Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகள் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கு பரிந்துரைப்பதற்கான நேரமிது – புலம்பெயர் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகள் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கு பரிந்துரைப்பதற்கான நேரமிது – புலம்பெயர் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்

 

மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகள் போர்க் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப பரிந்துரைப்பதற்கான தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதற்கான நேரமிது என புலம்பெயர் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பாற்றர்சன் தெரிவித்துள்ளார்.

Raji-252x300.jpg
மனித உரிமை அமைப்புகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான பொதுவிவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது;

இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகர் அறிக்கை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் முதல் பொருளாதார முறைகேடு வரையிலான பல்வேறு பிரச்சினைகளை வெளிப்படுத்துகிறது.

இலங்கையின் தற்போதைய பிரச்சினைக்கு உரம் மற்றும் கொவிட்-19 மூல காரணம் எனக் கூறுவது வெறும் காரணம் மட்டுமே. 2009 மே மாதம் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு நேரடிக் காரணமான ஊழல் மிக்க தலைமைதான் பிரச்சினை. இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இனப்பிரச்சினையின் வரலாற்றை ஐக்கிய நாடுகள் சபை ஆராய வேண்டும்.

அடக்குமுறை அரசாங்கங்கள் தமிழர்களின் உரிமைகளை துஷ்பிரயோகம் செய்து, அவர்களை ஆயுதப் போராட்டத்தை நோக்கி நகர்த்தின. தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களால் நசுக்கப்பட்டது. தமிழர்களின் விடுதலைப் போராளிகள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, அவர்களின் குரல்களை நசுக்கும் அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரத்தால் கையாளப்பட்டனர்.

போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் இனப்படுகொலை ஆகியவை ஒருபோதும் இன்னமும் விசாரிக்கப்படவில்லை. இது ஆளும் கட்சிகளை மேலும் வலுப்படுத்தியது. ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின்படி சிறந்த மனித உரிமை நடைமுறைகளை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி மற்றும் காலதாமத தந்திரங்களை பயன்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. பதின்மூன்று ஆண்டுகள் கடந்தும் யாரும் விசாரிக்கப்படவில்லை. ஐ.நா.வின் R2P தமிழர்களை பாதுகாக்கவில்லை. மாறாக, தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கொடூரமான சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம் பொறுத்துக் கொள்ளப்பட்டது.

கடுமையான பொருளாதார நெருக்கடியானது இலங்கையர்களுக்கு அன்றாட வாழ்க்கையை ஒரு போராட்டமாக மாற்றியுள்ளது. இது தேசிய ரீதியான உரையாடல் மற்றும் நாட்டில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவைப்படும் குறைகளை முன்னிலைப்படுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பு நாடுகள் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்ப பரிந்துரைப்பதுடன் , தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது. இலங்கையில் இடம்பெற்ற பொருளாதார குற்றங்களின் அடிப்படை மூலத்தை ஆராய்ந்து குற்றவாளிகளை தண்டிக்க விசேட அறிக்கையாளரை நியமிக்குமாறு ஐ.நா.வை வலியுறுத்துகிறோம்.

https://thinakkural.lk/article/213542

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.