்படும் உடனடியான நம்பகமான படங்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருகின்றனரா என்பது தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுத்துறையினரும் ஏனைய தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டு கண்டறிய வேண்டும். இந்த படங்களை பல நாடுகளில் உள்ள செய்மதிகளை பயன்படுத்தும் நிறுவனங்களிடம் இருந்து அதிக செலவில் கொள்வனவு செய்ய முடியும். இத்தகைய நாடுகளில் அதிக தமிழ் மக்கள் வாழும் பிரான்ஸ் நாடும் அடங்கும்.

தேவையான அளவு நிதி வசதிகள் உள்ள போது விடுதலைப் புலிகள் ஒரு போதும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு பின்னிற்பதில்லலை. சில சந்தர்ப்பங்களில் படையினரை விட தொழில்நுட்பத்தில் முன்னணியில் விடுதலைப் புலிகளே நிற்கின்றனர். அதன் பின்னரே படையினர் அதனை பின்பற்றுகின்றனர். படையினருக்கான நிதிப் பற்றாக்குறையே இதற்கான காரணம்.

இதனிடையே, மடு தேவாலய உற்சவ காலத்தை முன்னிட்டு மடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை அடுத்து களமுனையில் அமைதி நிலவுகின்றது. எனினும் பரப்புக்கடந்தான், கல்மடு போன்ற மடுவை அண்டிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் தமது கனரக பீரங்கிகளை நகர்த்தியுள்ளதாக படையினரின் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் படையினரின் முன்னேற்றங்களை தடுக்கும் பொருட்டு முன்னணி பாதுகாப்பு நிலைகளில் அவர்கள் துருப்பு எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் பொறிவெடிகளை புதைத்து வருகின்றனர்.

வன்னியில் இராணுவத்தினரின் நடவடிக்கைக்காக விடுதலைப் புலிகள் காத்திருப்பதுடன், பதில் தாக்குதலுக்கான சரியான நேரத்திற்கும் அவர்கள் காத்திருக்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நன்றி புதினம்.

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sun Aug 19 22:38:28 Pacific Daylight Time 2007

.செய்மதிக் கண்காணிப்புகளுடன் புலிகள் மிகத் துல்லியமாகப் பீரங்கித் தாக்குதல்? யாழ். கட்டளைத் தளபதி ஜெனரல் சந்திரசிறி அருந்தப்பாம்!

யாழ். மாவட்டத்தில் உள்ள முன்னணி, பாதுகாப்பு நிலைகளின் மீது புலிகளினால் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார் எனக் கொழும்பில் இருந்து வெளிவரும் "த நேசன்' வார இறுதி ஆங்கில ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது.

இத்தகைய தாக்குதல்கள், புலிகள் தங் களின் பீரங்கித் தாக்குதல்களுக்கு செய்மதிக் கண்காணிப்புத் திரைச் சித்திரத்தைப் பயன் படுத்தி, அதன் மூலமே அத்தாக்குதல் களைத் துல்லியமாக மேற்கொள்கின்றார் களா என்று ஆராய வேண்டிய நிலைப் பாட்டை உருவாக்கியிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக "த நேசன்' மேலும் தெரிவித்திருக்கும் விடயங்கள் வருமாறு:

தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கி மற்றும் மோட்டார் படைவலு அதிகரித் துள்ள நிலையில், யாழ். குடாநாட்டில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இலக்குகளாக படை உயர் அதிகாரிகளை பீரங்கித் தாக்குதல் மூலம் குறிவைப்பதற்கு அவர்கள் முயற் சித்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அங்கு உள்ள முன்னணிப் பாதுகாப்பு நிலைகளுக்குச் சென்ற போது, விடுதலைப் புலிகள் நிகழ்த்திய பீரங்கித் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பி யுள்ளார். இந்தச் சம்பவம் பாதுகாப்பு வட்டா ரங்களில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதுடன் அதனை பாதுகாப்புத் தரப்பினர் மூடி மறைக்கவும் முற்பட்டுள்ளனர்.

முன்னர் விடுதலைப் புலிகள், இராணு வத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன் சேகாவை குறிவைத்திருந்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற தற் கொலைத் தாக்குதலில் அவர் படுகாய மடைந்திருந்தார். இதனால் அவர் மூன்று மாதங்கள் பணியில் இருந்து அகற்றப்பட் டிருந்தார். அவர் அதற்கு முன்னரும் இரு தடவைகள் கடுமையாகக் காயமடைந் தமை குறிப்பிடத்தக்கது.

பொன்சேகா காயமடைந்திருந்த வேளை யில் இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் பரமி குல துங்கா மற்றொரு தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.

