Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேரினவாத சக்திகளை திருப்திப்படுத்தும் முயற்சிகள் இலங்கையில் தொடர் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாத சக்திகளை திருப்திப்படுத்தும் முயற்சிகள் இலங்கையில் தொடர் கதை

[21 - August - 2007]

வ. திருநாவுக்கரசு

* கடும் போக்காளர்களுக்கு வளைந்து கொடுக்காமல் ஆளுங்கட்சி செயற்படுவதே அவசியத்தேவை

"எனது செல்வாக்கு சரிந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் மக்கள் பேச்சைக் கேட்பதற்குப் பதிலாக எனது ஆலோசகர்கள் பேச்சை நம்பி விட்டேன்"- முஷாரப்.

மனிதாபிமான பணியாளர்கட்கு இலங்கை உலகிலேயே மிகப் பயங்கரமான நாடுகளில் ஒன்று என ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் சேர். ஜோன் ஹோம்ஸ் அண்மைய இலங்கை விஜயத்தின் போது தெரிவித்த கருத்து தொடர்பாக பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், பின்னர் பொதுக் கூட்டமொன்றில் வசைபாடியது போதாதென்று, அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஹோம்ஸ் ஒரு பயங்கரவாதி என்றும் அறைந்துவிட்டார். அது தேவையற்றதும் ஏற்க முடியாததும் எனவும், ஹோம்ஸ் செயற்பட்ட விதத்தில் ஒரு தவறுமில்லை எனவும் ஐ.நா. செயலாளர் பாங் கி மூன் சாட்டையடி கொடுத்துள்ளார்.

அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தது அவரின் தனிப்பட்ட கருத்தே ஒழிய அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு அமைச்சர் போகொல்லாகம பதிலளித்துள்ளார். ஐ.நா. உயரதிகாரிகட்கு பயங்கரவாத முத்திரை குத்தினால் நிதி உதவி கிடைக்காது என்பதே போகொல்லாகமவின் வாதமாகும்! அதேநேரத்தில் பெர்னாண்டோபுள்ளேயின் கூற்று அரச தரப்பில் உத்தியோகபூர்வமாக மறுக்கப்படவில்லை. இதனிடையில், சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகளுக்கு உதவி வருவதாகவும், அர சாங்கம் வெளிநாட்டு சக்திகளுக்கு அஞ்ச வேண்டியுள்ளதெனவும் பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார். எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து ஆட்சியாளர் மத்தியில் அதீத அவநம்பிக்கையும் சந்தேக மனோபாவமும் குடிகொண்டிருப்பதாக எண்ணும் நிலைக்கு சர்வதேச சமூகம் தள்ளப்படுகிறது. இவ்வாறாக இலங்கை சர்வதேச ரீதியில் பரிதாபமாக அந்நியப்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். ஆக, இனிமேலாவது, அரசாங்க தரப்பிலான பேச்சாளர்கள் அறிவுக்கு வேலைகொடுத்து ஆவேசத்திற்கு இடமளிக்காமல் இருப்பதையே மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழர் அவலங்கள்

விசம் போல ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசிகள் காரணமாக அநேகமான சாதாரண பொதுமக்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர். அதற்கப்பால், வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் தட்டுப்பாடுகள் அடங்கலான அவலங்கள் வரலாறு காணாதவை. இது விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று மேற்குலக நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன்னோரன்ன பிரச்சினைகளை எடுத்து விளக்கியதாகவும், மக்கள் படும் அவலங்களை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் சர்வதேச அழுத்தங்களில் மட்டும் தங்கியிருப்பதை விடுத்து, பாதிக்கப்பட்டு புழுங்கிக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களை முடுக்கி விடுவது அவசியமாகும்.

