Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச கால்பந்தில் மீண்டும் முத்திரை பதிக்கும் ரொனால்டோ - யூரோ தகுதிச்சுற்றில் சாதனைமேல் சாதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கால்பந்தில் மீண்டும் முத்திரை பதிக்கும் ரொனால்டோ - யூரோ தகுதிச்சுற்றில் சாதனைமேல் சாதனை

ரொனால்டோ சாதனை மேல் சாதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

யூரோ 2024 தகுதிச் சுற்றில் லக்சம்பர்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்களை அடித்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கால்பந்து உலகிற்கு தனது மீள் வருகையை அவர் மீண்டும் அழுத்தமாக உரைத்துள்ளார்.

கத்தாரில் அண்மையில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரொனால்டோவுக்கு மிகுந்த ஏமாற்றம் தருவதாக அமைந்துவிட்டது. ரொனால்டோ தலைமை தாங்கிச் சென்ற போர்ச்சுகல் அணி காலிறுதியுடன் வெளியேறியதுடன், அந்த அணி விளையாடிய கடைசி இரு நாக் அவுட் போட்டிகளிலுமே தொடக்கத்தில் அவர் களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

சௌதி புரோ லீக் மூலம் புதிய அவதாரம்

35 வயதை எட்டிவிட்டதால் ரொனால்டோவின் சர்வதேச கால்பந்து வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாகவே பலராலும் கணிக்கப்பட்டது. ஆனால், மான்செஸ்டர் அணியுடனான உறவு கசந்து, சௌதி புரோ லீக் தொடருக்கு மாறிய ரொனால்டோ அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர தவறவில்லை.

அதேநேரத்தில், உலகக்கோப்பையில் மோசமான தோல்வியைச் சந்தித்த போர்ச்சுகல் அணியிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. பயிற்சியாளர் பொறுப்பில் பெர்னாண்டோ சான்டோசுக்குப் பதிலாக ரொபர்டோ மார்டினெஸ் அமர்த்தப்பட்டார். புதிய பயிற்சியாளரின் நம்பிக்கையைப் பெற்ற ரொனால்டோ கணிப்புகளைப் பொய்யாக்கி போர்ச்சுகல் தேசிய அணியிலும் இடம் பிடித்தார்.

 

யூரோ தகுதிச்சுற்றில் தொடர்ந்து அசத்தல்

உலகக்கோப்பைக்குப் பிறகு போர்ச்சுகல் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் யூரோ 2024 தகுதிச்சுற்றில் அவர் அசத்தி வருகிறார். லிச்டென்ஸ்டெய்ன் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 2 கோல்களை அடித்து அசத்திய ரொனல்டோ, லக்சம்பர்க் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்திலேயே லக்சம்பர்க் அணியின் தடுப்பரணை உடைத்து முதல் கோலை அடித்து போர்ச்சுகல் அணிக்கு அவர் முன்னிலை பெற்றுத் தந்தார்.

ரொனால்டோ சாதனைமேல் சாதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

யூரோ தகுதிச்சுற்றில் போர்ச்சுகல் முதலிடம்

போர்ச்சுகல் அணியின் ஜோவா ஃபெலிக்ஸ் 15-வது நிமிடத்திலும், பெர்னார்டோ சில்வா 18-வது நிமிடத்திலும் கோல் அடித்து தங்களது அணிக்கு வலுவான முன்னிலை பெற்றுத் தந்தனர். நட்சத்திர வீரர் ரொனால்டோ 31-வது பாதியில் மீண்டும் ஒரு கோல் அடித்து தான் வலுவாக திரும்பி வந்திருப்பதை கால்பந்து உலகிற்கு பறைசாற்றினார்.

முதல் பாதியில் போர்ச்சுகல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் மாற்று ஆட்டக்காரர்களாக வந்த ரஃபேல் லிவோ, நெவெஸ் ஆகியோர் கோலடிக்க, முடிவில் போர்ச்சுகல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் லக்சம்பர்க் அணியைப் பந்தாடியது.

யூரோ 2024 தகுதிச் சுற்றில் 'J' பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் அணி இதுவரை தான் ஆடிய 2 போட்டிகளிலும் ஒரு கோல் கூட வாங்காமல் வெற்றி பெற்று முதலிடத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது. புதிய பயிற்சியாளர் ரொபர்டோ மார்டினெஸின் அணுகுமுறை சிறப்பான பலனை அளித்திருப்பதாக போர்ச்சுகல் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ரொனால்டோ சாதனை மேல் சாதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேச கால்பந்தில் சாதனைமேல் சாதனை

யூரோ 2024 தகுதிச்சுற்றில் ரொனால்டோ தொடர்ந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். லிச்டென்ஸ்டெய்ன், லக்சம்பர்க் ஆகிய அணிகளுக்கு எதிராக ஆடிய முதலிரு போட்டிகளிலுமே தலா 2 கோல்கள் அடித்து தனது திறமையையும், சிறப்பான பார்மையும் அவர் நிரூபித்துள்ளார்.

