Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு

By T. SARANYA

05 OCT, 2022 | 04:24 PM
image

2022ம் ஆண்டுக்கான இரசாயனவியல் துறைக்கான  நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு இரசாயனவியலுக்கான  நோபல் பரிசு "மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும்" வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆர். பெர்டோசி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே. பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 2022-ம் ஆண்டு பௌதிகவியலுக்கான நோபல் பரிசு  அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/137057

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் எழுத்தாளருக்கு அறிவிப்பு

By T. SARANYA

07 OCT, 2022 | 03:04 PM
image

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்குரிய நோபல் பரிசு நேற்று (06) அறிவிக்கப்பட்டது. 

FeYZG8tXoAAihcJ.jpg

அதன்படி, இந்த ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு 82 வயதான  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அனி எர்னாக்ஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல் அகுபேஷன் (L'occupation) என்ற புத்தகத்தை எழுதியதற்காக எழுத்தாளர் அனி எர்னாக்ஸ்-க்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, 2022 ஆம் ஆண்டுக்கான இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/137190

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

By T. SARANYA

07 OCT, 2022 | 03:54 PM
image

2022  ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மனித உரிமை செயற்பாட்டாளருக்கும், இரண்டு மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் இன்று (07) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அலெஸ் பியாலியாட்ஸ்கி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் உரிமைகளுக்கான மையம் ஆகிய அமைப்புகளுக்கும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/137193

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.