Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலாச்சாரம் பற்றி கதைக்கும் சூனியம்

Featured Replies

புலிகளுக்கு இன்னும் பாடம் புகட்டுவோம் என்கிறார் கோதாபய ராஜபக்ஷ

`எந்தவிதமான கலாசாரமும் தெரியாதவர்களிடம் மனித உரிமைகள் தொடர்பாக கற்க வேண்டிய தேவை தமக்கில்லையெனத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ 4, 5 மணித்தியாலங்கள் மட்டும் இலங்கையில் இருந்துவிட்டு மனித உரிமைகள் மீறப்படுகின்றன, அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்பட முடியாதுள்ளதென கூறும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை' என்றும் கூறினார்.

தனியார் தொலைக்காட்சி சேவையான `தெரண'வுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேலும் கூறியதாவது;

"எமது நாட்டில் ஒரு பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சினைகளினால் கடந்த காலங்களில் நாம் இழந்தது எண்ணிலடங்காதது. ஆனால், நாம் இப்போது எமது பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிக நேர்த்தியாக செயற்படுகிறோம். இன்று கொழும்பை பாதுகாப்பான சூழலாக மாற்றியும் உள்ளோம்.

இவ்வாறான காரணங்களுக்காகவே கடந்த காலங்களில் கொழும்பில் தேவையில்லாமல் தங்கியிருந்த தமிழர்களை விசாரணை செய்து சந்தேகத்திற்கிடமானவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பினோம். அதுவும் அவர்களது விருப்பத்துடனேயே அனுப்பினோம்.

ஆனால், இந்த நடவடிக்கையின் பின்பு வெளியான அறிக்கைகள், கருத்துகள் எம்மீது வீண் பழியை சுமத்துவதாகவே அமைந்தன. ஒரு சில சந்தர்ப்பங்களில் நாம் தவறு இழைத்திருந்ததை அறிந்த பின்பு நாம் மன்னிப்பும் கோரினோம்.

புலிகள் கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைப்பதற்கும் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைப்பதற்கும் கொழும்பு நகர்ப்புறத்தில் காணப்படும் லொட்ஜ்களிலேயே தங்கியிருந்தனர். எனவே தான் நாம் லொட்ஜ்களில் தேவையில்லாமல் இருந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினோம்.

நாட்டைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கே உள்ளது. இதனால் நாம் நாட்டின் பாதுகாப்பு கருதி செயல்படுத்தும் சோதனைகள், தேடுதல்கள் போன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் சிரமங்களுக்கு உள்ளாகினாலும் அது அவர்களின் பாதுகாப்பிற்கே அன்றி, எனதோ, அரசினதோ, இராணுவத்தினதோ பாதுகாப்புக்காக அல்ல.

எமது நாட்டின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கமாகிய நாங்கள் இதய சுத்தியுடனேயே செயற்பட்டு வருகிறோம். எனவேதான் புலிகளுடன் இருந்து பிரிந்த கருணா குழுவினரை யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாமல் அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வழி வகுத்துக் கொடுத்துள்ளோம்.

நாட்டு மக்களின் தேவையை அரசாங்கமே அறியும். எனவே, அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசுடன் இணைந்து நாம் கைப்பற்றிய கிழக்கு போன்ற பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

கிழக்கை புலிகளிடம் இருந்து நாம் கைப்பற்றிய போது, அந்த வெற்றிக்கு ஆதரவளிக்காமல் பணம் கொடுத்து புலிகளை பின்வாங்கச் செய்தோம் என சிலர் அப்பட்டமான பொய்களை தெரிவித்தனர். இவ்வாறான பொய்க் கருத்தை கூறியவர்கள் நிச்சயமாக இலங்கையர்களாக இருக்க முடியாது.

மிக் விமானக் கொள்வனவில் ஊழல் என்றார்கள். நான் இந்த மிக் கொள்வனவின் போது பணத்தை எடுத்தேன் என்று பொய்க் குற்றச்சாட்டுகளை கூறினார்கள். நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவியேற்ற போது இராணுவத் தளபாடங்கள் கொள்வனவில் ஏற்படும் ஊழலை நிறுத்தவே முதலில் நடவடிக்கை எடுத்தேன்.

இந்த மிக் விமானக் கொள்வனவில் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் அனுமதியை மாத்திரமே வழங்கினேன். மிக் விமானத் தெரிவு மற்றும் எங்கு கொள்வனவு செய்வது? என்ன விலை போன்றவைகளை விமானப்படையே தெரிவு செய்து சட்ட திட்டங்களுக்கு ஏற்ப செயல்பட்டது. இதில் மூன்றாம் தரப்பும் இல்லை, ஊழலும் இல்லை.

ஆனால், மிக் விமானக் கொள்வனவில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது போலும் அதில் எனக்கும் சம்பந்தம் இருக்கிறதெனவும் பொய்ப் பிரசாரமொன்று தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரின் அமைச்சுகளில் எனது தலையீடுகள் இருந்ததனாலேயே அவர்கள் கட்சியிலிருந்தும் அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் வெளியேறியதாக கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான விடயம். நான் யாருடைய அமைச்சிலும் தலையிடுவதில்லை. அந்தத் தேவையும் எனக்கில்லை.

35 வருட கால அரசியல் அனுபவம் உள்ள எமது ஜனாதிபதியைப் பற்றிப் பேசவோ அவருக்கு ஆலோசனை கூறவோ நான் தகுதியானவன் அல்ல. அரசியலில் எனக்கு அனுபவமும் கிடையாது.

கிழக்கின் முக்கியத்துவம் அறிந்த புலிகள் அங்கு வாழ்ந்த சிங்களவர்களை கொடூரமாக கொலை செய்து 10 வீதமாக குறைத்தனர். ஆனால், இப்போது நாங்கள் கிழக்கை கைப்பற்றியதன் மூலம் இராணுவ ரீதியாக பலமடைந்துள்ளோம்.

நாம் இன ரீதியாக சக்தி பெற்றவர்கள். எமக்கு நல்ல இராணுவ பலம் உண்டு. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் எமது படைகளில் எனக்கு நம்பிக்கையும் இருக்கிறது. எம்மிடம் திறமையான தளபதிகள், படைவீரர்கள் உள்ளனர்.

புலிகளுக்கு ஏற்கனவே பாடம் புகட்டி உள்ளோம். எதிர்காலத்திலும் பாடம் புகட்டுவோம்.

பிரபாகரன் தமிழர்களின் கலாசாரத்தை, எதிர்காலத்தை அழித்துவிட்டார். யுத்தத்தில் நாம் புலிகளை தோற்கடித்து அரசியல் ரீதியான தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவோம். இதற்கு மக்களின் பூரண ஆதரவு எமக்குத் தேவை."

http://www.thinakkural.com/news/2007/8/20/...s_page34429.htm

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு பாடம் கற்பித்துள்ளோம்எதிர்காலத்த

  • தொடங்கியவர்

விரைவில புலிகளிடம் இருந்து பாடம் கற்றுகொள்ளாவிட்டால் சரி:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.