Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய ஊடகங்களுக்கு சிறீலங்கா ஜனாதிபதி வழங்கிய பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஊடகங்களுக்கு ஜனாதிபதி வழங்கிய பேட்டி

[05 - September - 2007]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சில இந்திய ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்கியிருக்கின்றார். அவரது சகோதரர்களான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவும் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவும் புதுடில்லியில் இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்திக்கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதியின் பேட்டிகள் பிரசுரமாகியிருக்கின்றன. இன நெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரங்களில் இந்தியாவிடமிருந்து தான் எதிர்பார்ப்பவை பற்றியும் அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளைப் பொறுத்தவரை தனது சிந்தனைகளின் எல்லை வரையறைகளைப் பற்றியும் ஜனாதிபதி ராஜபக்ஷ விளக்கமளித்திப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. `நியூஸ் போஸ்ற் இந்தியா' என்ற பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி நேற்றைய தினம் அரசாங்கப் பத்திரிகையான டெயிலி நியூஸில் முழுமையாக மீள்பிரசுரம் செய்யப்பட்டிருந்தது. முதல் பக்கத்தில் பிரதான தலைப்புச் செய்தியாக வெளியான அப்பேட்டியில் அதை அளித்தவர் ஜனாதிபதி என்பதைக் குறிப்பிடும் பகுதிகளை மறைத்துவிட்டு எவராவது ஒருவரை வாசிக்கச் சொன்னால், இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வைப்பற்றி தெரிவிக்கப்பட்டிருக்கும் சில விடயங்களை வாசித்த பின்னர் அவர் பேட்டியை அளித்தவர் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) அல்லது ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்களில் ஒருவராக இருக்கக்கூடும் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

`எந்தவொரு சமாதான இணக்கத் தீர்வு முயற்சியிலும் சிங்கள வாக்காளர்களை எனக்கு ஆதரவாக வைத்திருக்க வேண்டியிருக்கிறது. இணக்கத் தீர்வை ஒருதலைப்பட்சமாக என்னால் திணிக்கமுடியாது. அரசியல் செயன்முறையொன்றின் விளைபயனாக அது இருக்கவேண்டும். நீடித்து நிலைக்கக்கூடியதாகவும் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் அது இருக்கவேண்டும். எந்த விலை கொடுத்தேனும் சமாதானம் என்றுகூறும் எனது அரசியல் எதிராளிகளின் நிலைப்பாடு எனக்கு ஏற்புடையதேயல்ல. சமாதானத்தைக் காண்பதற்கு நான் தயார். ஆனால், அது கௌரவத்துடனும் தன்மானத்துடனும் கூடிய சமாதானமாக இருக்கவேண்டும். தமிழர்களுக்கு உண்மையான குறைபாடுகள் இருக்கின்றன. இனநெருக்கடிக்குக் காணப்படக்கூடிய எந்தத் தீர்வுமே ஒற்றையாட்சி வரையறைக்குள்ளானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால்தான் சிங்கள பெரும்பான்மையினரின் ஆதரவைப்பெறமுடியும். சிங்களவர்கள் சமஷ்டி என்பதை ஒரு பழிச்சொல்லாக - சாபக்கேடாக கருதுகிறார்கள். சமஷ்டி இலங்கையில் ஒரு எதிர்மறையான சொற்பதமாகும். ஏனென்றால் அதை நாட்டுப் பிரிவினைக்கு ஒத்திசைவானதாக மக்கள் நினைக்கிறார்கள். அத்துடன் நானும் அதிகாரப் பரவலாக்கலை விட அதிகாரப் பகிர்வையே விரும்புகின்றேன்' என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

