Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுதந்திரக் கட்சியின் மக்கள் அணிக்கு சந்திரிகா முழுமையான ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 31-08-2007 16:18 மணி தமிழீழம் [மயூரன்]

சுதந்திரக் கட்சியின் மக்கள் அணிக்கு சந்திரிகா முழுமையான ஆதரவு

சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் அணியின் நிறுவனர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சந்திப்பு சந்திரிகா குமாரதுங்கவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்திப்பில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தனது முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும் என சந்திரிகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசியக் கூட்டமைப்புக்கு நடவடிக்கைகளுக்கு தனது முழுமையான ஆதரவைத் தருவதாகவும் சந்திரிகா குமாதுங்க மங்கள சமரவீர, சிறீபதி சூரியாச்சி, டிரான் அலஸ் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

நன்றி - பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சு.க.மக்கள் பிரிவினர் சந்திரிகாவுடன் சந்திப்பு

[01 - September - 2007]

* `விளைவுகள் விரைவில் தெரிய வரும்; மங்கள, ஷ்ரீபதி தெரிவிப்பு

டிட்டோகுகன்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் நேற்று வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பொன்றை நடத்தியிருக்கும் மங்கள சமரவீர தலைமையிலான ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவினர் இச்சந்திப்பின் விளைவுகள் என்னவென்பது எதிர்வரும் நாட்களில் தெரியவருமென கூறியுள்ளனர்.

கொழும்பு-07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இச்சந்திப்பானது முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணி வரை நீடித்தது.

இதில் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு சார்பாக பிரதான ஏற்பாட்டாளரான மங்கள சமரவீர, பிரதான அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் ஷ்ரீபதி சூரியாராச்சி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் உபுலாங்கனி மாலகடுவ, டிரான் அலஸ், கட்சியின் நிர்வாக செயலாளர் கலாநிதி சிசிர பண்டார சேனாரட்ண ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கடந்த புதன்கிழமையன்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்கவுடன் அவசர சந்திப்பொன்றை நடத்தியதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்றுள்ள சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவினரின் இந்த சந்திப்பானது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவினரும் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தி "தேசிய சபை" யாக, ஆட்சி மாற்றமொன்றைக் கொண்டு வரும் நோக்கில் தொடர்ச்சியான பொதுக்கூட்டங்களையும் வேறு பல இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் எடுத்துவரும் நிலையில் அவ்விரு கட்சியினரும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் இன்னும் ஆதரவொன்றை தக்கவைத்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை அடுத்தடுத்து சந்தித்துப் பேசியிருப்பது புதிய ஊகங்களுக்கு வழி வகுத்திருப்பதுடன், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த எதிர்பார்ப்புகளை வலுப்படுத்தும் வகையில் நேற்றைய சந்திப்பின் விளைவுகள் என்னவென்பது எதிர்வரும் நாட்களில் தெரியவருமென சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம், சந்திப்பில் பேசப்பட்ட சகல விடயங்களையும் ஊடகங்களுக்குத் தெரிவிக்க முடியாதெனவும் அவர்கள் மறுத்துவிட்டனர்.

முன்னாள் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து மங்கள சமரவீர தெரிவிக்கையில்;

"சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவினர் என்ற ரீதியில் சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்து பேசினோம். இதன்போது தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக அவருக்கு விளக்கமளித்தோம். அத்துடன், ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் அதன் சமூக கோட்பாடுகளுக்கமையவும் கொள்கைகளுக்கு அமையவும் கொண்டு வருவது பற்றிப் பேசினோம்" என்றார்.

சந்திப்பின் இறுதியில் கருத்து தெரிவித்த ஷ்ரீபதி சூரியாராச்சி, "சந்திப்புப் பற்றி அனைத்து விடயங்களையும் ஊடகங்களுக்குத் தெரிவிப்பது கஷ்டம். இதன்போது, நாட்டின் நடைமுறை அரசியல் நிலைவரங்கள் பற்றியும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் முன்னாள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தோம்" என்றார்.

இதேநேரம், சந்திப்பின்போது சந்திரிகா குமாரதுங்கவின் பதில் என்னவாகவிருந்ததென ஷ்ரீபதி சூரியாராச்சியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதன் விளைவுகள் எதிர்வரும் நாட்களில் தெரியவருமென கூறிவிட்டுக் காரில் ஏறி சென்றுவிட்டார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத்திற்கு எதிராக சு.க. தலைமை செயற்படுகிறது என்னை தலைமையிலிருந்து நீக்கியமை சட்டவிரோதம் கட்சியை மீளக்கட்டமைக்க வேண்டும் என்கிறார் சந்திரிகா

வீரகேசரி நாளேடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுகின்றது. மக்களின் உரிமைகளை தூக்கியெறிந்து விட்டு, ஊடகங்களின் உரிமைகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளஇன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.