Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடனில் உள்ள இலங்கைக்கு உதவ இந்தியா உறுதியளித்துள்ளது – ஐ.எம்.எப்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடனில் உள்ள இலங்கைக்கு உதவ இந்தியா உறுதியளித்துள்ளது – ஐ.எம்.எப்.

இலங்கைக்கு உதவத் தயார் – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடனாக 2.9 பில்லியன் டொலரைக் கோருகின்ற நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வலுவாக ஆதரிப்பதாக இந்தியா, சர்வதேச நாணய நிதியத்திடம் கூறியதாக கடந்த வாரம் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் மற்ற இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இதேபோன்ற உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, இலங்கை பாரிஸ் கிளப் உறுப்பினர்களான இந்தியா, ஜப்பான், சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது.

ஏற்கனவே ஜப்பானுடன் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ள அதேவேளை, பாரிஸ் கிளப் உறுப்பினர்களுடன் இந்த வாரம் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என நிதி அமைச்சு உறுதிப்படுத்தியது.

அவர்களிடம் இருந்து போதுமான உத்தரவாதங்கள் பெறப்பட்டு, மீதமுள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன், கடனுதவி திட்டத்தை பரிசீலிக்கும்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு தசாப்தங்களில் ஏற்பட்ட மோசமான நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அவசியமான சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி உடன்படிக்கையை எட்டுவதற்கு, சீனா மற்றும் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு தேவைப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
 

https://athavannews.com/2023/1321508

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு இந்தியா ஆதரவு - உறுதி செய்தது சர்வதேச நாணயநிதியம்

By RAJEEBAN

24 JAN, 2023 | 10:06 AM
image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்ககைகளிற்கு இந்தியா தன்னை அர்ப்பணித்துள்ளதை சர்வதேச நாணயநிதியம் உறுதி செய்துள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சாத்தியமான உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுவதற்கு இந்தியா  இணங்கியுள்ளது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளிடமிருந்து இதேபோன்ற உத்தரவாதத்தை பெறுவதற்கான இது போன்ற பேச்சுக்களில் இலங்கை ஈடுபட்டுள்ளது என சர்வதேச நாணயநிதியத்தின் பேச்சாளர் ஒருவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

போதியளவு உத்தரவாதங்கள் கிடைத்ததும்,இலங்கை அதிகாரிகள் உட்பட அனைவரும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்ததும், இலங்கைக்கான நிதி ஆதரவு திட்டத்தை சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையிடம் சமர்ப்பிக்க முடியும்,அது இலங்கைக்கு மிகவும் அவசியமாக உள்ள நிதியை கொண்டுவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/146544

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமாதத்திற்குள் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய திட்டம் - மத்திய வங்கி ஆளுநர்

By RAJEEBAN

24 JAN, 2023 | 12:19 PM
image

இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆறுமாதத்திற்குள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கதெரிவித்துள்ளார்.

இலங்கை தனது அனைத்து கடன் மீள்கொடுப்பனவையும் நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் உள்ளது அடுத்த ஆறுமாதங்களிற்குள் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தமாதம் சிறந்த முன்னேற்றங்கள் காணப்படுகின்றன இந்தியா ஏற்கனவே நிதி உத்தரவாதத்தை வழங்கியுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சீனா ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து விரைவில் உத்தரவாதம் கிடைக்கும் என அவர் எக்கனமிக் அவுட்லக் 2023 என்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைத்தால் நாங்கள் பின்னர் வர்த்தக மற்றும் இரு தரப்பு கடன்வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை ஆறுமாதங்களிற்குள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்,என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் கடன் மறுசீரமைப்பிற்கான காலஅட்டவணையே முக்கிய  பிரச்சினையாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடன்பேண்தகுதன்மை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இலங்கை பேண்தகு வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும் எனவும்மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் கழக நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/146561

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.