Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டின் பிரச்சினைகள் குறித்து சிங்கள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட அச்சப்படுகின்றன : ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பிரச்சினைகள் குறித்து சிங்கள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட அச்சப்படுகின்றன : ரணில்

Written by Ravanan - Aug 21, 2007 at 08:23 PM

மக்களின் இறைமை, ஊடக சுதந்திரம் மற்றும் பாராளுமன்ற இறைமை ஆகியவற்றை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் ஆரம்பம் முதல் பாரிய மற்றும் விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எமது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்களின் இறைமை மீறப்படுவதனை பார்த்துக்கொண்டு இனியும் மௌனமாக இருக்கமுடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பிரச்சினைகள் குறித்து சிங்கள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட அச்சப்படுகின்றன. ஆ னால் தமிழ் பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுவதால் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலைசெய் யப்படுகின்றனர்.

மேலும் சில தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டால் தமிழ் பத்திரிகைகளை மூடவேண்டியேற்படும். இதனை பத்திரிகையாளர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை குறித்து அவதானம் செலுத்தவேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது : நாட்டில் இடம்பெறும் பிரச்சினைகள் குறித்து சிங்கள பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுவதில்லை. செய்திகளை வெளியிட சிங்கள பத்திரிகைற அச்சப்படுகின்றன என்று நான் நேரடியாக கூறுகின்றேன். நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரின் உரைகளை பத்திரிகைகளில் பிரசுரிக்கவேண்டும். இது பொறுப்பான விடயமாகும். ஆனால் எமது நாட்டில் எதிர்க்கட்சி தலைவராகிய எனது உரை சிங்கள பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படவில்லை.

அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் நான் நிகழ்த்திய உரை சரியான முறையில் பிரசுரிக்கப்படவில்லை. அந்த கூட்டத்தில் ஸ்ரீவிக்ரம இராஜசிங்க சித்தசுவாதீனமற்றவர் என்று நான் கூறினேன். அது யாவரும் அறிந்த உண்மையாகும். இவ்விடயம் எவரையும் புண்படுத்தாது. ஆனால் அந்த விடயம் சரியாக வெளிவரவில்லை. காரணம் அந்த விடயத்தை பிரசுரித்தால் அரசாங்கத்தின் வேறுவிதமாக எண்ணிவிடும் என்று சிங்கள பத்திரிகைகள் நினைத்திருக்கலாம்.

மக்களின் பிரச்சினைகள் எதுவும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுவதில்லை. ஆனால் தொன் ஜுவால் தர்மபால, தேசதுரோகி மற்றும் புலிகளுடன் உடன்படிக்கை செய்தவன் என்று என்னை விமர்சித்தபோது அவற்றை சிங்கள பத்திரிகைகள் பிரசுரித்தன. அதனை நான் எதிர்க்கவில்லை. காரணம் நான் ஊடக சுதந்திரத்தை மதிக்கின்றேன். ஆனால் தற்போதைய அரசாங்கம் புலிகளுடன் உடன்படிக்கை செய்துகொண்ட விவகாரம் குறித்து நாங்கள் பேசினால் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுவதில்லை.

ஆனால் தமிழ் பத்திரிகைகள் இதற்கு எதிர்மாறான வகையில் செயற்படுகின்றன. பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டு வருவதுடன் எமது உரைகளையும் பிரசுரிக்கின்றன. அதனால்தான் தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். மேலும் சில தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டால் தமிழ் பத்திரிகைகளை மூடவேண்டிய நிலைமை ஏற்படும் என்று பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