போர்ச்சுகல் அணிக்காக யூரோ சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றில் அதிக கோல் அடித்தவரான ரொனால்டோ, தனது சாதனை கோல் கணக்கை 35-ஆக உயர்த்திக் கொண்டுள்ளார். 37 ஆட்டங்களில் விளையாடியதன் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

யூரோ தகுதிச்சுற்றுக்கு முன்பாகவே, சர்வதேச கால்பந்திலும் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை தம் வசம் வைத்திருந்த ரொனல்டோ 196 போட்டிகளில் 122 கோல்களை அடித்து, சாதனை சிகரத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cmm8zmv0m43o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

197 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

Published By: DIGITAL DESK 5

28 MAR, 2023 | 05:28 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் தனது 197ஆவது போட்டியில் விளையாடியதன் மூலம் கிறிஸ்டியானோ ரோனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார்.

லீச்டென்ஸ்டீன் அணிக்கு எதிராக நடைபெற்ற 2024 ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியதன் மூலம் அவர் இந்த சாதனையை நிலைநாட்டினார்.

மேலும், போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பெறும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆற்றல் மங்கிவிடவில்லை என்பதை இந்த வருடம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் நிரூபீத்துள்ளார்.

பெரும் ஏமாற்றத்தைத் தோற்றுவித்த கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் பின்னர் போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பெற்ற ரொனால்டோ, தனது முதல் இரண்டு போட்டிகளில் தலா 2 கோல்களைப் போட்டு அசத்தினார்.

உலகக் கிண்ணப் போட்டிக்கு பின்னர் சவூதி அரேபிய கால்பந்தாட்ட கழகம் ஒன்றில் இணைந்த ரொனால்டோ, 2024 ஐரோப்பிய சம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டியில் அசத்தி வருவதுடன் சர்வதேச கால்பந்தாட்டத் தரம் தன்னிடம் தொடர்ந்தும் இருக்கின்றது  என்பதை  நிரூபித்துள்ளார்.

லக்ஸம்பேர்க் அணிக்கு எதிரான போட்டியில் போர்த்துக்கல் ஈட்டிய 6 - 0 என்ற வெற்றியில் ரொனால்டோ 2 கோல்களைப் போட்டதுடன், லீச்டென்ஸ்டீன் அணியுடனான போட்டியில் ஈட்டிய 4 - 0 என்ற வெற்றியிலும் அவர் 2 கோல்களைப் போட்டிருந்தார்.

லீச்டென்ஸ்டீன் அணியுடனான போட்டியானது சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய சாதனைமிகு 197ஆவது சர்வதேச போட்டியாகும்.

இதன் மூலம் அதிகளவிலான சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மகிழ்ச்சி தருகிறது என போர்த்துக்கல் அணித் தலைவர் ரொனால்டோ தனது சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார்.

'எமது தேசிய அணி சாதகமான பெறுபெறுகளை ஈட்டியமை மகிழ்ச்சி தருகிறது. இங்கிருந்து முன்னோக்கி நகர்வோம்' என சமூக ஊடகத்தில் கூறியிருந்தார்.

கத்தாரில் கடந்த வருடம் நடைபெற்ற  மொரோக்கோவுக்கு எதிரான  உலகக் கிண்ண  கால் இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் தோல்வி அடைந்து வெளியேறியபோது ரொனால்டோ கண்ணீர் சிந்தியவாற அரங்கிலிருந்து வெளியேறியிருந்தார்.

அதன் பின்னர் இந்த வருடம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் போர்த்துக்கல் வெற்றிபெற்றது ரொனால்டோவுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்துள்ளது.

பெரும் ஏமாற்றத்தைத் தந்த உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் தேசிய அணியில் விளையாடக் கிடைக்குமா என்ற சந்தேகத்திற்கு மத்தியில் சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் பெருந்தொகை பணத்திற்கு ரொனால்டோ ஒப்பந்தமாகியிருந்தார்.

எனினும் போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பிடித்த ரொனால்டோ 2 போட்டிகளில் 4 கோல்களைப் போட்டு தனது திறமை மங்கவில்லை என்பதை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளார்.

604360-01-02.jpg

601444-01-02.jpg

https://www.virakesari.lk/article/151629

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.