இந்தியா முன்னோக்கி - இலங்கை பின்நோக்கி

இலங்கை அரசாங்கம் தனது சொந்தப் பிரஜைகள் மீது இத்தனை அவலங்களையும் சுமத்திவரும் அதேவேளை, சர்வதேச அரங்கில் தன்னைத்தானே அம்பலப்படுத்திச் செல்லுமளவுக்கு கிஞ்சித்தும் பக்குவமின்றிச் செயற்படுவதாக அநேகமான மக்கள் அதிகம் கவலை கொண்டுள்ளனர். இன்று நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இலங்கை பொருளியலாளர் சங்கத்தலைவர் பேராசிரியர் A.D.V.de.S. இந்திரரத்ன "நீதியின்மை, வறுமை மற்றும் அபிவிருத்தி" எனும் தொனிப்பொருளில் அண்மையில் உரையாற்றுகையில் ஊழலும் ஒருவிதமான பயங்கரவாதம் என குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, ரூ. 3.2 பில்லியன் பெறுமதி சேர் வரி மோசடி உள்ளது. பொது நிறுவனங்கள் குழுவின் (COPE) தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையின்படி, ஊழல் காரணமாக 26 அரச நிறுவனங்கள் தொடர்பாக ஏறத்தாழ ரூ. 100 பில்லியன் வருமானம் இழக்கப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் திரட்டி முதலீடு செய்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2% அதிகரிக்கும். மற்றும் யுத்த செலவீனங்கள் தவிர்க்கப்பட்டால் அதாவது சமாதானம் விரைந்து எட்டப்படுமாயின், பொருளாதார வளர்ச்சி தானாகவே 3% அதிகரிக்குமென சென்ற டிசம்பரில் நடைபெற்ற இலங்கை அபிவிருத்தி மன்றக் கூட்டத்தில் உலக வங்கியின் தெற்காசிய உபதலைவர் பிரவுல் பட்டேல் கூறி வைத்தது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். இன்று இலங்கையில் பொருளாதார வளர்ச்சி 7.4% என மத்திய வங்கி அறிவித்துள்ளதாயினும், உண்மையான வளர்ச்சி 5% என்பதே சர்வதேச ஆய்வின்படியான கணிப்பீடாகும். எவ்வாறாயினும் மேற்படி ஆய்வுகளின்படி பார்க்குமிடத்து இலங்கையின் பொருளாதாரம் 10% வளர்ச்சி எய்த வேண்டிய வாய்ப்பு குழிதோண்டிப் புதைக்கப்படுவதையே காணமுடிகிறது! இன்று இந்தியாவின் வளர்ச்சி 9.4% ஆயிருக்கிறது. அமெரிக்க டொலர் தொடர்பில் இந்திய ரூபாவின் பெறுமதி 20% அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி 16% வீழ்ச்சியடைந்துள்ளது. மற்றும் 2025 ஆம் ஆண்டளவில் இந்தியா அபிவிருத்தியடைந்த நாடு அல்லது முதலாவது உலக நாடு எனும் நிலையை எட்டிவிடக்கூடிய சாத்தியம் நிச்சயமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் சின்னஞ்சிறு இலங்கை எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பது பற்றி ஆட்சியாளர் ஏன் சற்று சிந்திக்கக்கூடாது?

அரசியல் தீர்வு

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தான் அவசியம். தமிழரின் அபிலாஷைகள் வழங்கப்பட்டு சமாதானத்தைக் கொண்டுவர வேண்டுமே ஒழிய, யுத்தத்தினை தொடர்ந்து நடத்துவது முற்றிலும் விவேகமற்றதென முன்னாள் விமானப்படைத் தளபதிகள் மூவர் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர் அண்மையில் தெரிவித்த கருத்துகளை முன்னைய கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

யுத்த களமுனையில் நிறைந்த அனுபவமுள்ள முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரியும், அவுஸ்திரேலிய மற்றும் இந்தோனேசிய தூதுவருமாயிருந்தவருமாகிய ஜானக்க பெரேரா, முன்பு வெலிஓயா சமர் "இடி முழக்கம்" மற்றும் "சூரியக்கதிர்" போன்ற இராணுவ நடவடிக்கை"களில் வெற்றியீட்டிய வரலாற்றினை 19.08.07 "சண்டே லீடர்" இதழுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். விடுதலைப்புலிகளைத் தோற்கடிக்க முடியுமெனக் கூறிய அவர், கடந்த காலங்களில் அரசாங்கம் சந்தித்த பல தோல்விகள் பற்றி குறிப்பிடவில்லை. விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதல்கள் பற்றி கூறுகையில், அவர்களின் முன்னைய குண்டுவீச்சுகள் துல்லியமாயிருக்கவில்லையாயி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.