Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையும் லீ குவான் யூவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையும் லீ குவான் யூவும்

[06 - September - 2007]

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அண்மையில் `இன்டர்நஷனல் ஹெரால்ட் ரிபியூன்' சஞ்சிகைக்கு பேட்டியொன்றை அளித்திருந்தார். அதன் சாராம்சத்தை இலங்கையின் சில ஆங்கிலப் பத்திரிகைகள் பிரசுரம் செய்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சிங்கப்பூரை விட முன்கூட்டியே பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்ற இலங்கை உட்பட சில நாடுகளின் தவறுகளில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டதன் விளைவாகத்தான் தனது நாட்டைச் சரியான கொள்கையின் கீழ் வழி நடத்தி பொருளாதார சுபிட்சமிகு வெற்றிகரமான ஒரு அரசாக உலகில் மிளிரவைக்க முடிந்தது என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கூற்று இலங்கையர்களுக்கு உறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் பேட்டியின் சாராம்சத்தை இந்த ஆங்கிலப் பத்திரிகைகள் பிரசுரம் செய்திருக்க வேண்டுமென்று நாம் நினைக்கிறோம்.

மலாயா சம்மேளனத்தின் ஒரு அங்கமாக இருந்த சிங்கப்பூர் பிரிட்டனிடமிருந்து அரைகுறையாகச் சுதந்திரத்தைப் பெற்ற 1959 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு அதிகாரத்திலிருந்து இறங்கும்வரை பிரதமராக பதவி வகித்த லீ குவான் யூ கடைப்பிடித்த கொள்கைகளே சிங்கப்பூரின் இன்றைய செழிப்பான நிலைக்குக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. பிரதமர் பதவியிலிருந்து இறங்கிய பின்னரும்கூட, லீ குவான் யூ தொடர்ந்தும் அமைச்சரவையில் ஆலோசகர் அந்தஸ்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். `இன்டர்நஷனல் ஹெரால்ட் ரிபியூனு'க்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த முக்கியமான கருத்துகளை ஒரு கணம் நோக்குவோம்.

`மலாயா சம்மேளனத்தில் இருந்து 1965 ஆம் ஆண்டு சிங்கப்பூர் வெளியேறியபோது எமக்கு அயலில் குரோத உணர்வு கொண்ட நாடு ஒன்று தான் இருந்தது. எமது சனத்தொகை சீனர்களையும் மலாயர்களையும் இந்திய உபகண்டத்திலிருந்து வந்த குடியேற்றவாசிகளையும் கொண்டதாக இருந்தது. ஒரு தேச அரசுக்கான (Nation) அடிப்படை அங்கு இருக்கவில்லை. ஆனால், காலந்தாழ்த்தி நாம் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டமை எமக்கு ஒரு அனுகூலமாக அமைந்தது. 20 வருட கால தோல்விகண்ட அரசுகளின் (Failed States) உதாரணங்கள் எம்முன்னால் இருந்தன. எனவே, எவற்றைத் தவிர்க்கவேண்டும் என்பதை நாம் தெரிந்துகொண்டோம். இன மோதல்கள், மொழிச் சர்ச்சை, மத ரீதியான பிணக்குகளை நாம் தவிர்த்தோம். இலங்கையில் நடந்தவற்றை நாம் கண்டோம். இலங்கையினதும் புதிதாக சுதந்திரமடைந்த தோல்வி கண்ட அரசுகளினதும் தவறுகள் சிங்கப்பூரை வித்தியாசமான மார்க்கத்தில் பயணம் செய்ய வைத்தன' என்று லீ குவான் யூ கூறியிருக்கிறார்.

