Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரேனிய போரின் உள்முகம் : அமெரிக்கா நடாத்தும் நிழல் யுத்தம் ! ஜனாதிபதி ஜோ பைடன் மகனின் ஊழல் மூடி மறைப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

உக்ரேனிய போரின் உள்முகம் : அமெரிக்கா நடாத்தும் நிழல் யுத்தம் ! ஜனாதிபதி ஜோ பைடன் மகனின் ஊழல் மூடி மறைப்பு !

 

 

 
     – ஐங்கரன் விக்கினேஸ்வரா
——————————————————
    IMG_9206.jpg
 
(அமெரிக்கா தனது வரலாற்று எதிரியான ரஷ்யாவை எதிர்க்கவே உக்ரேனுக்கு  ஆயுத உதவிகள் என்று இலகுவாக எல்லேராலும் கூறி விட முடியும்ஆனாலும் அதற்கு மேலாக மற்றொரு முக்கிய காரணியும் உண்டு.
அதுவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மகனின் உக்ரேனிய நிறுவனங்களூடான வணிக உடன்பாடும்ஊழல் மூடி மறைப்பும் ஆகும்.இந்த உக்ரேனிய  வணிக உடன்பாடும் ஊழலும் பற்றியே இந்த ஆக்கம் அலசுகின்றது.)
 

அமெரிக்க-உக்ரேனிய உறவுகள் தற்போது அதி்தீவிரமாக வலுப் பெற்று வருவதை காணலாம். பல நூறு பில்லியன் இராணுவ உதவிகளை அமெரிக்கா அள்ளிக் கொட்டுவதும், உக்ரேனை இப் போரில் நேரடியாக ஊக்குவிப்பதுலும் ஜோ பைடன் அரசு மும்முரமாக உள்ளது.

 
பல நூறு பில்லியன் இராணுவ உதவி:
 
அப்படியான கரிசனை எதற்கு அமெரிக்காவிற்கு என்றால், வரலாற்று எதிரியான ரஷ்யாவை எதிர்க்கவே ஆயுத உதவிகள் என்று இலகுவாக எல்லேராலும் கூறி விட முடியும். ஆனாலும் அதற்கு மேலாக மற்றொரு முக்கிய காரணியும் உண்டு.
 
அதுவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மகனின் உக்ரேனிய நிறுவனங்களூடான வணிக உடன்பாடும், ஊழல் மூடி மறைப்பும் ஆகும்.
 
இந்த உக்ரேனிய வணிக உடன்பாடும் ஊழலும் பற்றியே இந்த ஆக்கம் அலசுகின்றது.
 
அமெரிக்க ஜனாதிபதி் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனின் உக்ரேனிய நிறுவனத்துடனான ஊழலை விசாரித்து வந்த அதன் உயர்மட்ட வழக்கறிஞரை பதவி நீக்கம் செய்யுமாறு 2016இல் அன்றைய உக்ரைன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதன்பின் 2016 ஆம் ஆண்டில், ஜோ பிடன் மகன் ஹண்டர்்பைடனின் உக்ரேனிய வழக்கறிஞர் விக்டர் ஷோகினை பணிநீக்கம் செய்ய அழைப்பு விடுத்தார்.
 
உக்ரேனிய வணிக உடன்பாடும் ஊழலும் :
 
ஹண்டர்்பைடனின் உக்ரேனிய புரிஸ்மா மற்றும் பிற நிறுவனங்கள் விசாரணையில் தற்போதும் உள்ளன.
இருப்பினும், மற்ற மேற்கத்திய தலைவர்கள் மற்றும் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் முக்கிய அமைப்புகளும், ஊழலைச் சமாளிப்பதில் அவர் போதுமான அளவு செயல்படவில்லை என்று நம்பியதால், வழக்குரைஞரை பணிநீக்கம் செய்ய விரும்பினர்.
 
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் இரண்டாவது மகன் ஹண்டர் பிடன், உக்ரேனில் அவர் மேற்கொண்ட சில வணிகப் பரிவர்த்தனைகள் உட்பட, அமெரிக்க ஊடக அறிக்கைகளின்படி, அவரது நிதி தொடர்பாக நீதித்துறையால் 2020இல் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது.
 
உக்ரேனிய வணிக உடன்பாடு :
 
பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனின் ஆட்சிக் காலத்தில் இந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன. 2020 தேர்தல் பிரச்சாரத்தின் போது, சீனா மற்றும் உக்ரைன் தொடர்பில்
அவரும் அவரது தந்தையும் குற்றம் சாட்டப்பட்டனர். அதை அவர்கள் இருவரும் மறுத்தனர். டொனால்ட் டிரம்ப் இவர்கள் தவறு செய்ததாக பாரிய அளவில் பிரச்சாரம் செய்தனர்.
 