முக்கியமாக தமிழ் ஊடகவியலார்களின் படுகொலை குறித்து விசேட அவதானம் செலுத்தவேண்டியுள்ளது. இதேபோன்று ஆங்கில பத்திரிகைகளும் பல்வேறு அச்சறுத்தல்களுக்கு முகம் கொடுக்கின்றன. முக்கியமாக மிக் விமான கொள்வனவில் இடம்பெற்றுள்ள 80 கோடி ரூபா ஊழல் குறித்து பிரபல ஊடகவியலார் இக்பால் அத்தாஸ் ஆங்கில வராப்பத்திரிகை ஒன்றில் எழுதினார். ஆரம்பதில் அந்த கட்டுரையை பிரசுரிக்கவேண்டாம் என்று அழுத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குறிப்பிட்ட கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. மறுநாள் இக்பால் அத்தாஸின் பாதுகாப்பு நீக்கப்பட்டது. இக்பால் அத்தாஸ{க்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அரசாங்கமே சில காலத்துக்கு முன்னர் பாதுகாப்பை வழங்கியது. தற்போது அச்சுறுத்தல் இல்லை என்று அறிவிக்கப்படாத நிலையில் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையில் இக்பால் அத்தாஸின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உடனே புலிகளின் மேல் பழிசுமத்திவிடுவார்கள். அவர் எதற்காக ஆபத்தை எதிர்நோக்குன்றார் என்ற விடயம் வெளிவராது.

கட்டுரையை பிரசுரித்தமையினால் கொலை செய்யப்பட்டாரா என்ற விடயம் கூட வெளிவராது. இக்பாலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றால் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கியிருக்கலாம். இலத்திரனியல் ஊடகங்களும் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. மக்களால் நாட்டின் உண்மைத் தகவல்களை அறிந்துகொள்ள முடியாமல் உள்ளது. அவர்களின் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. மக்களின் கருத்து சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது.

நாட்டில் விவசாயிகளுக்கு உரத்தை பெறமுடியாமல் உள்ளனர். வாழ்க்கைச் செலவு உயர்வினால் மக்கள் திண்டாடுகின்றனர். பாடசாலைகளுக்கு மாணவர்களால் செல்ல முடியவில்லை. சுகாதாரம் கீழ் மட்டத்தில் உள்ளது. ஆனால் இவ்வாறான எந்த தகவல்களும் ஊடகங்களில் வெளிவருவதில்லை. முக்கியமாக சிங்கள ஊடகங்களில் வெளிவருவதில்லை. அரசாங்கத்துடன் சில குழுக்கள் சேர்ந்து இயங்குகின்றதா ? என்ற கேள்வியும் எழுகின்றது.

ஆரம்ப காலத்தில் 15 சதத்தால் பொருளொன்றின் விலை அதிகரித்தால் கூட அதனை ஊடகங்கள் பாரிய பூதாகரமாக மாற்றிவிடும். ஆனால் இன்று ஊடகங்கள் மௌனம் காக்கின்றன. ஊடகங்களை அடக்கி ஏகாதிபத்தியத்தை நோக்கி நாடு தள்ளப்படுகின்றது. ஊடக சுதந்திரத்தை மறுப்பதென்பது மக்களின் சுதந்திரத்தை மறுப்பதற்கு சமமாகும். மக்களுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்னன. ஊடக சுதந்திரம் இருந்தால் மட்டுமே மக்களால் தேர்தல்களின் போது தீர்மானங்களை எடுக்க முடியும்.

ஆனால் அந்த நிலைமை நாட்டில் தற்போது இல்லை. ஊடகங்களை அடக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள சகோதர நிறுவனத்துக்கு இடமளிக்கமாட்டோம். அரசாங்க செலவில் 75 சதவீமான நிதியை ராஜபக்ஷ சகோதர நிறுவனமே நிருவகிக்கினற்து. 25 சதவீதமான நிதியை பற்றியே நாம் பேசுகின்றோம். ஆனால் அமைச்சர்கள் இவற்றை வெளியே பேசுவதற்கு அச்சப்படுகின்றனர். இந்நிலையில் மக்களின் இறைமை, ஊடக சுதந்திரம் மற்றும் பாராளுமன்ற இறைமை எமது உரிமைகளை உறுதிபடுத்துவதற்காக ஐக் கிய தேசிய கட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.

தற்போது போராடங்களை நடத்திவருகின்றோம். வி øரவில் அதனை தாண்டிய செயற்பாடுகளை மேற்கொள்வோம். இன்றைய நிலையில் பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. இதனை தொடர விடமுடியாது. நாட்டில் ஊடக சு தந்திரம் மற்றும் மக்களின் இறைமை பாதுகாக்கப்படுகின்ற சூழலை நாம் உருவாக்குவோம். இந்த உரிமைகளை சூறையாடுவதற்கு சகோதர நிறுவனத்துக்கு இடமளிக்கமாட்டோம்

நன்றி - சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.