`சிங்கப்பூரில் வாழுகின்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் சீனர்களாக இருக்கின்றபோதிலும், எமது செயல்நிலை (Working Language) மொழியாக நாம் ஆங்கிலத்தையே தெரிவுசெய்தோம். மொழிவிடயத்தில் மிகவும் ஆழமாக ஆராய்ந்து தீர்மானத்தை நாம் மேற்கொண்டோம். அந்த நேரத்தில் எமது நாட்டில் தனித்தனியான சீன, மலே, இந்திய பாடசாலைகள் இருந்தன. பிரிட்டிஷ்காரர்களும் எழுதுவினைஞர்களையும் களஞ்சியப் பொறுப்பாளர்களையும் ஆசிரியர்களையும் தோற்றுவிப்பதற்காக ஆங்கிலப் பாடசாலைகளை அமைத்திருந்தனர். பெரும்பான்மையினர் பேசுகின்ற சீனமொழியை நாம் தெரிந்தெடுத்திருந்தால், அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அழிந்துபோயிருப்போம். இலங்கையர்கள் ஆங்கிலத்திலிருந்து சிங்களத்துக்கு மாறியபோது - தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தபோது அந்நாட்டில் கலவரங்கள் மூண்டதை நாம் கண்டோம். ஆங்கிலத்தை நாம் தெரிவு செய்தோம். ஆனால் அதை எமது தேசிய மொழியென்று சொல்லவில்லை. அது எமது செயல் நிலைமொழி. எந்த மொழி மூலப் பாடசாலைக்கு ஒருவர் சென்றாலும் அவர் ஆங்கிலத்தைப் படிக்கிறார். ஆங்கிலத்தை படிப்பதற்கு எவருக்குமே வியாக்கியானம் தேவையில்லை' என்றும் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையை ஒரு தோல்வி கண்ட அரசு என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரசியல் அவதானிகள் விமர்சிக்கும் போது எமது இன்றைய ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் நேச அணிகளுக்கும் கடுமையான ஆத்திரம் வருகிறது. லீ குவான் யூ இலங்கையை 42 வருடங்களுக்கு முன்னரேயே தோல்விகண்ட அரசு என்று விமர்சித்திருக்கிறார் என்பதை இந்த ஆத்திரக்காரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமது இனநெருக்கடி முதலில் மொழிப்பிரச்சினையாகவே ஆரம்பித்தது. இன்று அது உள்நாட்டுப் போராக கால்நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாகத் தொடருகின்ற போதிலும் கூட, இலங்கையின் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் தவறுகளை உணர்ந்து கொள்ளவோ அல்லது சரித்திரத்திலிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளவோ தயாரில்லாமல் இருக்கும் விபரீதத்தை காண்கின்றோம்.

இனவாத அரசியல் இலங்கையைப் பாழ்படுத்தியிருப்பதை 4 தசாப்தங்களுக்கு முன்னரேயே உணர்ந்துகொண்ட லீ குவான் யூ வின் தலைமையிலான சிங்கப்பூர் தான் தென்கிழக்காசிய நாடுகள் 1967 ஆம் ஆண்டு `ஆசியான்' அமைப்பை தோற்றுவித்தபோது அதில் இலங்கை இணைவதை எதிர்த்தது என்பதும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என்பதே இந்த எதிர்ப்புக்கு சிங்கப்பூர் முன்வைத்த காரணமாகும். சிங்கப்பூர் ஆங்கிலத்தை செயல்நிலை மொழியாக தெரிவுசெய்ததைப்போன்று இலங்கையும் செய்திருந்தால் எத்தகைய விளை பயன்கள் தோன்றியிருக்கும் என்பதைப் பற்றி பல்வேறுபட்ட வியாக்கியானங்களும் விமர்சன ங்களும் இருக்கக்கூடும். ஆனால், மொழிவிவகாரம் முற்றிலும் தவறான முறையில் கையாளப்பட்டதனால் தான் இனநெருக்கடி தோன்றியது என்பதில் கருத்துவேறுபாடு இருக்க முடியாது.

இலங்கை உட்பட தோல்வி கண்ட அரசுகளின் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடமே சிங்கப்பூரை இன,மொழி,மதப் பூசல்கள் இல்லாத நாடாக வழிநடத்துவதற்கு தனக்கு உதவியது என்று (அதிகாரத்திலிருந்து இறங்கி 17 வருடங்கள் கடந்த பின்னரும் கூட) லீ குவான் யூ உலகிற்கு கூறுவதிலிருந்து பாடம் எதையாவது தென்னிலங்கை சிங்கள அரசியல் வாதிகள் இப்போதாவது கற்றுக் கொள்வார்களா? இலங்கையை சிங்கப்பூராக்குவோம் என்று 30 வருடங்களுக்கு முன்னர் இந்தநாட்டை ஆட்சி செய்தவர்கள் கூறியதையாவது இவர்கள் குறைந்தபட்சம் நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. தோல்விகண்ட அரசு என்று இலங்கையை லீ குவான் யூ 42 வருடங்களுக்கு முன்னர் வர்ணித்திருந்தார் என்றால், இன்றைய இலங்கையை வர்ணிக்க வேறு ஏதாவது புதிய பதத்தையே கண்டுபிடிக்கவேண்டும்.

நன்றி - தினக்குரல்

மலாயா சம்மேளனத்தில் இருந்து 1965 ஆம் ஆண்டு சிங்கப்பூர் வெளியேறியபோது ....

உண்மையில் சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக.

சீனர்களின் எண்ணிக்கை கூடும் பட்சத்தில்

மலெசியரின் விகிதாசராம் குறைந்துவிடும் என்று அன்றைய மலேசியப் பிரதம்ர் "அப்துல் ரகுமான்"னின் சாணக்கியம்

Edited by அ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.