உக்ரேனிய எரிசக்தி நிறுவனமான புரிஸ்மாவின் ஆலோசகர்,
ஜோ பிடனைச் சந்திக்க அழைத்ததற்கு நன்றி தெரிவித்ததாகக் கூறப்படும் மின்னஞ்சலில்
குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டதற்கு, ஜோ பிடன் ஒரு நிருபரிடம் இது ஒரு “ஸ்மியர் பிரச்சாரம்” (Smear Campaign) என்று கூறி தப்பிக் கொண்டார்.
 
டிரம்பின் வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்கள் :
 
ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு பிபிசிக்கு அளித்த பேட்டியில், ஹண்டர் பிடன் புரிஸ்மா நிறுவன பதவியை பாதுகாத்துக் கொண்டார். அமெரிக்க அரசியலில் தலைநகர் வாஷிங்டனில் வணிக செல்வாக்கு செலுத்துதல் பற்றிய கூற்றுகள் பொதுவானவை என்றும் திரு டிரம்பின் குழந்தைகள் வெளிநாடுகளில் இலாபகரமான வணிக ஒப்பந்தங்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களும் அத்தவறை மறுத்தார்கள்.
 
ஹண்டர் பிடனின் கடந்தகால உக்ரேனிய வணிக பரிவர்த்தனைகள் மற்றும் பிற பரிவர்த்தனைகளை ஆராய்வது உட்பட அவரது நிதிகளை நீதித்துறை விசாரித்தது. “இந்த விஷயத்தை நன்கு அறிந்த நபர்” டிசம்பரில் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் வெளிப்படையாக தெரிவித்தார்
 
உக்ரைன் ஊழல் விசாரணை
 
ஊழல் விசாரணை 2018 இல் தொடங்கப்பட்டது, ஆனால் 2020 டிசம்பரில் தான் முதல் முறையாக அதைப் பற்றி அறிந்ததாக ஹண்டர் பிடன் கூறினார். இதனை அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான CBS இன் விசாரணையைப் பற்றி கேட்டதற்கு, ஜனாதிபதியின் மகன் கூறினார்: “நான் முழுமையாக ஒத்துழைக்கிறேன். விசாரணையின் முடிவில் நான் விடுவிக்கப்படுவேன் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன், 100% உறுதியாக இருக்கிறேன் எனக் கூறினார்.
 
ஆயினும் ஜோ பிடனின் ஆட்சிக் காலத்தில் இந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன என்பதே உண்மை.
ஏப்ரல் 2015 இல் இருந்து ஒரு மின்னஞ்சல் உக்ரேனிய புரிஸ்மாவின் ஆலோசகர் வாடிம் போஜார்ஸ்கி, வாஷிங்டனில் ஜே பெடனை
சந்திக்க அழைத்ததில் இருந்து இந்த சர்ச்சை கிளம்பியது.
 
ஹண்டர் பிடனின் உக்ரேனிய தொடர்பு :
IMG_9204.jpg
ஹண்டர் பைடன் உக்ரேனிய புரிஸ்மாவின் குழுவில் இயக்குநராக இருந்துள்ளார். புரிஸ்மா உக்ரைனுக்குச் சொந்தமான ஒரு தனியார் எரிசக்தி நிறுவனம்.
அதன் குழுவில் இருந்த பல வெளிநாட்டவர்களில் ஹண்டர் ஒருவராக இருந்தார்.
 
உக்ரேனிய தொடர்பையும், வணிக ஊழலையும் ஜோ பிடனின் அரசு, நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட ஆய்வை “ரஷ்ய பிரச்சார தவறான தகவல்” என்று கண்டித்துள்ளது, இருப்பினும் மின்னஞ்சல்கள் போலியானவை என்று அவர்கள் கூறவில்லை.
 
அப்போது நியூயார்க் போஸ்ட் கட்டுரையை அதிபர் டிரம்ப் மற்றும் அவரது கட்சி பகிர்ந்து கொண்டனர். அவரது முன்னாள் ஆலோசகர்களில் இருவர், ஸ்டீவ் பானன் மற்றும் ரூடி கியுலியானி, பகிரங்கமாக செய்தித்தாள்களுக்கு இக்கதை மற்றும் மின்னஞ்சல்கள் அடங்கிய ஹார்ட் டிரைவை வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.
 
பின்னர் 2019 டிசம்பரில் திரு கியுலியானி உக்ரேனிய தலைநகர் கிய்வ் நகருக்குச் சென்று,
அங்கு அவர் உக்ரேனிய சட்டமியற்றுபவர் ஆண்ட்ரி டெர்காச்சை சந்தித்தார்.
 
திரு கியுலியானி உக்ரைனில் உள்ள ஜே பிடென்ஸ் மீது உள்ள ஊழல் தொடர்பை தோண்டி எடுக்க முயற்சித்ததை ஒப்புக்கொண்டார்.
 
