Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களிடம்... 900 கிலோ மீற்றர் அளவில், கடல் பகுதி இருந்தும்... மற்றவனிடம் கைகட்டி வேலை செய்ய வேண்டி உள்ளமை ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 6 people, people sitting, people standing and outdoors
 
தமிழர்களிடம்... 900 கிலோ மீற்றர் அளவில், கடல் பகுதி இருந்தும்... 
மற்றவனிடம் கைகட்டி வேலை செய்ய வேண்டி உள்ளமை ஏன்?
 
இலங்கையினுடைய மொத்த கடல் பரப்பு 5 இலட்சத்து 17,000 சதுர கிலோமீற்றர்.
இதில் கடற்கரையின் நீளம் 1,925 கிலோமீற்றர்.
இவற்றுள் மூன்றில் இரண்டு பங்கு கடற்க்கரை வடக்கு கிழக்கிற்கு சொந்தமானதாக இருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளத்தில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை வரை பார்த்தால்
கிட்டத்தட்ட 900 கிலோமீற்றர் அளவில் எங்கள் கடற்கரை இருக்கின்றது.
 
அதே போல எங்களை சுற்றிவர அகலமான கண்டத்திட்டு கண்டமேடை இருக்கின்றது.
உலகப் பிரசித்தி பெற்ற மீன்பிடி மேடை (Petro bank) எங்கயுளுடைய கையில் தான் இருக்கின்றது.
தரையிலிருந்து 200 கிலோமீற்றர் தூரம் வரையிலான பிரத்தியேக பொருளாதார வலயம் இருக்கின்றது.
பருத்தித்துறையில் இருந்து கிழக்காலை 200 கிலோமீற்றர் முல்லைத்தீவு வரை நாங்கள் ஆழ்கடல் போகலாம்.
 
உண்மையில் எங்களுடைய வடக்கு கிழக்கு பொருளாதாரத்தில்
விவசாயத்திற்கு அடுத்ததாக அமைவது இந்த கடல் வளமே.
விதையாமலே பயன் தருகின்ற மிக பெரிய கடல் வளம் எம்மிடம் இருக்கின்றது
அதே போல கடல் அட்டை, நண்டு, இறால் போன்றவை கூட வளர்க்கலாம்.
 
இங்கு அதற்கு சரியான இடம் இருக்கின்றது. ஆனால் சரியான ஆளணி இல்லை,
முதலீடில்லை, பாதுகாப்பு இல்லை அவ்வாறாக நிறைய பிரச்சனை இருக்கின்றது.
அது பற்றிய ஆய்வும் இல்லை அக்கறையும் இல்லை.
 
ஆனால் கடல் சம்பந்தமான முழு அதிகாரமும் மத்திய ஒற்றையாட்சி அரசிடமும்
இருப்பதால் வளப்பயன்பாடு எங்களுடைய கரையில் இருக்கின்ற மக்களைவிட
தென்பகுதி சிங்களவர்களும், அந்நிய இந்திய வியாபாரிகளும், சீன வியாபாரிகளும்...
பங்கு போட்டு அனுபவித்து கொண்டு இருக்கின்றார்கள்
 
குறிப்பாக முதலீட்டு மற்றும் தொழில் நுட்ப உதவிகளை செய்ய வேண்டிய அரசாங்கம்
அக்கறை இல்லாமல்இயற்கையாகவே மேய்ச்சலுக்காகவும், இருப்புக்காகவும்,
விருத்திக்காகவும் மீன்கள் வந்து நடமாடும் பகுதிகளை... கடலட்டை பண்ணை என்கிற பெயரில்
தென்பகுதி வியாபாரிகள், சீனா வியாபாரிகள் மற்றும் இந்திய வியாபாரிகள் என
பல வியாபாரிகளுக்கு விற்று கொண்டு இருக்கின்றது
 
புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்தொழில் அமைச்சினால் சிங்கள நபரொருவருக்கு
முப்பது ஏக்கரில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது .
சீனா வடபகுதி கடற்பரப்புக்களில் குறிப்பாக தீவகப்பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில்
கடல் அட்டை பண்ணை அமைக்கப் போவதாக சொல்லப்படுகின்றது
 
சீனர்களுக்கு போட்டியாக இந்திய வியாபாரிகளும் கடலட்டை பண்ணை என படையெடுத்து வருகின்றார்கள்
யாழ்ப்பாணத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ சங்கங்கள்இயங்குகின்ற நிலையில்
எந்த சங்கத்திலும் அங்கத்தவராக இல்லாதவர்களுக்கு கூட
கடல் அட்டைப் பண்ணை அமைக்க அனுமதி வழங்குகின்றார்கள்
 
இதில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது
குறிப்பாக நிறைய அரசியல் ஓடுகின்றது
 
உண்மையில் பிரதேச மீனவர்களில் பலர் கடலட்டை பண்ணை  முதலாளிகளுக்கு
கூலிக்கு அட்டை பிடிச்சு கொடுக்கிற சூழ்நிலையை தான் உருவாகின்றார்கள்
 
படம் : கடலட்டை பண்ணைக்காக வந்து இருக்கும் இந்திய வியாபாரிகளோடு டக்ளஸ் தேவானந்தா கும்பல்
1: டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் தயானந்தா (வடமாகாண டயலொக் முகவர்)
2: டக்ளஸ் தேவானந்தா
3. கமலேந்திரன் : ஈ பி டி பியை சேர்ந்த இவர் அதே கட்சியை சேர்ந்த முன்னாள்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் திரு டேனியல் றெக்சிகன் அவர்க்ளின் மனைவியை
திருமணம் செய்யும் நோக்கில் திரு டேனியல் றெக்சிகன் அவர்களை
2013 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்து இருந்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.