Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடன் வழங்கிய நாடுகள் பல கரிசனைகளை வெளியிட்டதால் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஒத்திவைப்பு- ரொய்ட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வழங்கிய நாடுகள் பல கரிசனைகளை வெளியிட்டதால் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஒத்திவைப்பு- ரொய்ட்டர்

By RAJEEBAN

18 NOV, 2022 | 11:50 AM
image

வியாழக்கிழமை இடம்பெறவிருந்த கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இலங்கை ஒத்திவைத்துள்ளது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இலங்கைக்கு கடன்வழங்கியவர்கள் முன்வைத்துள்ள கேள்விகள் சந்தேகங்களிற்கு மத்திய வங்கியும் திறைசேரி அதிகாரிகளும் பதிலளிப்பதற்கான கால அவகாசத்தை வழங்குவதற்காக  இலங்கை வியாழக்கிழமை இடம்பெறவிருந்த கடன் பேச்சுவார்த்தைகளை ஒத்திவைத்துள்ளது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

 

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 மில்லியன்டொலர் நிதி உதவியை பெறுவதற்கான  இணக்கப்பாட்டினை எட்டிய பின்னர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை செப்டம்பரில் ஆரம்பித்தது.

இலங்கை தசாப்தகாலத்தில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதை நோக்கிய நடவடிக்கையாக இது காணப்பட்டது.

எனினும் இலங்கை தனக்கு பெருமளவு கடன்களை வழங்கிய இந்தியா சீனா போன்ற நாடுகளிடமிருந்து நிதி உத்தரவாதங்களை பெறவேண்டிய நிலையில் உள்ளது.

இதன் பின்னரே சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைக்கும்.

இலங்கைக்கு கடன்வழங்கிய பலர் பல்வேறு கரிசனைகளை வெளியிட்டுள்ளனர் அதற்கான தெளிவுபடுத்தல்களை கோரியுள்ளனர் ஆகவே இதற்கான தெளிவுபடுத்தல்கள் முதலில் இடம்பெறும் அதன் பின்னர் புதிய சுற்றுப்பேச்சுவார்த்தைகளிற்கான  திகதி நிர்ணயிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

imf_main.jpg

அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளிற்கான திகதியை இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன்வழங்கியவர்களின் கரிசனைகள் என்ன அவர்களிற்கும் திறைசேரி அதிகாரிகளிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது ஆராயப்பட்ட விடயங்கள் என்ன என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை.

நான்கு வருட திட்டத்திற்கான சர்வதேச நாணயநிதியத்தின் அனுமதியை டிசம்பரில் பெறுவதற்கான காலக்கெடுவுடன் இலங்கை செயற்படுகின்றது.

நாங்கள் நிதி உத்தரவாதங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றோம்,எங்களிற்கு கடன்வழங்கிய எவரும் தாங்கள் எங்களிற்கு ஆதரவளிக்கமாட்டோம் என தெரிவிக்கவில்லை என தெரிவிக்கவில்லை எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு இலக்கொன்று உள்ளது நாங்கள் டிசம்பரிற்குள் அந்த இலக்கை அடைய முயல்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/140436

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.