Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பட்டறிவுப் பாடத்தை இன்னும் புரியத் தவறியுள்ள தலைவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பட்டறிவுப் பாடத்தை இன்னும்

புரியத் தவறியுள்ள தலைவர்கள்

04.08.2007

ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 56 ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் தற்போதைய வாரிசுகளை சாடைமாடையாகச் சாடினாலும், பண்டாரநாயக்கா புகழ் பாடத் தவறவில்லை.

தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்து, பௌத்த சிங்களப் பேரினவாதத்தை இலங்கைத் தீவில் ஸ்திரமாக நிலைநிறுத்தி, இந்த நாட்டில் இன்று இவ்வளவு மோசமாக இரத்த ஆறு ஓடுவதற்கு வித்திட்ட அமரர் பண்டாரநாயக்காவை, அதே கொள்கையை இப்போதும் முழு அளவில் கைக்கொள்ளும் இந்த அரசுத் தலைமையும் புகழ்ந்து ஏத்துவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இந்தச் சமயத்தில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் யாழ். குடாநாடு அளவுடைய ஒரு குட்டித் தீவை, பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்க்கை நிலையிலும் மிகச் செழிப்புற்ற பிரதேசமாக உயர்த்திய ஒரு தலைவரின் கருத்தை நினைவு கூர்ந்து, அந்தப் பின்னணியில் பண்டாரநாயக்காவின் அரசியல் கலாசாரத்தை நோக்குவது மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

பிரிட்டிஷ் காலனித்துவப் பிடியிலிருந்து 1959 இல் விடுபட்ட சிங்கப்பூரை, 1990 இல் தாமாகப் பதவியிலிருந்து விலகும்வரை சுமார் 31 ஆண்டு காலம் பிரதமராக இருந்து, ஆட்சி செய்து அந்நாட்டை வளப்படுத்திய பொருளாதார ரீதியில் வலுப்படுத்திய பல்வேறு இன, மத, பேச்சுமொழி கொண்ட சமுதாயத்தை ஐக்கியத்துடனும் இன சௌஜன்யத்துடனும் கட்டி எழுப்பிய ஒரே தலைவரான லீ குவான் யூ, இப்போது குறிப்பிடும் கருத்தே இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகின்றது.

ஒரு தனிநாடாக நிமிர்ந்து நிற்பதற்கு எந்த அடிப்படைக் கட்டுமானமும் இல்லாத நிலையில் திடீரென பிரிட்டனிடமிருந்து தனிநாடாக விடுதலை பெற்ற சிங்கப்பூரை சரியான திசையில் வழி நடத்துவதில் ஆரம்பம் தொட்டே மிகத் தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டார் லீ குவான் யூ.

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை அதே தீர்க்க தரிசனத்தை 1920 30 களில் தம்வசம் கொண்டிருந்த அமரர் எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா, பின்பு ஐம்பதுகளின் நடுப்பகுதிக்குப் பின்னர் தாம் ஆட்சிப் பீடத்துக்கு வந்த சமயம், பௌத்த சிங்களப் பேரினவாத மேலாதிக்கச் சிந்தனையில் ஊறி, நாட்டையே கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் இழி செயலுக்கு வழி செய்து பழி சுமப்பவரானார்.

1925 26 இல் இலங்கைத் தீவுக்கு சமஷ்டி முறை அதிகாரப் பகிர்வே பொருத்தமானது என்று உண்மையை வலியுறுத்திய பண்டாரநாயக்கா, பின்னர் சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து தனிச் சிங்களச் சட்டத்தை 24 மணி நேரத்துக்குள் நடைமுறைப்படுத்த உறுதி பூண்டமை இந்தப் போக்கில்தான் என்று வரலாறு நமக்கு செய்தி பகர்கின்றது.

இலங்கை பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் பெரும்பான்மை பௌத்த சிங்கள ஆட்சியாளர்களின் கருத்துருவாக்கத்தில் முன்னெடுக்கப்பட்டதான சிறுபான்மையினரை ஒடுக்குகின்ற அரச அடக்கு முறையை, சிங்கப்பூர் பின்பற்றாமல் தவிர்த்துக் கொண்டதன் மூலம் தாராளமாக நடந்துகொண்டதன் வாயிலாக தப்பிப் பிழைத்து, அமைதிப் பூங்காவாக அது மலர்ந்திருக்கின்றது.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற சமயம் அங்கு வாழும் பெரும்பான்மை மக்கள் சீன, மலே மொழி பேசுபவர்களாக இருந்தனர். சிறுபான்மையினராக தமிழர்களும் வாழ்ந்தனர்.

