Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குதிரைக் கொம்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குதிரைக் கொம்பு

By DIGITAL DESK 5

09 OCT, 2022 | 01:56 PM
image

கார்வண்ணன்

அரசியல் விபத்து ஒன்றின் மூலம், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் உயர் அதிகாரத்துக்கு வந்து மூன்று மாதங்களைத் தொடும் நிலையில் இருக்கிறார்.

இப்போது அவரது போராட்டம் முழுவதும், அடிமட்டத்துக்குச் சென்று விட்ட நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற காலகட்டத்தில் எரிபொருளுக்கு, எரிவாயுவுக்கு, பால்மாவுக்கு, பொருட்களுக்கு வரிசைகள் காணப்பட்டன.

இப்போது அந்த வரிசைகளைக் காண முடியவில்லை. ஆனால் நாட்டினமும் மக்களினதும் பொருளாதார நிலை மேம்படவில்லை.

உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களும், வெளிநாடுகளும், இலங்கைக்கு பெரியளவிலான நிதியுதவிகளை வழங்கவில்லை.

அதேவேளை நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மோசமடைந்து விடக்கூடாது என்பதற்காக, அதிகளவிலான மனிதாபிமான உதவிகளையும், கொடைகைளையும் வழங்கி வருகின்றன.

இது மக்கள் வரிசையில் நிற்கும் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உதாரணத்துக்கு, வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இல்லாமல், எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாமல் இருந்த லிட்ரோ நிறுவனத்துக்கு உலக வங்கி 70மில்லியன் டொலர்கள் கடனை வழங்கியது.

அதனைக் கொண்டு இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு தான், அதற்கான வரிசையை இல்லாமல் செய்திருக்கிறது.

மண்ணெண்ணெய்க்கான வரிசையையும், இல்லாமல் செய்திருக்கிறது. 

அதுபோன்று, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மாத்திரமன்றி, மியான்மார், பங்களாதேஷ் போன்ற நாடுகளும் கூட அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை உதவியாக அனுப்பி வைத்தன.

அந்த கொடைகள், அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களைக் குறைத்திருக்கிறது. இறக்குமதிச் செலவினங்களை குறைத்து, கையிலுள்ள வெளிநாட்டு நாணயக் கையிருப்பை வேறு அவசியமான பொருட்களின் இறக்குமதிக்குப் பயன்படுத்தக் கூடிய நிலையை ஏற்படுத்தியிருகிறது.

சர்வதேச நாணய நிதியத்திடம் பெறப்படும், 2.9 பில்லியன் டொலர்கள் கடனைக் கொண்டு, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து ஓரளவுக்கு மீள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  நம்புகிறார்.

டிசெம்பர் மாதத்துக்குள் இலங்கை முதற்கட்ட நிதியைப் பெற முடியும் என்று அவர் நம்புகின்ற போதும், அதற்கு சாத்தியமில்லை என்கிறது சர்வதேச நாணய நிதியம்.

சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு, பணியாளர் மட்டத்திலானது மட்டுமே.

அதைவிட இது ஒரு உடன்பாடே இல்லை என்றும், வெறுமனே புரிந்துணர்வு இணக்கப்பாடு தான் என்றும் அரசாங்கம் கூறுகிறது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின், உயர்மட்ட பணிப்பாளர் சபை இதனை அங்கீகரிக்க வேண்டும்.

இதற்குப் பின்னர் தான், சூழ்நிலைகளைப் பொறுத்தும், அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்படுகிறதா- நிறைவேற்றப்படும் சூழல் உள்ளதா என்பதைக் கணித்தும், தீர்மானங்கள் எடுக்கப்படும்.

அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.

ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய மூன்றும் தான் இலங்கையின் பிரதான கடன் வழங்குநர்களாக உள்ளன. 

இவை தவிர ஐரோப்பிய நாடுகளும், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, போன்றனவும் உள்ளன.

ஆனாலும் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களை முன்னெடுக்க- அதற்கான மாநாடு ஒன்றைக் கூட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பல வாரங்களாக பேச்சுக்கள் அடிபடுகின்ற போதும், இன்னமும் அது நடைமுறைச சாத்தியமாகவில்லை.

சீனா ஒத்துழைக்கத் தயார் என்கிறது. இந்தியாவும், ஜப்பானும் அதற்கு இணங்குவதாக கூறுகின்றன. ஆனாலும் இவை எல்லாவற்றையும் ஒற்றைப் புள்ளியில் கொண்டு வந்து இணைக்கின்ற முயற்சிகள் இதுவரையில் வெற்றி பெறவில்லை.