`தீர்வு முயற்சிஎன்பது உடனடியாக கோப்பி தயாரிப்பதைப் போன்ற விடயமல்ல. இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களில் காணப்படும் மந்தகதியின் காரணமாக மேற்குலக அரசாங்கங்கள் அதிருப்தியுற்றால், அந்த அதிருப்தி பயங்கரவாத இலட்சியத்துக்கான ஆதரவாக வியாக்கியானப்படுத்தப்படும். இந்தத் தவறை மேற்குலகம் செய்தலாகாது. இரவோடிரவாக சரித்திரத்தையோ அல்லது எனது சொந்த அரசியல் சூழ்நிலையையோ என்னால் மாற்றிவிடமுடியாது. எனது அரசியல் மரபையும் எனக்கு இருக்கக்கூடிய நிர்ப்பந்த நிலைகளையும் நீங்கள் நினைத்துப்பார்க்கவேண்டும். ஜனாதிபதித் தேர்தலின்போது விடுதலைப்புலிகளின் பலவந்தத்தினால் இடம்பெற்ற பகிஷ்கரிப்பு காரணமாக சொற்ப தமிழ் வாக்குகளே எனக்குக் கிடைத்தன. ஒற்றையாட்சி அடிப்படையில் மாத்திரமே இறுதித்தீர்வு காணப்படமுடியுமென்பதை தெளிவாகக் கூறிய தேர்தல் விஞ்ஞாபனத்தின் மீது சிங்கள மக்களினாலேயே நான் பிரதானமாகத் தெரிவுசெய்யப்பட்டேன்' என்றும் அவர் பேட்டியில் மேலும் தெரிவித்திருக்கிறார். தன்னால் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டின் செயற்பாடுகளில் காணப்படுகின்ற தாமதத்தினால் சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குலக நாடுகள் அதிருப்தியுற்றிருப்பதை ஜனாதிபதி தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார் போலும்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரிலேயே ஜனாதிபதியின் விசேட தூதுவர்களாக அவரின் இருசகோதரர்களும் புதுடில்லிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் புதுடில்லியில் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்த வேளையில் இன நெருக்கடி தொடர்பிலான தமது சிந்தனைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விளக்கிக் கூறும் இந்த பேட்டிகள் வெளியானமையை தற்செயலான ஒன்றாக கருதுவதற்கில்லை. வெளியுலகம் நினைப்பதைப் போல இன நெருக்கடி விவகாரத்தில் தன்னால் செயற்பட முடியாது என்பதை தெரிவிப்பதற்கு இந்தப் பேட்டிகளை ஜனாதிபதி நன்கு பயன்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அத்துடன் இந்தியாவிடமிருந்து தன்னால் எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறும் விடயங்களும் ஒன்றும் புதியவையல்ல. இலங்கை நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளில் இந்தியா கூடுதலான அளவுக்கு பெரிய பங்கையாற்ற வேண்டுமென்று அவர் விடுத்திருக்கும் வேண்டுகோள் வழமைபோன்று மிகவும் மேலோட்டமான தேயாகும்.தற்போது தனது அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு குந்தகமாக எதையுமே இந்தியா செய்யக் கூடாது என்பதில் ஜனாதிபதி கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என்பதை பேட்டியின் மூலம் உணரமுடிகிறது.

அரசியல் தீர்வொன்றைக் காணும் விடயத்தில் தன்னால் அவசரப்பட முடியாது என்பதே ஜனாதிபதியின் கூற்றுகளின் மூலம் உள்ளார்ந்தமாக உணர்த்தப்படுகின்றது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இலங்கை அரசின் கட்டமைப்பு (சமஷ்டி,ஒற்றையாட்சி), அதிகாரப்பரவலாக்கலுக்கான அலகு,கூடுதல் பட்ச அதிகாரப் பரவலாக்கல் என்ற சொற் பதங்களை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சைகளினால் சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவின் செயற்பாடுகளில் ஏற்படுத்தப்பட்ட குளறுபடிக்குப் பிறகு தீர்வுக்கான வரையறைகளை பகிரங்கமாக பிரகடனம் செய்வதன் மூலமாக ஜனாதிபதி தீர்வு முயற்சிகளில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்பட முடியாத வகையில் தகாத செல்வாக்கைப் பிரயோகிக்க நாட்டம் கொண்டிருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. கருத்தொருமிப்பை காணுமாறு சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவ குழுவிடம் கேட்டு விட்டு நிபந்தனைகளை முன்வைப்பது வரையறைகளை தெரிவிப்பதானால் அந்தக் கருத்தொருமிப்பு முயற்சியின் அர்த்தம் என்ன ? சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே பிரதானமாக தான் தெரிவு செய்யப்பட்டதாகவும் எந்தவொரு தீர்வு முயற்சியிலும் சிங்கள வாக்காளர்களின் ஆதரவைத் தன்பக்கம் வைத்திருக்க வேண்டிய தேவையிருக்கிறது என்றும் பகிரங்கமாகப் பிரகடனம் செய்வதற்கு ஜனாதிபதி தயங்கவில்லை. இவ்வாறு தெரிவிப்பது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியென்ற பதவிக்கு எந்தவகையில் பொருத்தமானதாகும் என்பதை அவரிடம் கேட்கவிரும்புகிறோம். சிங்களப் பெருபான்மையினருக்கு சமஷ்டிஎன்பது பழிச் சொல்லாகத் தெரிகிறது என்றால் அதுவே, சரியானதென்று அர்த்தமாகிவிடப் போவதில்லை. சிங்கள மக்களுக்கு தவறான அரசியல் சிந்தனைகள் காலங்காலமாக ஊட்டப்பட்டதன் விளைவாகத்தான் இன்று இன நெருக்கடிக்கு தீர்வு காண முடியாமல் இருக்கிறது. மக்களின் தவறான சிந்தனைகளின் பின்னால் இழுபட்டுச் செல்வதற்கு அல்ல, தவறான பாதையிலிருந்து அவர்களை மீட்பதற்கு தான் தலைவர்கள் தேவை!

நன்றி - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.