""பெரும்பான்மையினராக சீன மொழி பேசுவோரே இருந்தனர். ஆனால் கல்விக்கான மொழியாக அதைத் தெரிவுசெய்யாமல் ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக நாம் பேணியதால் மேலெழுந்தோம். தப்பித்தவறி பெரும்பான்மையினர் பேசுகின்ற சீன மொழியை அரச மொழியாக நாம் தேர்ந்திருந்தோமானால் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நமது நாடும் நாமும் அழிந்திருப்போம்.

""நாங்கள் இப்போது இலங்கையைப் பார்க்கின்றோம். அவர்கள் (சுதந்திரம் பெற்றதும்) ஆங்கிலத்திலிருந்து சிங்களத்துக்கு மாறினார்கள். தமிழர்களின் வாக்குரிமையை இல்லாது செய்தனர். அதன் பின்னர் எப்போதுமே அங்கு யுத்தம்தான்.

""ஆங்கிலம் எமது தேசிய மொழியாக இல்லாதபோதும் நாம் அதனை எமது வேலைக்கான மொழி ஆக்கிக் கொண்டோம்.''

என்று அண்மையில் தாம் வழங்கிய பேட்டி ஒன்றில் விளக்கியிருக்கிறார் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் லீ குவான் யூ.

இலங்கையைப் பொறுத்தவரை பௌத்த மத மறுமலர்ச்சி என்ற சுலோகத்தின் கீழ் சிங்களப் பேரினவாதம் எழுச்சி பெற்றது. இலங்கைத் தீவு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட போது இந்தப் பேரினவாத இருள் இலங்கைத் தீவை முற்றாகப் பற்றிப் பிடித்து ஆக்கிரமித்தது.

அதுவரை, ஒருபுறம் சிறுபான்மைத் தமிழரையும் மறுபுறம் ஐரோப்பிய குடியேற்ற வாதிகளையும் கடுமையாகச் சாடி, சிங்கள ஆரிய இனப் பெருமையைப் புகழ்ந்துரைந்து நின்ற பௌத்த தேசியத் தலைமை, இலங்கைத் தீவு சுதந்திரமடைந்து அதன் ஆட்சி அதிகாரம் பெரும்பான்மையினரான சிங்களவர்களிடம் கைமாறியதை அடுத்து முழு அளவில் எழுச்சி கொண்டது. அதுவரை, கருத்து நிலையில் இருந்து வந்த சிறுபான்மையினரான தமிழருக்கு எதிரான காழ்ப்புணர்வு நாட்டின் சுதந்திரத்தை அடுத்து திண்ணிய, சமூக, அரசியல், பொருளாதார, இன ஒடுக்குமுறையாகக் கோர வடிவம் எடுத்ததைக் கண்டோம்.

அந்தத் தடத்தில் செல்லாமல் நியாயத்துடனும், தாராளத்துடனும், ஏனைய இன, மொழி, மத மக்களை சகோதரர்களாக சமத்துவத்துடன் மதித்து நடக்கும் பண்போடும் செயற்பட்டதால் சிங்கப்பூர் உயர்ந்து நிற்கின்றது.

அதை, இவ்வளவு பட்டறிவுக்குப் பின்னரும் புரிந்து கொள்ளாமல், பெரும் தவறிழைத்த தலைவர்களைத் தொடர்ந்து தலைமேல் இருத்திப் புகழ்ந்து கொண்டும், அவர்கள் விதித்த விதைத்த பேரினவாதச் சிந்தனையில் மேலும் மூழ்கிக் கொண்டும் கொழும்புத் தலைவர்கள் "அரற்றிக்' கொண்டிருப்பது பழைய "அலட்டல்' பல்லவியையே தொடர்வது இந்த நாட்டை மென்மேலும் யுத்தக் களரிக்குள்தான் ஆழ்த்தும். இவ்வளவு காலம் கடந்தும் இது அவர்களுக்குப் புரியாமல் இருப்பது விந்தைதான்.

நன்றி - சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.