இன்னமும், கடன் வழங்குநர்களின் மாநாடு எங்கே எப்போது என்று தீர்மானிக்கப்படவில்லை. 

அதேவேளை புதிய நிதியுதவிகளை வழங்க தயாராக இருப்பதாக கூறும் ஆசிய அபிவிருத்தி வங்கி, கடன் மறுசிரமைப்பு அல்லது கடன்களை ரத்துச் செய்வதற்கு தயாராக இல்லை என்று கூறியிருக்கிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கி  479 பொதுத்துறை கடன்கள், மானியங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என,மொத்தம் 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியிருக்கிறது.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள், நிறுவனங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிதிக் கொள்கைகளுக்குள் இயங்குபவை. அவை ஒவ்வொன்றின் இலக்குகள், நோக்குகள், நிபந்தனைகள் வேறுபட்டவை.

அவற்றை ஒற்றைப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்துவது தான் முக்கியமான சவாலாக- குதிரைக் கொம்பான விடயமாக இருக்கிறது.

இவ்வாறான சூழலில், இந்த சிக்கலை தீர்த்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வது கனடிமானதாக உள்ளது.

அதனை செய்யாமல், டிசம்பருக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உயர் மட்டம், நிதியுதவி பற்றிய  தீர்மானம் எடுக்கும் வாய்ப்பு இருக்குமா என்று சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதேவேளை தன்னால் மட்டும் தான் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள் எனக் கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரை அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

எரிவாயு மற்றும் பெற்றோல் போன்றவற்றின் விலைகளை அரசாங்கம சற்று குறைத்திருக்கிறது. சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் அவை எதுவும், நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு தாக்கம் செலுத்தக் கூடியவையாக இல்லை.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, வரிகளை அரசாங்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதனால், செலவுகளும், பொருட்கள் சேவைகளுக்கான கட்டணங்களும், விலைகளும் உயர்ந்து கொண்டிருக்கின்றன.

செப்ரெம்பர் மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான, பணவீக்கம் 69.8 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. உணவுப் பணவீக்கம் 94.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையை உடனடியாக கட்டுப்படுத்த முடியாது என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி.நந்தலால் வீரசிங்க ஏற்கனவே கூறியிருந்தார்.

டிசம்பருக்குப் பின்னர் தான், அது குறையத் தொடங்கும் என்று அவர் கணித்துள்ளார். அதேவேளை, இந்த ஆண்டு இறுதியில் பணவீக்கம் 48.2 சதவீதமாக குறையும் எனக் கணித்துள்ள பொருளாதார நிபுணர்கள், அடுத்த ஆண்டு அது கட்டுக்குள் வர வாயப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு இறுதி வரையில் பணவீக்கம், 29.5 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டிருக்கிறது.

2024 முற்பகுதியில் தான், பணவீக்கம் 6 சதவீதத்துக்கு குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

இவையெல்லாம், இலங்கை எந்த புதிய நெருக்கடிகளையும், சவால்களையும் எதிர்கொள்ளவில்லை என்றால் தான் சாத்தியப்படும்.

அதாவது, உக்ரேன் போர் நெருக்கடிகள் தீவிரமடையாமல், இருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க வேண்டும். 

ஏற்றுமதிகளில் தடைகள் ஏற்படக் கூடாது. சர்வதேச தடைகள் அல்லது முட்டுக்கட்டைகள் ஏற்படக் கூடாது. கொரோனா போன்ற நோய்ப் பரவல்கள் இருக்க கூடாது.  

இவ்வாறாக பொருளாதாரத்தை சீரழிக்கும் ஏனைய எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை என்றால் தான், 2024 தொடக்கத்தில் பணவீக்கத்தை அரசாங்கத்தினால், 6 சதவீதத்துக்கு கொண்டு வர முடியும்.

அது ஒன்றும் இலகுவான விடயமாக இருக்காது. 

அரசியல் உறுதித்தன்மையும் அதற்கு முக்கியம். ரணில் விக்கிரமசிங்க ஒற்றை ஆளாக அந்த உறுதிப்பாட்டை மேற்கொள்ள முடியாது.

இவ்வாறான நிலையில் உச்சத்துக்கு சென்று விட்ட பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதும், நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தூக்கி நிறுத்துவதும், அவருக்கு இலகுவான காரியமாக இருக்காது.

https://www.virakesari.lk/article/137298

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.