Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிசிறந்த கோலுக்கான FIFA புஸ்காஸ் விருதை வென்ற மாற்றுத்திறனாளியான ஒலெக்ஸி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிசிறந்த கோலுக்கான FIFA புஸ்காஸ் விருதை வென்ற மாற்றுத்திறனாளியான ஒலெக்ஸி

Published By: VISHNU

28 FEB, 2023 | 05:20 PM
image

(நெவில் அன்தனி)

அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட விருதுகள் விழாவில் முதல் தடவையாக மாற்றுத்திறனாளியான மாசின் ஒலெக்சி அதிசிறந்த கோலுக்கான FIFA புஸ்காஸ் விருதை வென்று வரலாறு படைத்துள்ளார்.

marcin_oleksy_amputee_poland.jpg

பிரான்ஸில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற 'அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட விருதுகள் 2022' விழாவில் உலகத் தரம்வாய்ந்த கால்பந்தாட்ட நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒற்றைக் கால் வீரரான மாசின் ஒலெக்சி இந்த விருதை வென்று முழு உலகினதும் பாராட்டைப் பெற்றுக்கொண்டார்.

கால்பந்தாட்ட விற்பன்னர்களான லியனல் மெஸி, கிலியான் எம்பாப்பே, ரொபர்ட் லெவண்டோவ்ஸ்கி உட்பட உலகின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனைகள், பயிற்றுநர்கள் ஆகியோருக்கு மத்தியில் அதி சிறந்த கோலுக்குரிய புஸ்காஸ் விருதுக்கு மாசின் ஒலெக்சியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது அவர் மகிழ்ச்சி மிகுதியில் கூக்குரலிட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.

ampute_oleksy_wins_puskas_award...png

மாற்றுத்திறனாளிகளுக்கான போலந்து லீக்  கால்பந்தாட்டத்தில் ஸ்டோல் ரிசோவ் கழகத்துக்கு எதிராக 2022 நவம்பர் 6ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் ஊன்றுகோலை நிலத்தில் ஊன்றி கரணம் அடித்தவாறு பெனல்டி எல்லையிலிருந்து அவர் போட்ட கோலே வருடத்தின் அதிசிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருதுக்குரிய கோலாக தெரிவுசெய்யப்பட்டது.

'எனது சக வீரர் நோவாக் டாவிட் மத்திய களத்திலிருந்து பந்தை எனக்கு பரிமானார். அவர் பந்தை நோக்கி சென்ற போது அவரிடமிருந்து பந்து என்னை நோக்கி வரும் என அறிந்திருந்தேன். டாவிட் உயர்வாக பரிமாறிய பந்தை நோக்கி கரணமடித்தவாறு வலது காலால் பந்தை உதைத்து கோலாக்கினேன். என்றாவது ஒருநாள் அற்புதமான கோல் ஒன்றைப் புகுத்த வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த கோலைப் புகுத்திய பின்னர் நான் எவ்வளவு பெருமை அடைந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் உயர்ந்து நின்றேன். நெஞ்சை நிமிர்த்தியவாறு நான் பரவசம் அடைந்தேன்' என அந்த கோல் பற்றி விளக்கினார் மாசின் ஒலெக்சி.

சோகக் கதை

'நான வாழ்வதா சாவதா என எண்ணியதால் நான் பீதி அடைந்தேன்' என வீதி விபத்தினால் இடது காலை இழந்த ஒலெக்சி தனது சோகக் கதையை கூறியிருந்தார்.

கட்டுமானத் தொழிலாளியான ஒலெக்சி (தற்போது 35 வயது) 12 வருடங்களுக்கு முன்னர் விபத்தில் சக்கி தனது காலை இழந்தார். அப்போது 23 வயதாக இருந்த ஒலெக்சி, வீதியில் ஏற்பட்டிருந்த ஒரு பெரிய குழியை மூடுவதில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி அவர் மீது மோதியது. அவரது கால்கள் மீது வாகனம் ஏறியதால் அவர் படு காயமடைந்தார்.