எதிர்கால இராணுவத் தளபதியாக வரு வதற்குரிய தகுதி உடைய ஜெனரல் சந்திர சிறி இந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சந்திரசிறியின் நடமாட்டங்களை, படையி னர் தரப்பில் உள்ள தகவல் வழங்குபவர் களின் உதவியுடன் விடுதலைப் புலிகள் அவதானித்து வந்துள்ளனரா என்பது தொடர்பான விசாரணைகளை அதிகாரி கள் மேற்கொள்ளவுள்ளனர்.

இராணுவத்தினர் தற்போது தமது படை யினரையும் விடுதலைப் புலிகளையும் கவ னித்து வருகின்றனர். விடுதலைப் புலிகள் முன்னர் தற்கொலைக் குண்டுதாரிகளை மிகவும் திறமையாக பயன்படுத்தி வந்தி ருந்தனர். தற்போது அதற்கு அடுத்தபடி யான தெரிவாக இராணுவ உயர் அதிகாரி களை பீரங்கித் தாக்குதல்கள் மூலம் குறிவைப்பதை மேற்கொண்டு வருகின்ற னர்.

இலக்கை நோக்கிய

துல்லியமான பீரங்கித் தாக்குதல்

பெறப்பட்ட தரவுகளின் அடிப்படை யில் கணிக்கப்பட்ட இணைப்புப் புள்ளி களை கொண்டு இலக்கை நோக்கி மிக அதிகளவான பீரங்கித் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தி வருவது தெளிவானது. அண்மைய காலத்திலும் அவர்கள் இத்தகைய தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியமைக்கு இரு உதா ரணங்களைக் கூறலாம்.

முதலாவதாக இந்த வருடம் பெப்ரவரி மாதம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற கவசத் தாக்குதல் படை பிரிக்கேட்டின் உத்தியோகபூர்வ வைபவத்தின் போது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலைக் குறிப்பிடலாம். இந்தத் தாக்குதலில் அந்த பிரிக்கேட்டின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேணல் ரால்ஃப் நுகேரவும் அவரது இரு கட்டளைத் தளபதிகள் உட் பட 13 படையினரும் காயமடைந்திருந்த னர்.

இந்தத் தாக்குதல் பளை, பூநகரி உட் பட மூன்று திசைகளில் இருந்து நடத்தப் பட்டிருந்தது. அன்று காயமடைந்தவர்க ளில் ஒரு கட்டளை அதிகாரியும், லெப். கேணல் ரால்ஃப் நுகேரவும் இன்றுவரை கடமைக்குத் திரும்பவில்லை. தற்போது 53ஆவது படையணியின் முதலாவது பிரிக்கேட்டின் பிரதிக் கட்டளை அதிகாரி யான கஜபா ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் சாந்தா திசநாயக்க கடமையாற்றி வருகின்றார்.

இரண்டாவது உதாரணமாக, ஊடகவியலாளர்களை முகமாலை முன்னணி நிலைகளுக்கு படையினர் அழைத்துச் சென்றபோது நடைபெற்ற பீரங்கித் தாக்கு தலைக் குறிப்பிடலாம். துருப்புக்காவி கவச வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் பீரங்கி எறிகணைகள் சரமா ரியாக வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. அங்கு காவல் கடமையில் நின்ற ஒரு காவ லாளரின் தலை பிய்ந்து பறந்து.

விடுதலைப் புலிகளிடம் 122 மி.மீ. பீரங்கிகள் 22, 152 மி.மீ. நீண்டதூர பீரங் கிகள் 02 மற்றும் 130 மி.மீ. பீரங்கிகள் என்பன உள்ளன. அவற்றின் மூலம் துல்லியமான பீரங்கித் தாக்குதல்களை நடத்தக்கூடிய பலமும் அவர்களிடம் உண்டு.

கண்காணிப்பு செய்மதிகளின் மூலம் பெறப்படும் உடனடியான நம்பகரமான படங்களை விடுதலைப் புலிகள் பயன் படுத்தி வருகின்றனரா என்பது தொடர்பாக ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையினரும் ஏனைய தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டு கண்டறிய வேண்டும். இந் தப் படங்களை பல நாடுகளில் உள்ள செய்மதிகளைப் பயன்படுத்தும் நிறுவனங் களிடம் இருந்து அதிக செலவில் கொள் வனவு செய்ய முடியும். இத்தகைய நாடுகளில் அதிக தமிழ் மக்கள் வாழும் பிரான்ஸ் நாடும் அடங்கும். என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. (சி)

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.