ஆனால் அன்றைய அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் தகவலின் படி உக்ரேனிய மின்னஞ்சல்களை மூடி மறைத்த விடயத்தை ஒப்புக் கொண்டார்.
அமெரிக்க ஊடகங்கள் மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மையை வெளியிட்டாலும், பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனின் ஆட்சிக் காலத்தில் இந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன என்பதே உண்மை.
 
உக்ரைனில் பிடென்கள் மீதான குற்றசசாட்டு ?
 
டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது அரசு ஜோ பிடன் தவறு செய்ததாக குற்றம் சாட்டினர். ஒபாமா அரசில் துணை ஜனாதிபதியாக இருந்தபோது, ஜே பைடனின் மகன் ஹண்டர், உக்ரேனிய ஊழலை விசாரித்து வந்த அதன் உயர்மட்ட வழக்கறிஞரை பதவி நீக்கம் செய்யுமாறு உக்ரைன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார்.
 2016 ஆம் ஆண்டில், ஜோ பிடன் உக்ரேனிய வழக்கறிஞர் விக்டர் ஷோகினை பணிநீக்கம் செய்ய அழைப்பு விடுத்தார்.
 
அவருடைய உக்ரேனிய புரிஸ்மா மற்றும் பிற நிறுவனங்கள் விசாரணையில் தற்போதும் உள்ளன.
இருப்பினும், மற்ற மேற்கத்திய தலைவர்கள் மற்றும் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் முக்கிய அமைப்புகளும், ஊழலைச் சமாளிப்பதில் அவர் போதுமான அளவு செயல்படவில்லை என்று நம்பியதால், வழக்குரைஞரை பணிநீக்கம் செய்ய விரும்பினர்.
 
ஊழல் குற்றச் செயல்கள் எதுவும் உடனடியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், சாத்தியமான முரண்பாடுகள் பற்றிய கேள்விகளை எழுப்பியது. அமெரிக்க மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் 2015 ஆம் ஆண்டிலேயே இத்தகைய கேள்விகளை எழுப்பினார்.
 
 டிரம்ப் – ஜெலென்ஸ்கியின் சந்திப்பு:
 
இதே போல புதிய அதிபராக, ரஷ்யாவிற்கு எதிரான தனது நிலைப்பாட்டை வலுப்படுத்த, அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க 2019இல் ஜெலென்ஸ்கி முயன்றபோது, குடியரசுக் கட்சியின் தலைவரான ட்ரம்ப்பால் ஜெலென்ஸ்கியிடம் பல விடயங்கள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
ஜோ பிடனின் மகனும், உக்ரேனிய இயற்கை எரிவாயு நிறுவனத்தின் குழு உறுப்பினருமான ஹண்டரின் நிறுவனத்தை விசாரிப்பதும் அடங்கும். பிடனை விசாரிக்கும் வரை உக்ரைன் ஒப்புக் கொள்ளும் வரை 391 மில்லியன் டாலர் இராணுவ உதவியை நிறுத்தி வைத்ததாகவும் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது.
 
டிரம்ப் தனது வழக்கறிஞர் ரூடி கியுலியானியுடன் சேர்ந்து ஜெலென்ஸ்கிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார்.
ஜூலை 2019 இல் இரு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் சந்தித்தனர்.
 
டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் “எங்கள் நாடு நிறைய கடந்துவிட்டாலும், உக்ரைனுக்கு அதைப் பற்றி நிறைய தெரியும் என்றாலும், நீங்கள் எங்களுக்கு ஒரு உதவி செய்ய விரும்புகிறேன். உக்ரைனுடனான ஜோ பைடனின் வணிக , ஊழல் விடயங்களில் என்ன நடந்தது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
 
இப்படி உக்ரேனிய ஊழல் விடயம் கிடப்பில் இருக்க உலகின் கண்களை மூடி அமெரிக்கா பல நூறு பில்லியன் இராணுவ உதவிகளை அமெரிக்கா அள்ளிக் கொட்டுவதும், உக்ரேனை இப் போரில் நேரடியாக ஊக்குவிப்பதுலும் ஜோ பைடன் அரசு மும்முரமாக உள்ளது என்பதே உண்மையாகும்.
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அமெரிக்கா, அமெரிக்காவின் கைப்பாவை உக்ரைனை இங்கு பலர் கை தாங்குவது நகைப்பிற்கு உள்ளாகுகின்றது, அமெரிக்கா ஒரு நரி ரணிலை போல, உக்கிரைனின் இழப்புகள் அவர்களின் தலைமைகளினால் ஏற்பட்டது, எந்த மனித இழப்புகள் வருத்திற்கு உரியதே, இதனை உக்கிரைன் தவிர்த்திருக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.