இது விபத்து தொடர்பாக இந்த வருட முற்பகுதியில் FIFAவுடன் பேசிய ஒலெக்சி, 'நான் வாழ்வதா சாவதா என பீதி அடைந்தேன்' என குறிப்பிட்டிருந்தார்.

விபத்து நடந்ததை அடுத்து சுய நினைவிழப்பதும் மீள்வதுமாக இருந்த ஒலெக்சி உடனடியாக வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டது.

'சத்திர சிகிச்சை முடிந்த பின்னர் மயக்கத்திலிருந்து மீண்டு நான் கண் விழித்தபோது எனது ஒரு கால் துண்டிக்கப்பட்டிருப்பதை கண்டேன். அதனால் நான் கவலை அடையவில்லை. ஏனெனில் விபத்தினால் எனது கால்கள் செதமடைந்திருந்ததை நான் பார்த்தேன்' என்றார்.

சக்கர இருக்கையில் வீடு திரும்பியபோது அங்கு அவரது மனைவி ஈவ்எலினா கர்ப்பவதியாக இருந்தார்.

'அவர் கர்ப்பவதியாக இருந்ததால் என்னை இன்னுமொரு குழந்தையாக நான் உணர்ந்தேன். அவர் தியாக சிந்தையுடன் என்னை பராமரித்ததன் பலனாக இன்று நான் வழமை நிலைக்கு திரும்பியுள்ளேன்' என்றார்.

விபத்துக்கு முன்னர் ஒலெஸ்கி ஒரு கோல்காப்பாளராக விளையாடிவந்தார்.

'அதன் பின்னர் எனது மகனுடன்தான் நான் முதல் தடவையாக பந்து ஒன்றை உதைத்தேன். அப்போது நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். எனது வாழ்க்கையில் அதுவே திருப்புமுனையாகவும் அமைந்தது. அதன் பின்னர் நான் பயிற்சியில் ஈடுபட்டு ஊன்றுகோலுடனான கால்பந்தாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். இன்று அதற்கான பிரதிபலன் கிடைத்துள்ளது' என ஒலெக்சி குறிப்பிட்டார்.

புஸ்காஸ் விருதுக்காக வாக்களிப்பு ஆரம்பமானபோது ஒலெக்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அதிசிறந்த வீரருக்கான பீபா விருதை இரண்டு தடவைகள் வென்ற போலந்து வீரர் ரொபர்ட் லெவண்டோவ்ஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

'விபத்துக்கு பின்னர் எனது வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட திசையில் சென்றிருக்கலாம். அது மிக மோசமாக போயிருக்கக்கூடும். ஆனால். நான் அதன் பின்னர் பலசாலி ஆனேன். எந்த பிரச்சினையையும் என்னால் சமாளிக்க முடியும் என அறிந்திருந்தேன். அது எனக்கு ஒரு படிப்பினையாக இருந்தது. அதிலிருந்து நான் மீண்டுள்ளேன். அது முட்டாள்தனமாக இருக்கக்கூடும். ஆனால், ஒரு கால் இல்லாவிட்டாலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அத்துடன் எனது வாழ்க்கையிலும் நான் சந்தோஷமாக இருக்கிறேன்' என்றார்.

2022ஆம் ஆண்டுக்கான புஸ்காஸ் விருதுக்கு சிறந்த 11 கோல்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒலெக்ஸின் கோலுக்கு அதிகப்படியான   வாக்குகள் கிடைத்ததை அடுத்து அவருக்கு அதி சிறந்த கோலுக்கான FIFA புஸ்காஸ் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுக்கு கால்பந்தாட்ட இரசிகர்களும் கால்பந்தாட்ட நிபுணர்களும் வாக்களித்திருந்தனர்.

https://www.virakesari.lk/article/149388

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.