Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வசந்த முதலிகே விடுதலை - பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் - சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த முதலிகே விடுதலை - பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் - சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டுகோள்

By RAJEEBAN

16 NOV, 2022 | 12:33 PM
image

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது மற்றும் வசந்த முதலிகே கல்வேல ஸ்ரீதம்ம தேரர் விடுதலை ஆகிய விடயங்களில் இலங்கையில் உள்ள   இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இது தொடர்பான கடிதங்களை தூதரகங்களிடம் கையளித்துள்ளனர்.

அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஒடுக்குமுறைகளை பயன்படுத்துவதை கைவிடவேண்டும் என தூதரகங்கள் வேண்டுகோள் விடுக்கவேண்டும் எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

RjmF3q2I.png

வசந்த முதலிகேயும் ஸ்ரீதம்மதேரரும் மனிதாபிமானமற்ற நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தமது கடிதத்தில் தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அவர்கள் சுகாதாரமற்ற இடத்தில் பாதுகாப்பற்ற இடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் இதனால் அவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

மாணவதலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர் செயற்பாட்டாளர்களிற்கு எதிரான இந்த இலக்குவைக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுக்குமாறு நாங்கள் சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்கின்றோம்,90 நாட்கள் தடுத்துவைக்கப்படுவதற்கான  உத்தரவை மேலும் நீடிக்ககூடாது எனவும் குரல்கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொறுப்புணர்வு மிக்க பொறுப்புக்கூறும் அரசாங்கத்திற்கான நியாயபூர்வமான வேண்டுகோள்களிற்கு இலங்கை அதிகாரிகள் வன்முறைகள் சட்டரீதியான பழிவாங்கல்கள் மூலம் பதிலளித்துள்ளனர் என தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பது மற்றும் தண்டிப்பதற்காக பலத்தை பயன்படுத்துவது சட்டரீதியான துன்புறுத்தல்கள், போன்றவை குறித்து கரிசனை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

FhqeUrOWIAACMwq.jpg

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்துவது  என சர்வதே சமூகத்திற்கு வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக மிகவும் பயங்கரமான பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள் அச்சமடைந்துள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/140196

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.